குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, August 21, 2022

தலைப்பு இல்லை

திராவிட ஹிந்தி எதிர்ப்பாளர்களுக்கும், புதிதாக கிளம்பியிருக்கும் யாழ்ப்பாண ஹிந்தி எதிர்ப்பாளர்களுக்கும் ஒரு நற்செய்தி! 

ஹிந்தி நீங்கள் நினைப்பது போல் ஒரு ஆரியமொழியில்லையாம்! பிரித்தானியரின் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு வடிவம் என்கிறது Urdu Hindi: An Artificial Divide (Politics of Language) என்ற நூல். 

ஹிந்தியினது ஆரம்ப வேர் Austric-Munda and Dravidian குடும்ப மொழியாம்! பின்னர் சமஸ்க்ருதம், அரபு, பேர்சிய மொழி கலந்து தற்போதைய உருவம் பெற்றது என்பதை ஆதாரத்துடன் நிறுவுகிறார் நூலாசிரியர். 

ஒரு மொழியைப் பரப்புவதும், பரவுவதை எதிர்ப்பதும் பரப்ப நினைக்கும் அதிகாரம் தனது ஆளுமையைப் புகுத்தவும், பெறும் சமூகம் மாற்றுச் சமூக அதிகாரம் தமது சமூகக் குழுக்களுக்குள் புகுந்து அதிகாரத்தைக் கைப்பற்றிவிடும் என்ற பயம் சூழ்ந்த அரசியல் காரணத்திற்காகவே! 

தமிழ் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக பல நூறு மொழிகளின் தாக்கத்திலும் தனது தனித்தன்மையை இழக்காத ஒரு இலக்கணக் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. அன்னியமொழி வந்தால் அதை எதிர்க்காமல் தற்பவம் அல்லது தற்சமம் ஆக்கி தனக்குள் வைத்துக்கொள்ளும் தன்மை தமிழிற்கு உண்டு. இது பெரும் வீரனுக்கு இருக்கும் ஆற்றல்; எந்த எதிரி வந்தாலும் அவர்களிடம் தோற்காமல் தனக்கு வேலை செய்ய வைக்கும் ஆற்றல் தமிழிற்கு உண்டு. 

இந்த ஆற்றல் எப்படி வந்தது என்றால் மொழியை விடாது கற்கும் பண்டிதர் மரபு சமூகத்தில் இருந்ததால்; நன்னூலும், தொல்காப்பியமும், தண்டியலங்காரமும், யாப்பருங்கலக்காரிகையும் கற்கும் மரபு இருந்ததால்! 

இப்படி தன்மொழி கற்றுத் தேர்ந்த வீரன் வேறு மொழியிடம் மண்டியிடாத அதேவேளை அந்த மொழியை தனது வலிமையாக்கும் ஆற்றலுடையவனாக இருப்பான்.

ஆகவே எந்த ஆதிக்கத்தைப் பார்த்தும் வெருண்டு ஓடாமல், தன்மொழியில் புலமையுடன் இருக்கும்போது மற்ற மொழிகளையும் உள்வாங்கி எமது சமூகத்தின் வலிமையைக் கூட்ட வேண்டும்.

ஹிந்தியை எதிர்க்கும் தமிழ் பெருமகன்கள் ஒவ்வொருவரும் தாய்மொழியாம் தமிழை ஒரு உலக மொழியாக்க போராடுவார்கள் என்று நினைக்கிறேன்! 

அவுஸ்ரேலியாவிலும், ஜேர்மனியிலும், பிரான்ஸிலும் விரைவில் உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நன்னூல், தொல்காப்பியம், தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை கற்று உலக அரங்கில் தமிழ் மொழி சிறந்து விளங்கப் பாடுபடவேண்டும். 

அதிக வாசிப்பும், தேடலும், சிந்தனையும், ஆய்வும், தெளிவும் இல்லாமல் பேஸ்புக்கில் மக்களை உசுப்பேத்த எழுதும் நண்பர்கள் இப்படியான நூல்களைப் ஆழமாகப் படித்து சமூகத்திற்கு தெளிவுதரும் சிந்தனைகளை தமிழில் எழுத வேண்டும்.

இப்படிச் செய்யும்போது உலக அரங்கில் தமிழர்கள் பெரும் வலிமையுடனும், பெருமையுடனும் இருப்போம்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...