- கடந்த பலவருடங்களாக நாம் ஆத்ம, யோக, ஞான கருத்துக்களை எழுதி வருவதன் நோக்கம் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சித்தர்கள் வாக்குப்படி நாம் பெற்ற அறிவினை பகிர்ந்து கொள்வது என்ற ஒரு நோக்கம் மட்டுமே. இதுதவிர இதனை வைத்து எப்படி பணம் சம்பாதிக்கலாம், கூட்டம் சேர்க்கலாம் என்பது இல்லை. ஏனெனில் இதற்கான தேவை இல்லாதபடி குருநாதரும் தேவியும் எம்மை நல்ல நிலையில் வைத்துள்ளார்கள்.
- இந்த அறிவு பகிர்வில் எதுவித எதிர்பார்ப்பும் இருக்க கூடாது என்பது எமது குருநாதரின் விருப்பம், எனினும் ஒரு சில நிலைகளில் யாராவது கருத்து தெரிவிக்க மாட்டார்களா என எண்ணி கேட்டிருக்கிறோம். எனினும் அந்த எண்ணங்களும் குருநாதரால் நீக்கப்படிருக்கிறது.
- காயத்ரி பற்றி அதிகம் எழுதுவதை பல சாராரும் பலவிதமாக விமர்சித்திருக்கிறார்கள். ஒரு சிலர் பிராமணர் மட்டும்தான் சொல்லவேண்டும், பெண்கள் சொல்லக்கூடாது, போன்ற பல்வேறு பிற்போக்கான கருத்துக்கள முன்வைக்கப்பட்டன. எனினும் இவை வெறும் மனக்குழப்பமே அன்றி உண்மை இல்லை என்பதை அனுபவ பூர்வமாகவும், தெளிவாகவும் பதிவித்திருக்கிறோம்.
- இது இவ்வாறு இருக்க இன்னும் பலர் ஆரிய திராவிட சண்டையாக சித்தர்களுக்கும் காயத்ரியிற்கும் தொடர்பு இல்லை, காயத்ரி தமிழில் இல்லை அது எப்படி எமக்கு உகந்த மந்திரமாக இருக்க முடியும் என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
- இப்படியான கருத்துக்களை இவ்வாறு விவாதித்து எம்மை நிலை நிறுத்தி இவற்றை பரப்ப வேண்டும் என்ற கடப்பாடு எமக்கு இல்லை. நாம் அனுபவமாக அறிந்த. கற்ற பயிற்சி செய்து பயன்பெற்ற விடயங்களை அனைவரும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கத்தில் பகிர்கிறோம். அவற்றை வாசித்து, உங்கள் அறிவால் துணிந்து பின்பற்றுவதா வேண்டாமா என்பது உங்களுடைய முடிவு.
- ஏனெனில் நாம் இறைவன் தந்த ஆன்ம சுதந்திரத்தை நீங்கள் முழுமையாக் பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறோம்.
- மேலும் எவரையும் எமது கருத்துக்களால், அறிவால், சக்தியால் அடிமைப்படுத்தி அவர்கள் வளர்ச்சியை தடை செய்யாமல் அவர்களது இயல்பான பரிணாம வளர்ச்சிக்கு துணையாக எம்மால் எப்படி உதவ முடியும் என்பதே எமது குறிக்கோள்.
- இதன்படி இங்கு நாம் அறிவித்த "ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்" யார் உங்கள் அறிவால் தெளிந்த முடிபு செய்து காயத்ரி மந்திரத்தை புரிந்து கொண்டு, பயனை பெற விரும்புகிறீர்களோ அவர்கள் அனைவரும் இணைந்து கொண்டு கற்கலாம்.
- இந்த கற்கை நெறியினை உங்களுக்கு ஒழுங்கு படுத்த எமது மிகுந்த வேலைபளுவிற்கு மத்தியில் நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது, எனினும் எமது நேரத்தை உங்களுக்காக எதுவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தருகிறோம். அதனால்தான் இந்த கற்கை நெறிக்கு எதுவித கட்டணம் என அறிவிக்க படவில்லை.
- வித்தையினை கற்பதற்கு சிரத்தை, மனப்பண்புதான் அவசியமே அன்றி பணத்தால் வாங்க முடியாது. ஆகவே நீங்கள் அந்த பண்பினை பின்பற்றாமல் இந்த கற்கையினை தொடரமுடியாதபடி வடிவமைத்துள்ளோம்.
- மேலும் காயத்ரி சாதனை என்பது தெய்வீக பண்புகளை பெறுவதற்குரிய சாதனை, குறித்த அடிப்படை தெய்வ பண்புகளை பெறாமல் இரசவாதம், மருத்துவம், மாந்திரீகம் என்பவற்றில் மனதை பற்றி அலைந்தால் எத்தனை காலமானாலும் ரிஷிகள் கூறிய உயர்ந்த நிலையினை பெறமுடியாது.
- பெரும்பாலானவர்கள் தமது பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு, அதீத சித்திகளை பெறுவது, போன்ற பலவித இலக்குகளை மனதில் உருவாக்கி கொண்டு ஒருவித அகங்காரத்துடன் தெய்வ சாதனைகளை தொடங்கிறார்கள். நான் அந்த சித்தியை அடைந்துவிட்டேன், இந்த சித்தியை அடைந்து விட்டேன், எனக்கு அந்த வித்தை தெரியும், இந்த வித்தை தெரியும் என்று ஒருவித மனதின் அகங்கார விளையாட்டில் சிக்கி விடுகிறார்கள். இதனாலேயே பக்தியும், சரணாகதியும், பலனை எதிர்பாராமல் கர்மம் செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கும் தேவைப்படுகிறது.
- ஏனென்னில் எம்மை விட இந்த பிரபஞ்ச சக்தி மிகப்பெரியது, அதனுடன் இயைந்து சென்றால் அதனை நாம் பயன்படுத்தி கொள்ளலாம், இல்லாமல் மேற்கூறியது போல் அகங்காரமடைய ஆரம்பித்தால் தெய்வ சக்தி எம்மில் செயற்படுவது தடைபட ஆரம்பிக்கும்.
- இப்படி குருபக்தி, சரணாகதி என்றவுடன் பலரும் குருதேவா, நீங்கள் எல்லாம் அறிந்தவர், வல்லவர் என கற்பிப்பவரை புகழ்பாட ஆரம்பித்து மீண்டும் இன்னொரு வழியில் இந்த வலையில் சிக்கிக்கொள்ள ஆரம்பிக்கின்றனர்.
- ஆக இந்த கற்கையில் மிக தெளிவான புரிதல் நீங்கள் அறிய வேண்டியது, நாம் எல்லாவற்றையும் அறிந்து கொண்டு உங்களுக்கு மோட்சம் தரவந்த கடவுள் இல்லை என்பது. நாம் அறிந்தவற்றை உங்களுக்கு ஓர் ஒழுங்குமுறையில் நெறிப்படுத்தி தருகிறோம், அதன் படி உங்கள் முயற்சியினை செய்து நீங்கள் நிலையினை அடைவது உங்கள் பொறுப்பு.
- சுருக்கமாக ரிஷிகளின் வழிநின்று அன்பினை, தெய்வ குணத்தினை மனித மனத்தில் விதைப்பது நோக்கம்!
குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Thursday, May 07, 2015
நோக்கமும் தெளிவும்: ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்
"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"
"உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
இந்த மனோன்மணி அகவல் எனது பாட்டனாரின் சித்தர் பாடல் தொகுப்பில் இருந்தது. எனது சிறுவயதில் எனது தந்தையார் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதை பார்த்த...

நெத்தியடி....அனைத்து சந்தேகங்களும் தூள் தூள்!
ReplyDeleteநன்றி
Deleteஐயா,
ReplyDeleteநன்றி
வி.ரவீந்திரன்.