குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 25, 2016

நூல் மதிப்புரை 02 - அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்






சித்த பாரம்பரிய மிக்க ஸ்ரீ ஷக்தி சுமணன் அவர்கள் எழுதிய 'அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்' ஆதார நூலுக்கான பொழிப்புரை, விரிவுரை, கருத்துரை கொண்ட தெளிந்த நூல் மருத்துவ கலாநிதி. விக்னவேணி அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்றது. 


முதலில் நூலின் வடிவமைப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். முப்பது பாடல் கொண்ட ஆதார நூலின் பாடலுக்கு ஒரு அத்தியாயம் அமைத்து முதலில் ஆதார பாடலை சொல்லி, பின்னர் அதன் பொருளைச் சொல்லி, விவரணம் கொடுத்து, அனுபவரீதியான விளக்கம் தந்து இறுதியில் நினைவிலிருத்த வேண்டியவைகளை வினாவாக அமைத்துள்ளது சிறப்பாக உள்ளது. நூலாசிரியர் தனக்கு புரிந்ததை மட்டும் தொகுத்து எழுதாமல் 'சங்க மரபு' போல் பிறருடன் கலந்துரையாடி அதில் பெற்ற தெளிவுடன் தன குரு, பிற அனுபவறிவு மிக்க சான்றோர் ஆகியோரின் கருத்தையும் பெற்று எழுதியுள்ளார். பெரும்பாலான சித்த மருத்துவம், மரபு சார்ந்த நூற்கள் அகத்தியர் பெயரிலேயே எழுதப்பட்டிருக்கின்றன. அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்' ஆதார நூலும் அது போலவே அமைந்திருக்கிறது. மொழி நடை பிற்க்காலத்தை சேர்ந்த எளிய நடையில் இருந்தாலும் அதில் உள்ள பொருளை சித்த மரபில் கற்றுணர்தவர்களாலேயே புரிந்து கொள்ள முடியும்.

பக்தி யோகம், ஞான யோகம், கர்ம யோகம், ஹத யோகம் என்னும் நான்கில் சித்த மரபு ஞான யோகமே. ஞான யோக பயிற்சி எளிதல்ல. குருமுகமாகவே கற்க வேண்டும், இறையருள் இருந்தாலே கற்க வாய்ப்பு கிட்டும். வாசி யோகம் என்னும் மூச்சு பயிற்சி சித்தர்களின் ஞான மார்கத்தில் முதன்மையானதும் எளிமையானதும் ஆகும். இருப்பினும் மூச்சை உள்வாங்கல், நிலைநிறுத்தல், சரியான அளவில் வெளிவிடல், இரு நாசிகள் மூலம் சுவாசிக்கும் பொழுது இருக்க வேண்டிய கால அளவு எல்லாராலும் எளிதில் கடைபிடிக்கப் படுவதில்லை 

குருவின் பயிற்சியின் மூலமும் கற்பவர் தகுதியும், மனதை புருவ நடுவில் ஒருமுகபடுத்துகின்ற ஆற்றலும் உடையவர்களே மேற்கொள்ள முடியும். அந்த ஆற்றலை பெற்று மூச்சு பயிற்சி செய்யும் வழிமுறைகளும், மேற்கொண்டால் கிட்டும் பலனும் எளிமையாக விவரிக்கப்பட்டுள்ளது. மனதை ஒருமுகபடுத்தலும், மந்திரங்களை உச்சரிப்பதால் மூச்சு பயிற்சியை மேற்கொள்வது, அதன் அனுபவம் முதலியன படிப்படியாக மேற்கொண்டு தொடர்ந்து ஆறு ஆதாரங்கள் வழியை அமிர்த நிலை அடைவதை 'அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்' கற்பிக்கிறது.

திருமூலர், கொங்கணவர், சட்டமுனி ஆகியோற்றின் இது பற்றிய கருத்துக்களையும் உள்வாங்கி எழுதப்பட்டதால் பிற்கால நூல் என்று தோன்றினாலும், இக்காலத்தவர் கடைபிடிக்க கூடிய வகையில் 'அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்' அமைந்திருப்பதும் அதற்கான தெளிந்த விளக்கத்துடன் ஸ்ரீ ஷக்தி சுமணன் எழுதி இருப்பது போற்றுதலுக்குரியது. சித்த மரபு ஞான யோகம் கற்ப்பவர்களுக்கு மிக உதவியானது.
Chennai
1st May 2016

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...