குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, March 20, 2022

யோகமாணவர்களின் பண்புகள்

 யோகம் பயிலும் மாணவர்களை நான்கு நிலைகளில் வகைப்படுத்தலாம்

1) ஆரம்ப சாதகர்கள்

2) மத்ய நிலை சாதகர்கள்

3) அதிமத்ய நிலை சாதகர்கள்

4) இறுதி நிலை சாதகர்கள்


இங்கு முதல் இரண்டு நிலை சாதகர்களின் குறிகுணங்கள் இங்கே தந்துள்ளோம். ஒவ்வொரு சாதகர்களும் சுய பரீட்சை செய்துகொள்ள வேண்டுகிறோம். 


ஆரம்ப சாதகனின் குறிகள்:


1) மந்தஉத்ஸாகம் - ஆர்வம் குறைவு

2) புத்திசூன்யம் - புரிந்துகொள்வதற்கான அறிவு குறைவு

3) ரோககிரஷ்டா  - ரோகங்கள் உடையவனாக இருத்தல்

4) குருதூஷகா - குருவின் வார்த்தைகளில் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டிருப்பவன்

5) லொவி - பேராசை கொண்டிருத்தல்

6) பாபகார்யேலிப்த - பாபகாரியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது

7) பகுபோஜனசில் - அதிக உணவருந்துதல்

8) ரமன்ப்ரிய - பெண்கள் மீது மையல் கொண்டிருப்பது

9) சஞ்சலம் - பதட்டம் சஞ்சலத்துடன் இருப்பது. 

10) பரிஸ்ரமகதர் - சோம்பேறித்தனம்

11) ருக்னதேகம் - பலவீனமான உடல்

12) பராதின் - வேறொருவரில் தங்கியிருப்பவன்

13) அனிந்திரியம் - புலன் கள் மேல் கட்டுபாடு அற்றவன்

14) குஷித்வீர்ய - வக்கிரமான, நெறிதவறிய செயல்களும் எண்ணங்களும் உடையவன்


இந்த 14 குறிகளில் எவை இருப்பினும் அவர்கள் ஆரம்ப சாதகர்களாக கொள்ளப்பட வேண்டும். இவர்கள் தொடர்ச்சியான மந்திர சாதனையின் மூலம் மன, சித்த சுத்திகளை அடைந்து சாதனையில் முன்னேற வேண்டும். 


இப்படி முன்னேறிய சாதகனை கீழ்வரும் குறிகள் கொண்டிருப்பான்

1) சமபுத்தி - குரு சொல்லுவதை சரியாக புரிந்து செய்யும் தன்மை (ஸமபுத்தி)

2) மற்றவர்கள்  செய்யும் தவறுகளை, துன்பங்களை எளிதில் மறந்து விட்டு தனது கடமைகளில் முன்னேறிச் செல்லும் பண்பு (க்ஷமாபான)

3) நல்ல காரியங்களை உற் சாகத்துடன் செய்பவன் 

4) இனிமையாக பேசும் தன்மை உடையவன்

5) தான் செய்யும் காரியங்களின் பலனை எதிர்பார்க்காமல் மகிழ்ச்சியுடன் காரியங்களை ஆற்றக்கூடியவன்.


இவர்களே உயர் யோகங்களான கும்பகப் பிரணாயாமம், பிரத்தியாகாரம் என்பவற்றிற்கு தகுதியானவர்கள். 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...