குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, August 13, 2012

யோக சாதனையாளர்களுக்கு வழிகாட்டும் அரிய நூற்கள் - 02


கண்ணைய யோகியார் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது சாதாரண மனிதன் போல் எந்த பகட்டும் இல்லாமல் தன்னை தேடி வரும் மாணவர்களுக்கு மாத்திரம் தமது கைப்பட பாடங்களாக யோக வித்தை, சித்த வித்தை, மந்திர தந்திர நுட்பங்களை எழுதிக் கொடுத்து நேரடி செய்முறை விளக்கங்களும் கொடுத்து கற்பித்து வந்தார். இப்படிக் கற்றவர்களில் இலங்கை காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள் முதன்மையானவர், கிட்டத்தட்ட 44 வருடங்கள் இலங்கையில் இருந்து கொண்டு சென்னைக்கு வருடத்திற்கு இரண்டு மூன்று தடவைகள் சென்று அவரிடம் அனைத்து வித்தைகளும் கற்றுக்கொண்டவர். அவர் தான் குருவிடம் கற்ற வித்தைகளை அனைவரும் பயன் படும்படி சிறு சிறு புத்தகங்களாக வெளியிட்டு வந்துள்ளார். இந்த புத்தகங்கள் இலங்கை நுவரெலியாவில் காயத்ரி பீடத்தில் விற்பனைக்கு உள்ளன. அவை பற்றிய சிறிய அறிமுக விபரங்க்கள் வருமாறு;

எளிய முறை யோகப்பயிற்சி: யோக சாதனை இன்று பலராலும் பயிற்றுவிக்கப்படுகிறது, அவை எல்லோராலும் செய்யக்கூடிய அளவிற்கு எளிமையாக இருப்பதில்லை, உதாரணமாக பிரணாயாமம், ஆசனம், தாரணை, தியானம், சமாதி என்பன அனிவராலும் விளங்கிகொள்ள முடிவதில்லை. இப்படியான உயர்ந்த விடயங்களை எளிய வடிவில் அந்த சாதனையினால் கிடைக்க கூடிய பயன் அனைத்தையும் தரவல்ல பயிற்சிகள் இதில் கூறப்பட்டுள்ளன. இதில் கூறப்பட்டுள்ள விடயங்க்கள் 1) யோக சாதனை, 2) ஜெப சாதனை 3) பிராண சக்தி 4) மந்திர பீஜங்கள் 5) தீர்க்க சுவாசம் 6) நோயற்ற வாழ்வு 7) மனக்கட்டுப்பாடு 8) சும்மா இருக்க வழி 9) தாரணையின் பயன் 10) மானச சாதனைகள் 11) காரியம் கைகூட வழி 12) கருத்துபதிவு 13) இரகசிய அனுபவங்கள் 14) மன அலை சிகிச்சை 15) மனச்சிருஷ்டி 16) யோக ஷேமம் 17) உருவ பாவனா தியானம் 18) அரூப தியானம் 19) சமாதி நிலை 20) எளிய பயிற்சிகள். 

இந்த நூலைக்கற்று அதன் பயிற்சி செய்தால் யோகத்தின் அத்தனை படி நிலைகளினை பற்றிய அடிப்படை புரிந்துணர்வும், அதன் அனுபவமும் கிட்டும் என்பதற்கு உறுதி கூறுகிறோம். அதன் பின் நீங்கள் யோகப்பாதையில் விரைவாக முன்னேறுவதற்கான அடிப்படை அறிவினை இந்த நூல் தரும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. 

இன்னும் மொத்தமாக 40 மேற்பட்ட நூற்கள் இருக்கின்றன. அவற்றில் சிலது பற்றிய விபரங்களையும் இங்கு தந்துள்ளோம்,

நூற்களில் தலைப்புகள் வருமாறு; 

காயத்ரி குப்த விஞ்ஞானம்: காயத்ரி சாதனையில் ரிஷிகளால் மறைக்கப்பட்ட அரிய இரகசியங்கள், சாதனை முறைகள் அடங்க்கிய நூல்,

ஏகாக்கிர விஞ்ஞானம்: மனச் சக்தியினை ஏகாக்கிரப் படுத்தி என்னென்ன காரிய சாதகங்கள், சித்திகள் பெறலாம் என விளக்கும் பயிற்சி நூல். 

தியானம் என்றால் என்ன?: தியானம் பற்றிய விளக்கமும் எளிய தியானங்களும்

அருவமும் உருவமும்: கோயில் வழிபாட்டின் விஞ்ஞான தத்துவ விளக்கம்.

யாக விஞ்ஞானம்: அனைவரும் தமது வீட்டிலேயே சிறியளவில் யாக வளர்க்க கூடிய செய்முறை விளக்கங்கள், யாகங்களில் ஒவ்வொரு காரியங்க்களுக்கு பயன்படுத்தப்படும் மூலிகைகள், மந்திரங்கள், அவற்றிற்கான விளக்கங்கள் அடங்கிய நூல். 

காயத்ரி ஸ்ம்ருதி: காயத்ரி மந்திரத்தின் ஒவ்வொரு அட்சரத்தின் அதிர்வும் மனிதனில் விழிப்பிக்கும் தெய்வசக்திகள் எவை என்பது பற்றி விளக்கும் நூல். 

இவற்றை கற்க வேண்டும் என ஆர்வம் உள்ளவர்கள் கீழ்வரும் தொடர்பிலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்'

திரு. ச. சந்திரமோகன்
அறங்காவலர், காயத்ரி பீடம் சர்வதேச நம்பிக்கை நிதியம்
82, லேடி மக்கலம்ஸ் ட்ரைவ், நுவரெலியா, இலங்கை,
கைபேசி: (0091) 07773249554
தொலைபேசி: (0091) 522222609
மின்னஞ்சல்: srigayathripeetam@gmail.com 

2 comments:

  1. தகவலுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...