குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, December 16, 2014

நவக்கிரக காயத்ரி சாதனை – சந்திர காயத்ரி மந்திர சாதனை




ஏற்கனவே எமது பதிவில் காயத்ரி மந்திரம் மூல மந்திரம் அதன் சாதனையின் மூலம் பல்வேறு தேவதா சக்திகளை பெறலாம் என்று கூறியுள்ளோம். இந்த வரிசையில் இன்று எல்லோருக்கும் இருக்கும் பயம் நவக்கிரகங்கள், ஆகவே இந்த தொடரில் ஒன்பது கிரகங்களது காயத்ரி மந்திரத்தினையும் அதன் மூலம் குறித்த கிரகசக்தியினை எம்மில் ஈர்த்து எமது குறைகளை போக்கி கொள்ளும் முறையினையும் விளக்குகிறோம். தேவையானவர்கள் பயிற்சித்து பலன் காண்க.

இதற்கான நிபந்தனை, முதலில் தினசரி நூற்றி எட்டு தடவை மகா காயத்ரி (ஓம் பூர் புவஹ ஸ்வஹ.......) கூறி, சித்த சாதனை செய்து முடித்திருக்க வேண்டும்.

அதன்பின்னர் ஒரு திங்கட்கிழமை) சூரியோதயத்தில், சந்திர ஹோரை நேரத்தில் கீழ்வரும் ஒழுங்கில் செய்ய வேண்டும்.
  1. தாய் தந்தை குரு வணக்கம் -
  2. மஹா காயத்ரிமந்திர ஜெபம்108 தடவை
  3. காயத்ரி சித்தசாதனை
  4. சந்திர காயத்ரிமந்திரம் - 108 தடவை

இறுதியாக சந்திரனை மனதில் தியானித்தது சந்திர சக்தி எமது உடல், மனம், பிராணன் என்பவற்றில் சேர்வதாக பாவிக்க வேண்டும்.

தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வசதியான்  சந்திர  ஓரையில் இதனை நாற்பது நாட்கள் செய்து வரவேண்டும்.

அதுபோல் சந்திரன் உச்சம் ஆட்சியாகும், பௌர்ணமி  நாட்களில் செய்தால் பலன் மிக அதிகம்.

இதனால் நீங்கள் பிறந்த போது உங்கள் சூக்ஷ்ம உடலில் குறைவாக காணப்படும் சந்திரனுடைய சக்தி பிராணனுடன் கலந்து அதிகரித்து அதன் பயனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நற்பலன்கள் கிடைக்கும். 

ஜாதகத்தில் சந்திரனால் பிரச்சனை என்று கூறப்படும் பலன்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.

கீழே சக்தி வாய்ந்த தாந்திரீக சந்திர காயத்ரி மந்திரம் தரப்பட்டுள்ளது.

ஓம் க்ஷீர் புத்ராய வித்மஹே அமிர்த தத்வாய தீமஹி தன்னோ சோம ப்ரசோதயாத்

இதன் பலன்கள்:

சந்திரம் மனம், மூளை, உணர்ச்சிகளை, உணர்திறன், மேன்மை, கற்பனை, அரசி, தாய் என்பவற்றின் காரகத்துவம் உடையது. இந்த சாதனை மூலம் இந்த விடயங்களில் உள்ள பிரச்சனை தீருவதற்குரிய சக்தியை சாதகன் பெறுவான். மேலும் மனச்சக்தியும் அமைதியும் பெறுவான். மன அழுத்தம், மனநோய், உணர்ச்சிக் கோளாறுகள் என்பவற்றை இல்லாதாக்கும். மேலும் உடலையும் அகத்திணையும் அழகாக்கும். 


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...