குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, August 02, 2022

சதுரங்கம் ஏன் ஆடப்பட்டது?

சதுரங்கம் நவீன Game theory இல் Combinatorial game என்ற வகைப்பாட்டிற்குள் வருகிறது. இந்தவகை விளையாட்டின் நோக்கம் எதிராளியின் படை பலம் அல்லது வளங்கள் பற்றிய முழுமையான தகவலைத் தெரிந்துகொண்டு குறித்த தளத்திற்குள் ஆட்டத்தை ஆரம்பித்து படிப்படியாக எதிராளியின் பலத்தினை அழித்து எதிராளி இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையை ஏற்படுத்துவது. 

இந்த விளையாட்டை விளையாட நான்கு விஷயங்கள் அவசியம்;

1) ஆட்டத் தளம் ( 8 x 8 ) 

2) ஆட்டத்திற்கான படைகள் - ரத கஜ துரக பதாதிகள் என்ற சதுரங்க சேனை

3) ஒவ்வொரு சேனையும் ஆட்டத்தை ஆரம்பிப்பவருக்கு மாற்றாக, அதேவேளை எனது படையை இழக்காமல் அவரது படையை இழக்க நான் என்ன ஆட்டத்தை நடத்த வேண்டும் என்ற கணிப்பு

4) இந்த ஆட்டத்தை வேகமாக குறித்த நேரத்திற்குள் முடிப்பது - ஏனென்றால் நீண்ட ஆட்டம் மனச் சோர்வினால் ஆட்ட விதிகளைப் பின்பற்ற முடியாமல் போகும். 

ஆட்டத்தளம், ஆட்டத்திற்கான படைகளின் நிலை இவற்றைப் பற்றிப் புரியாமல் மற்ற இரண்டையும் பூர்த்தி செய்ய முடியாது. 

ஆகவே சதுரங்கத்தில் நான் எப்படி எனது படைகளை நகர்த்தி எதிராளியின் அரசனைக் கைப்பற்றப்போகிறேன் என்ற முழுமையான கணிப்புடன், எதிராளியின் நகர்வு எனது திட்டத்தை எப்படி பாதிக்கிறது என்பதைக் கணித்து அதற்கு அமைவாக எனது நகர்வை மாற்றி எதிரியை பலமிழக்கச் செய்யும் உத்தி தேவைப்படுகிறது. 

ஆகவே எதிரியை பலமிழக்கச் செய்து, இதற்கு மேல் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்ற முடிவினை எட்டவைக்கும் ஆட்டங்கள் எல்லாம் Combinatorial game தான். 

அந்தக்காலத்தில் சதுரங்கம் ஆடுவது அரசர்களுக்கான விளையாட்டாக இருந்ததற்கு காரணம் அரசன் ஒருவன் தனது எதிரியை பலமிழக்கச் செய்யும் வகையில் சதுரங்க சேனையையும், தனது மன உறுதியையும் வைத்திருக்க வேண்டும் என்பதனால் எனத் துணியலாம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...