குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, June 08, 2017

வைகாசிப்பௌர்ணமியும் ரிஷிகளின் மண்ணுலகப் பரிணாமமும்



மண்ணுலகப் பரிணாமம்
மண்ணுலகப் பரிணாமத்தை நடாத்த, ஆண்டுக்கொருமுறை எல்லா கேந்திரங்களிலும் உள்ள மகரிஷிகள் சம்பளத்தில் கூடுகிறார்கள். அதில் பிரபஞ்ச நியதிக்கு ஏற்ற விதத்தில் எங்கு ஆக்குவது, எங்கு அழிப்பது என்ற முடிவுகளை ஏற்படுத்துகிறார்கள். அந்த தினம்தான் வைகாசிப் பௌர்ணமி தினமாகும். இந்த கூட்டத்திற்கு தகுந்த ஆன்ம சாதனை புரிந்து பக்குவப்பட்டவர்கள் ஸதூலமாகவும், ஓரளவு பக்குவப்பட்டவர்கள் சூக்கும சரீரத்திலும் அழைத்து செல்லப்படுவர். 

மகரிஷிகள் அனைவரும் கூடும் அந்த சமயம் அவர்களின் கூட்டு காந்தமானது, மண்ணுலக வானப்பரப்பு முழுவது பரவுகின்றது. அதனை பயன்படுத்திக்கொள்ள அன்றைய தினம்  ஆன்மீக கூடங்களில் உள்ளவர்கள் எல்லாம் கூடித் தியான நிலையில் ஆழ்கின்றனர். அந்த காந்த சக்தி பரவும் மாதமாகிய வைகாசி மாதத்தில் உலகின் பல ஆன்மீக  மேதைகள் பிறந்திருக்கிறார்கள். புத்தர்,  வியாசகர், திருவள்ளுவர், கண்ணைய யோகியார் ஆகியோர் இந்த மாதத்தில் பிறந்தவர்களே. 

புராணங்களில் உள்ள உண்மை
மகரிஷிகளின் தலைமை அவ்வப்போது மாறும். கலியுகம் தொடங்கும் வரை தலைமை பொறுப்பினை ஏற்று நடாத்தியவர் வியாச முனிவர் ஆவார். கலியுக ஆரம்பத்தில் மைத்ரேயருக்கு இந்த தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. அகத்தியர், மைத்ரேயர், வசிட்டர், புலஸ்தியார் முதலியவர்கள் சப்தரிஷிகள் நிலையில் இருந்து, சிரஞ்சீவிகளாக உலகப் பரிணாமத்தை நடாத்தி வருகிறார்கள். இடையிடையே அவர்கள் வழி நின்று, கடுமையான சாதனையால் தமது உடல் பரிணாமத்தை கட்டுப்படுத்த கூடியளவு வெற்றியடைந்தவர்கள் பலரும், அவ்வப்போது மகரிஷிகள் ஆணையின் பெயரில் செயல்படுபவர்களாய் உலகின் பல கேந்திரங்களில் இருந்து பணியாற்றி வருகிறார்கள். சித்தியடைந்த சித்தர்கள் பலரும் இப்படியிருந்து வருகிறார்கள். சில சமயங்களில் சில குடும்பங்களில் பிறந்து மக்களை  நல்வழியில் திருப்பி விட்டு, பின்னர் மரணத்தினை ஏற்று உடலினை விட்டு விட்டு, தமது பழைய சூக்கும சரீரத்தை ஏற்று கொள்கிறார்கள்.

ஆன்ம வித்தையின் பயன்
-          அற்ப நாட்களில் முடியும், அற்ப நேரத்தில் முடியும் பௌதிக இன்பத்தினை உண்மை என நம்பி வாழ்பவர்களுக்கு,
-          கண்ணுக்கு தெரியும் மனிதனுக்குள், கண்ணுக்கு தெரியாத சூக்கும மனிதன் உண்டென்பதை உணர முடியாதவனுக்கு,
-          பௌதிக இயங்கங்கள் எல்லாம் தானாக நடைபெறுவது என்று கருதிக்கொண்டிருப்பவர்களுக்கு,
-          உண்பதும், உறங்குவதும். மக்களை பெறுவதையும் தவிர மனிதன் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என்று நம்பி வாழ்பவர்களுக்கு,
இதுவரை நாம் சொல்லி வந்த உண்மைகள் கட்டுக்கதைகளாகத்தான் தெரியும்.

ஆனால் இதை நம்பி பயன் கொள்ளும் ஆன்மீக சாதகர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நம்பாதவர்களை புத்தகங்களை கொண்டும், சொற்பொழிவுகளை கொண்டும் நம்ப வைத்துவிட முடியாது. இந்த உண்மைகள் மகரிஷிகள் மரபிற்கு மாறானவை. அதனால் இதனை அறியாதவர்களுக்கு இவற்றை மெய்பிக்க முடியாது. நாமும் இதை அறியக்கூடியளவு ஆன்ம வித்தையில் பண்பட்டவர்களுக்கு என்றே வெளியிடுகிறோம். அத்தகையவர்கள் எம்முடைய இந்த விளக்கத்தால் உள்ளத்தில் உறுதிபெற்று தமது சாதனையில் வேகமாய் முன்னேறி விரைவில் மாமுனிவர்களை நேருக்கு நேராக தரிசிக்கும் பேற்றைப் பெறுவார்களென நம்புகிறோம். 

இன்றைய தினம் இந்த பதிவினை படிக்க வாய்ப்பு கிடைக்கும் அன்பர்கள் தவறாமல் இரவோ, நாளை காலையோ விளக்கேற்றி சித்த வித்யா குரு மண்டல நாமாவளியும், ஸ்ரீ அகத்திய மூல குரு மந்திரமும் நூற்றியெட்டுதடவையும் ஜெபித்து அருள்பெற பிரார்த்திக்கவும். 

அகஸ்தியர் மூலகுரு மந்திரம்: 
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சிம் வம் அம் உம் மம் மகத்தான அகத்தீசாய நமஹ


1 comment:

  1. குருவே மிகவும் அருமையான பாடதிட்டம், பலன் அடைந்தேன், ,வாழ்கவளமுடன் பீஜ மந்திரங்களை பிராணனுடன் இணைக்கும் யுக்தியை அடைந்தேன், ஐயா நன்றிகள்

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...