குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, August 19, 2022

மதன மோகன மோகினி லீலை

இன்று கிருஷ்ண ஜெயந்தி - ராதையை வழிபட்டால் கிருஷ்ணன் அருள் முழுமையாகக் கிடைக்குமாம். 

கிருஷ்ணன் வழிபடுவதால் அவள் ராதையானாள் என்கிறது ராதிகோபநிஷத்.

ஸ்ரீ ராதை ஈரேழு பதினான்கு உலகங்களிலும் பிரக்ருதிக்கு மேம்பட்ட ஸக்தியின் ஸ்வரூபம். 

ஸ்ரீ ராதையின் மதன மோகன மோகினி லீலை ராதை என்ன சித்தியைத் தருவாள் என்பதைச் சொல்லும்!

மன்மதனுடைய தொழில் பிரக்ருதிமயமான புலனின்பங்களின் இச்சையைத் தூண்டுதல். மும்மூர்த்திகளும் மகரிஷிகளும் ஸ்ரீ கிருஷ்ணனை காமுகனாக்க மன்மதனைப் பணித்தனர். இந்த நோக்கத்துடன் மன்மதன் கிருஷ்ணனை நெருங்கினான். இதை அறிந்த கிருஷ்ணன் இன்று இரவு இராச லீலை நடனம் இருக்கிறது; அங்கு வந்து உனது ஆற்றலைக் காட்டி என்னில் காம எண்ணத்தை விழிப்பித்தால் நான் உனது அடிமையாகிறேன் என்றான் கிருஷ்ணன். மன்மதன் 16000 பெண்களுக்கு மத்தியில் கிருஷ்ணனை வீழ்த்துவது இலகு என்று எண்ணிக்கொண்டான்.

எந்தத் துன்பம் வந்தாலும் தன் இதயத்தில் இருந்து அன்பைப் பொழியும் ஸ்ரீ ராதையை ஸ்ரீ கிருஷ்ணன் தியானித்தான். அன்னை தோன்ற, ராதையே உனது ஹ்லாதினி சக்தியால் ஒருவன் பூரண சத்துவ குணம் நிறைந்து புலன்கள் அடங்கிய ஜிதேந்திரியனாகவும், காம எண்ணம் அற்ற காமரஹிதனாகவும் மாறுகிறான். மன்மதனிடம் இந்த சவாலில் வெற்றிபெற உதவி செய்வாயாக என்று பணிந்தான். 

மஹாராஸ லீலை தொடங்கியது; மன்மதன் தனது அம்புகளை எய்து அங்கிருந்த ஒவ்வொருவரிலும் பிரக்ருதிமயமான உடலின் காம சக்தியைத் தூண்டினான்! இதை ஸ்ரீ ராதையின் ஹ்லாதினி ஸக்தி உயர்ந்த மகாபாவம் எனும் உடல் கடந்த ஸமாதி நிலைக்குச் செலுத்தி அனைவரையும் பேரின்ப நிலைக்குக் கொண்டு சென்றாள். 

ஸ்ரீ ராதை ஒவ்வொரு சாதகரிலும் தனது ஹ்லாதினி சக்தி மூலம் சத்துவகுணத்தை நிறைத்து தியான ஸமாதி நிலைகளைத் துரிதமாகத் தரும் அன்னையின் ஆற்றல்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...