குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, May 21, 2022

யோக சாதனை

 

யோகம் என்பதன் எளிமையான பொருள் "இணைதல்"

எது எதனுடன் இணைதல்?

யோகத்தின் இறுதி இலக்கைக் கருதினால் "ஆன்மா இறைவனுடன் இணைதல்" என்று கொள்ளப்படும்.

ஆனால் அதற்கு முந்தைய நிலையில் ஆன்மாவைச் சூழ இருக்கும் கருவிகளான உடல், மனம் ஆகியவற்றில் பிளவுபட்டிருக்கும் தத்துவங்களை இணைத்தல். ஆன்மாவைச் சூழ இருக்கும் தத்துவங்களை ஆன்ம தத்துவம் என்று கூறுவார்கள். மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் நான்கு, பஞ்சபூதம், பஞ்சதன்மாத்திரைகள், பஞ்சஞானேந்திரியம், பஞ்சகர்மேந்திரியம் ஆகிய (4+5+5+5+5) 24 ம் ஆன்ம தத்துவங்கள்.

இப்படி 24 தத்துவங்களும் இணைக்கப்பட்டிருக்கும்போது சித்தத்தில் எழும் விருத்திகள் இந்த இணைப்பை ஆட்டம் காணவைப்பதால் இந்த சித்த விருத்திகளைக் கட்டுப்படுத்துவதே யோகம் என்பார் பதஞ்சலி மகரிஷி.

சாதனை என்பது இந்த கருவிகளுக்கு இடையிலுள்ள இணைப்பினை சலனிக்கச்செய்யும். சித்த விருத்திகளை ஒழுங்குபடுத்தி ஆன்மாவினை அறிய செலுத்தும் ஒழுங்குமுறை என்று அர்த்தம்.

சாதனை என்ற சொல்லின் வேர்ச்சொல் சாத்யமாக்குதல். யோக சாதனை என்றால் சித்தவிருத்திகளை நிறுத்தி ஆன்மாவை நோக்கி ஆன்ம தத்துவங்களை ஒழுங்குபடுத்துவதைக் குறிப்பிடுவர்.

ஹட யோகம் என்றால் இடகலை, பிங்கலையினை சமப்படுத்தி இணைத்தல் என்று அர்த்தம்,

சிவ யோகம் என்றால் முப்பத்தாறு தத்துவங்களும் பேதித்து ஆன்மா சிவத்துடன் இணைதல் என்று அர்த்தம்.

ஒருவன் தனது உலகவாழ்க்கையில் இன்பமாக வாழ வேண்டும் என்றால் தனது 24 தத்துவக்கருவிகளையும் ஆற்றலுடையதாக வைத்திருக்க வேண்டும்.

இதற்குரிய எளிய முறைதான் 24 அட்சரங்கள் கொண்ட காயத்ரி மந்திர சாதனை.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பக்தியுடன் செய்யப்படும் மந்திர சாதனை ஏன் துரிதமாகப் பலனளிக்கும்?

    பக்தியுடன் செய்யப்படும் மந்திர சாதனை ஏன் துரிதமாகப் பலனளிக்கும்? பக்தி என்பது தனது அனுஷ்டான தெய்வத்திடம் முழுமையாக மனம், புத்தி, சித...