குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, September 15, 2014

இல்லறத்தில் இருப்பவர்கள் தெய்வ சக்தி பெற எளிய சாதனை


பொதுவில் ஆன்மீகம் என்பது உலகை விட்டு ஓடும் ஒரு செயலாகத்தான் கற்பிக்கப்பட்டுவந்துள்ளது. அதிலும் பெண்கள் துன்பத்தினை தருபவர்களாகவும், மாயையில் ஆழ்துபவர்களாகவும் கற்பிக்கப்பட்ட மனதுடன்தான் சமூகம் மனிதர்களை வளர்க்கிறது. இப்படிப்பட்ட மனதுடன் பரிணாம உயர்வால் இறையை உணர முயலும்போது உலகமே துன்பமயமாக தோன்ற ஆரம்பிக்கிறது. உலகம் மாயை என்று வாழ்க்கை கடமைகளை முடிக்காமல் சந்நியாசம் நோக்கி ஓட ஆரம்பிக்கின்றனர்.
உலகம் அடிப்படையில் இருமைகளால் படைக்கப்பட்டிருக்கிறது. இந்த இருமை உண்மையான் “ஒன்றில்” இருந்து உருவானவை. பரிணாம பூர்த்தி என்பது மீண்டும் அந்த ஒன்றாக மாறுவதே! ஆன்மாவில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை என்றாலும் ஆன்மா எடுக்கும் கவசத்திற்கு ஏற்ப ஏற்படும் பேதம் சரியாக புரிந்து செயற்படும் போது உயர்விற்கு வழிவகுக்கிறது, இதனை உதாரணம் மூலம் விளக்குவதானால் அக்கினியினை நன்மைக்கும் பயன்படுத்தலாம், அழிக்கவும் பயன்படுத்தலாம். இது போன்றதே ஆண், பெண் உறவு என்பதும்.
ஆண் என்ற உடம்பில் இருக்கும் ஆன்மாவிற்கு தெய்வ சக்திகளை ஈர்த்து வழங்கும் சக்தி அதிகமாக இருக்கும். பெண் என்ற உடம்பில் இருக்கும் ஆன்மாவிற்கு பெறும் சக்தியினை வளர்க்கும் தன்மை அதிகம். ஒரு ஆண் பலயுகங்கள் தனிமையாக வளர்க்க முயல்வதை தாய்மை சக்தி உடைய பெண்ணிடம் தருவதன் மூலம் ஒருபிறப்பில் பெறலாம். அதுபோல் ஒரு பெண் பல பிறப்புகள் முயற்சித்து பெற வேண்டிய தெய்வ சக்தியை நல்ல சாதனை உடைய ஆணிடமிருந்து உடனடியாக பெறலாம். ஆக இருவரும் சேர்ந்து முயற்சிக்கும் போது பலன் மிக அதிகம்.
இப்படி முயற்சித்து சித்தி பெற்றவர்கள்தான் சித்தர்கள், ரிஷிகள் எல்லோரும். அகஸ்தியர் – லோபாமுத்திரை, வசிஷ்டர் – அருந்ததி, காகபுஜண்டர் – பகளா, சத்தியவான் – சாவித்திரி, சப்த ரிஷிகள்,  பதினெண் சித்தர்கள் எல்லோரும். தனித்த நிலையில் யாருமே சக்தி பெறமுடியாது, அப்படி பெறும் சக்தியால் இந்த பிரபஞ்சத்தில் எதையும் வளர்க்க முடியாது.

இன்றைய கணவன் – மனைவி நிலை
இன்று மனதுடன் ஒன்றி வாழும் தம்பதிகளை காண்பது அரிதாகிவிட்டது. வாழ்க்கை என்பது பொருள்தேடும் ஒரு நோக்கத்துடன் வெளிப்பகட்டிற்காக வாழும் நிலை ஆகிவிட்டது. இந்த நிலையில் ஆண் பெண் உறவு என்பது எலியும் பூனையும் விளையாட்டாகி விட்டது. இதனால் மன முறிவுகளும், மணமுறிவுகளும் சாதாரண விடயங்கள் ஆகிவிட்டன.

ரிஷிகள் உபதேசித்த உயர்ந்த நிலை
எண்ணத்தில் தன்மையே வாழ்க்கை, கணவன் மனைவி ஒருவரை ஒருவர் தாழ்வாக எண்ணுவதும் பிரச்னைக்கு முதற்காரணம். சில இறைசாதனையில் உள்ள கணவனோ மனைவியோ தமது துணை அந்த வழியில் இல்லை என்றவுடன் அவரை பாவப்பட்டவராகவும், தாம் கிடைத்தற்கரிய பேறு பெற்றவராகவும் எண்ணிக்கொண்டு செய்யும் எந்த இறை சாதனையும் அவருக்கும் சரி வேறு எவருக்கும் பயன் அளிப்பதில்லை. இந்த நிலையினை கூறுவதானால் இருமாடுகள் பூட்டிய வண்டியில் ஒரு மாடு நகரமறுத்தால் மற்ற மாடு அந்த மாட்டை சுற்றி சுற்ற முடியுமன்றி இலக்கில் முன்னேறாது.
ஆகவே இல்லறத்தில் இருக்கும் கணவனோ மனைவியோ மற்றவர் தமது வழியில் இல்லை என்றால் ஒருக்காலும் கனவிலும் தமது துணை இந்த வழியில் இல்லையே என்ற வெறுப்பு எண்ணம் எடுக்க கூடாது. அவருக்குரிய தெய்வ சாதனையினையும் தனது பொறுப்பாக எண்ணி தான் பெறும் தெய்வ சக்தி உயர்ந்த சக்திகள் யாவும் ஒரு குறைவின்றி அவருக்கும் கிடைக்கவேண்டும் என்று எப்போதும் குருவை பிரார்த்தித்து எண்ண வேண்டும். இந்த எண்ணம் அவர்களை நிச்சயம் உயர்த்தும்.

மனமொத்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் “நான் பெறும் நல்ல தெய்வ சக்திகள் அனைத்தும் எனது மனைவி/கணவன் பெறவேண்டும்” என்று தமது தினசரி பிரார்த்தனைகள், மனதில் எண்ண வேண்டும்.  

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...