குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, February 24, 2016

அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூல் வெளியீடு

இன்று (22/02/2016) அகத்தியர் ஞானம் முப்பது பாடல் தொகுப்பிற்கு குருவருளால் நாம் எழுதிய அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூல் சம்பிரதாய பூர்வமாக சென்னையில் வெளியிடப்பட்டது.

அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூல் வெளியீடு
*****************************************************************

22/02/2016 அன்று சென்னை திருவான்மியூர் பிரணவ் ஸ்வஸ்த ஸ்தானத்தில் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் சம்பிரதாய ரீதியில் பௌர்ணமி காயத்ரி - ஸ்ரீ வித்யா பூஜையின் பின்னர் வெளியிடப்பட்டது.

பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை தீர்க்காம்ஸ ரேகையில் மக நட்சத்திரம், குரு, சந்திரன், சூரியன், பூமி ஆகிய ஐந்தும் ஒரே நேர்கோட்டில் வருவதே மாசி மகம். ஆனால் இந்த 2016ம் வருடம் தீர்க்காம்ஸ, அட்சாம்ஸம் ஆகிய இரண்டு ரேகையிலும் வரும் இந்த மாசி மகம் பல்லாயிரம் வருடங்களுக்கு ஒருமுறை நிகழக்கூடிய அபூர்வ நிகழ்வாகும். அகத்தியர் தனது தவத்தை பூர்த்தி செய்து சித்தி பெற்றது இப்படியான ஒரு அபூர்வ நாளில் என்று புராணங்கள் கூறுகின்றது. பூமியில் தெய்வ காந்த அலைகள் பரவும் இந்த அபூர்வ நாளில் பிரணவ் ஸ்வஸ்த ஸ்தானம் தனது முதலாவது நூலை வெளியிடுவது இறை அருளே.

இந்நூல் மன்மத வருடம், மாசி மாதம், 10ம் நாள் (22/02/2016) திங்கட்கிழமை, கும்ப ராசியில் சூரியன் நிற்க, சிம்ம ராசியில் குரு, பூர்ண சந்திரம் மக நட்சத்திரத்தில் இருக்க, ரிஷப இலக்கின காலத்தில் சூரியன் உச்சம் பெறும் மகாமகம் புண்ணிய காலத்தில் இந்த நூல் ஸ்ரீ காயத்ரி யாகத்தின் பின்னர் பிரணவ் ஸ்வஸ்த ஸ்தானத்தில் குருமண்டல ஆசியுடன் வெளியிடப்பட்டது.

பொது அறிமுக விழா எதிர்வரும் மார்ச் 13ம் திகதி நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் நேரில் பங்கு பற்றி நூலின் பிரதியை பெறலாம்.
எதிர்பாராமல் தமிழ் நாட்டின் இரு பிரபலங்கள் பங்குபற்றி நூலை வெளியிட்டு வைத்தனர்.

மேலும் பூஜைக்கு மூன்று அபூர்வ கோமுகி சங்குகள் வந்து சேர்ந்தமை குருநாதரின் பரிபூரண ஆசிக்குரிய நிமித்தம் என்பதில் ஐயமில்லை .

IG கிருஷ்ணமூர்த்தி ஐயா எமது ஆத்ம ஞான யோக சபை உறுப்பினர், யோக சாதகர்.

நூலை வெளியிடுபவர் Mr. S.S. Krishnamoorthy, IPS. IG of Police (Rtd), South Zone, Madurai,



முதல் பிரதி பெறுபவர்: Mr. K. Kamalakumar, State President, youth wing, Bharathiya Janatha Party, Tamilnadu,

பதிப்பாசிரியர்: Dr. B.P. Pranav Bp, Pranav Swastha Stanam, Thiruvanmiyoor, Chennai, Tamil Nadu







பிரணவ் ஸ்வஸ்த ஸ்தானத்தில் உள்ள பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் விளக்கு, இந்த விளக்கில் உள்ள நூற்றி எட்டு திரிகள் நட்சத்திர தொகுதியையும், பின்னர் பன்னிரண்டு ராசிமண்டலம், நவகோள்கள், அஷ்ட திக்கு பாலகர்கள்  என முழு அண்டத்தின் அமைப்பையும்  விளக்கும்.  பிரதி பௌர்ணமி பூஜையின் போது இந்த விளக்கு எரிக்கப்பட்டு காயத்ரி, ஸ்ரீ வித்யா மந்திர ஜெபம் நடாத்தப்படும். 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...