குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, August 20, 2022

யோகசாதனையில் மனதின் பரிணாம உயர்வு

ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தில் மனோ நாசம் - மனதை இல்லாமல் ஆக்குதல் என்ற கோட்பாடு இல்லை; மனதை இல்லாமலாக்கினால் எப்படி மனமுடைய மற்றைய மனிதர்களுக்கு உதவுவது. ஆகவே பதஞ்சலி கூறும் சித்த விருத்தி நிரோதகம் என்ற நிலை மூலம் உயர்ந்த மனதை (higher mind) அடைந்த பின்னர் படிப்படியாக முன்னேறிச் செல்ல வேண்டும். இப்படி உயர்ந்த மனதைப் பெறுவதினால் சாதகன் இன்னும் பலருக்கு ஒளி நிலையைத் தரமுடியும். 

அறியாமை, அகங்காரம், விருப்பு, வெறுப்பு, பயம், இந்த ஐந்தின் அடிப்படையில் மாத்திரம் சிந்தனையாக சித்த விருத்திகளுடன் இருக்கும் நிலை மனம் (mind) அல்லது தாழ் மனம் (lower mind) எனப்படுகிறது. இதுவே எம் எல்லோரது நிலையும். இந்த ஐந்தையும் பஞ்சகிலேசங்கள் என்கிறார் பதஞ்சலி. 

இந்த நிலையில் இருந்து விருத்திகளடங்கிய ஏகாக்ர சித்தம் பெறுதல் உயர்ந்த மனதைப் (higher mind) பெறுதல் எனப்படும். இதைப் பதஞ்சலி தாரணா சித்தி என்கிறார். இப்படி தாரணா சித்தி அடைந்தவர்கள் மாத்திரமே நுண்மையான விஷயங்களைப் புரியவேண்டும்; பௌதீக அறிவியலில் புதிய அறிவினைக் கண்டுபிடிப்பவர்கள் இத்தகைய தாரணாஸக்தி உடையவர்கள்; யோகசூத்திரம், புராணங்கள், தந்திரங்கள் இவற்றைப் புரிந்துகொள்ள ஏகாக்ர சித்தம் தேவை; சர்வதர்மோத்ர ஆகமத்தில் ஞானபாதத்தைப் புரிந்துகொள்ள யோகத்தால் பெறப்பட்ட ஏகாக்ர சித்தம் தேவை என்பது முதல் நிபந்தனையாக வைக்கப்படுகிறது. 

உயர்ந்த மனதைப் பெற்றால் அதை புத்தியைத் தூண்டும் பேரொளியினுடன் சேர்த்தால் ஒளிமிகுந்த மனதைப் (illumined mind) பெறலாம். இந்த ஒளிமிகுந்த மனம் வாய்த்தால் எந்த ஒருவிடயத்திலும் தெளிவு (clarity) பிறக்கும்.

ஒளிமிகுந்த மனம் உண்மையான தெய்வ ஞானத்தினை அடையத்தொடங்கும்; இதன் பிறகு தெய்வ ஞானமான மனமாக (intuitive mind) மாறும் இந்த மனம் பிரபஞ்சத்தின் சூஷ்ம தன்மைகளை விளக்கும். இந்த மனதை அடையாமல் ஞானபாதக் கருத்துக்களின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துகொள்ள முடியாது. இன்று சித்தாந்தம், வேதாந்தம் பற்றி கருத்துத் தெரிவிக்கும் ஆற்றல் பெற இந்த தெய்வ ஞான மனம் அவசியம். 

தெய்வ ஞான மனம் கிடைத்தால் அது தெய்வ சக்தியுள்ள மனமாக (over mind) மாறத்தொடங்கும். இப்படி மாறிய மனம் தெய்வ ஆற்றல்களை ஈர்த்து செயற்படும் தெய்வ ஆற்றலுள்ள மனமாக செயற்படும். 

இதன் பிறகு இந்த தெய்வ சக்தியுள்ள மனம் முழுமையான ஸத்திய ஒளி, ஆனந்தம், சைதன்யம் நிறைந்த மனமாக சத்திய மனமாக (super mind) மாறினால் பரிப்பூரண தெய்வ நிலை பெறுகிறான் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...