குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, February 17, 2016

சித்தர்களின் அண்ட பிண்ட தொடர்பு இரகசியம் - ஜோதி – ஷம்



அண்டத்தில் உள்ளதே பிண்டம் 
பிண்டத்தில் உள்ளதே அண்டம் 
அண்டமும் பிண்டமும் ஒன்றே 
அறிந்துதான் பார்க்கும்போதே
சட்டைமுனி சித்தர் -

அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் உள்ள தொடர்பினை அறிந்து எப்படி மனிதனின் அகத்திலும் புறத்திலும் ஜோதிஷம். இன்று ஜோதிஷம் தமது குறைகளை நிவர்த்திக்கவும், எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பதனை அறியவும் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. ஆனால் இந்த பண்டைய ஞானத்தின் உண்மை நோக்கம் ஆழ்ந்த தன்னையறியும் தத்துவ ஞானத்துடன் தொடர்புடையது. நான் யார்? நான் வாழும் பூமி எப்படி செயற்படுகிறது? எனக்கும் இந்த பூமிக்கும், வானப்பரப்பில் நாம் காணும் வான் பொருட்களுக்கும் தொடர்பு உண்டா? இந்த தொடர்பால் எனது வாழ்க்கையும், நான் வாழும் சூழலின் தன்மையும் தாக்கமுறுகிறதா? அப்படியானால் அந்த தொடர்புகளை எப்படி அறிந்து கொள்வது? அதற்கு ரிஷிகளும் சித்தர்களும் கண்ட ஞானம்தான் ஜோதிஷம். 

இந்த அரிய ஞானத்தை ஆழமாக அறிந்து கொள்ள கொழும்பு அஷ்டாங்க யோக மந்திரில் ஒவ்வொரு திங்கட்கிழமை மாலை 05. 30 – 07.00 வரை நவக்கிரக, நட்சத்திர, துருவ நட்சத்திர தியான சாதனையுடன் கலந்துரையாடல் தொடங்கப்படுகிறது. 

முதல் வகுப்பில் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ள விடயங்கள்; ஜோதிஷம் வேதத்தின் அங்கம், ஜோதிட சாஸ்திரத்தின் வரைவிலக்கணம், ஜோதிடத்தின் பிரிவுகள், ஜோதிடத்தின் பயன்பாடு, ஜோதிடம் கற்க விரும்பும் மாணவரிடம் இருக்க வேண்டிய பண்புகள். 

இரண்டாவது வகுப்பு: வேதகால ரிஷிகளின் ஜோதிடத்தில் உள்ள பிரிவுகள், ஜோதிடத்தினது தர்க்க ரீதியான விளக்கம், அண்டத்தினதும் பிண்டத்தினதும் விளக்கம், அண்டத்துடனும், பிண்டத்துடனும் ஒத்திசைந்து வாழவேண்டியதன் முக்கியத்துவமும் அதில் ஜோதிடத்தின் பங்கும், பஞ்ச பூதங்கள், 

மூன்றாவது வகுப்பு: ஜோதிடத்தின் வரலாறு. 

இதன் பின்னர் ஒவ்வொரு வாரமும் அடுத்த வாரக் கற்பித்தலில் என்ன கற்பிக்கப்படும் என்ற விபரம் தரப்படும். 

உரை நிகழ்த்துபவர்: ஸ்ரீ ஸக்தி சுமனன் (Dr. T. Sumanenthiran) 


வகுப்பின் நோக்கம்
  • நிச்சயமாக இந்த வகுப்பு ஜாதகம் பார்க்கும் இடம் இல்லை. 
  • அறிவுத்தாகமும், சிரத்தையும் கொண்ட மாணவர்கள் பங்குபெறலாம். 
  • வகுப்பின் நோக்கம் ஜோதிடத்தின் அடிப்படை கோட்பாடுகளை தெளிவாக விளங்கி கற்றல், ஆராய்தல், தெளிதல். 
  • ஜோதிட மூல நூற்களை விளங்கி கற்றல் 
  • வகுப்பில் பங்கு கொள்பவர்கள் தமது ஜாதகத்தை பலன் பார்க்கும் இடமாக பயன்படுத்த கூடாது. 
  • ஜோதிடத்தை தன்னை  அறிவதில் பயன்படுமா  என்ற  நோக்கில் கற்க ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே இந்த வகுப்பு பயன்படும். 
இங்கு கலந்துரையாடப்படும் விடயங்கள் இங்கு வலைத்தளத்தில் பதிவுகளாக பதியப்படும். 


1 comment:

  1. அருமை! கலந்துரையாடல் கருத்துகள் இவ்வலைதளைத்திலும் பதிவிடவிருப்பமைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"

  "உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...