குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, August 16, 2022

ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி எனும் அருள் மழை 02

 


புராண ஸத்தியவான் ஸாவித்ரியை மனதிற்கு உளவியல் குறியீட்டு மொழியாக்கினார் ஸ்ரீ அரவிந்தர்!


திருமணத்தால் ஸத்யவான் மீது எல்லையற்ற அன்பைப் பொழிந்து காதலானாள் ஸாவித்ரி! 


இதை பாமர மனம்  கட்டிய கணவனிற்காக தன்னை அர்ப்பணித்த பெண் என்று கதை கட்டி மகிழ்ந்தது! 


ஸ்ரீ அரவிந்தரின் யோக அனுபவம் ஸாவித்ரி என்பது மனிதனிற்கு ஆற்றல் தரும் ஸக்தியின் செயற்பாட்டு இரகசியம் என்ற குறியீட்டு மொழி புரிந்தது!  


சத்தியத்தை வாங்கித் தாங்கியதால் ஸத்தியவான் ஆனான்; ஆனால் ஸத்தியத்தை வாங்கினாலும் பலமற்ற அற்ப ஆயுள்தாரி அவன்! மரணதேவனிடமும், அறியாமையிடமும் மாட்டிக்கொண்ட பலவீனன்! 


இதுவே ஒவ்வொரு மனித ஆன்மாவின் நிலையும்! ஒவ்வொரு ஆன்மாவும் ஒளி மிகுந்த ஸத்தியத்தன்மை உடையது! அதேவேளை மரணமும், அறியாமையிடம் சிக்கிக்கொண்டும் இருக்கிறது. 


நான் ஸத், சித், ஆனந்தன் என்ற உண்மையை உள்ளே தாங்கினாலும் மரணம், அறியாமை என்ற பலவீனத்தால் சூழந்த சத்தியவான் என்பதை ஒவ்வொரு யோக ஸாதகனும் அறிதல், புரிதல் வேண்டும் என்பது ஸ்ரீ அரவிந்தரின் நோக்கம்! 


இந்த பலவீனத்திலிருந்து எப்படி மீள்வது?


கருணை கொண்டு பேரொளியான பரம்பொருளின் கீழிறங்கி வரும் ஸத்தியத்தைக் காக்கும் கருணை மிகு ஆற்றல் ஸாவித்ரி!


புராணத்தில் பிரம்மா தனது படைப்பினை செயற்படுத்தும் ஆற்றல்கள் இரண்டு! 


ஸாவித்ரி 

காயத்ரி 


ஸாவித்ரி என்பது பேரோளியான இறைவனின் கீழிறங்கி பூமியில் செயல் கொள்ளும் ஆற்றலின் பெயர் என்று, காயத்ரி என்பது நவகோள்களிற்கு ஆற்றல் மூலமாக இருந்து சூரியன் வழி இறங்கி வந்து செயல் கொள்ளும் நிலை என்று விளக்கினார் ஸ்ரீ அரவிந்தர்! 


மனிதனுக்குள் இருந்து செயற்படும் பேராற்றலின் வடிவம் ஸாவித்ரி


சூரியன் வழி எமது மண்டலத்தை இயக்கும் பேராற்றலின் வடிவம் காயத்ரி!


ஸாவித்ரி உதிக்க முன்னிருக்கும் அதிகாலை நேரத்து சூரியனின் இருந்து வெளிப்படும் ஆற்றல்! இதனால் இவள் சூர்ய புத்திரி என்றார் ஸ்ரீ அரவிந்தர்! 


ஸாவித்ரி பரம ஸத்தியத்தின் பூரண வடிவம்; மனித உடல் தாங்கி பூவுலகு வந்து பேரறிவினைத் தரக்கூடிய ஆற்றல்; இவையெல்லாம் சேர்ந்த பேராற்றலுடைய மனித உடல் தாங்கிய பராசக்தியின் குறியீடே ஸ்ரீ அரவிந்தரின் காவிய நாயகி! 


இந்த பேரருள் ஏன் பூமிக்கு இறங்கி வரவேண்டும் என்ற கேள்விக்குப் பதில் அஸ்வபதி! அஸ்வம் என்றால் குதிரை என்று பொருள்! யோகத்தில் குதிரை என்றால் பிராணசக்தி என்று அர்த்தம்! தமிழ்ச் சித்தர்கள் பரி என்று இதைக் கூறுவர்! ஸாவித்ரி காவியத்தில் அஸ்வபதி ஒரு மகாதபஸ்வி! அவரின் தவத்தால் ஸாவித்ரி எனும் பேராற்றல் பூவுலகிற்கு இறங்கி வருகிறது! இதனால் அவர் பிராணனை அடக்கி ஆளும் அஸ்வபதியாக காவியத்தில் வருகிறார்!


ஆக பராஸக்தி இறங்கி செயல் கொள்ள சாதகன் பிராணனை அடக்கி தபஸு புரியும் அஸ்வபதியாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை புரியவேண்டும்!


தமிழ் சித்தர்கள் தமது வாசி, சிவயோக சாதனையில் மூன்றுவயதுப் பெண்ணாக வாலைப் பெண் பிறப்பாள் என்று கூறுவதும் இதைத்தான்! 


எந்த யோக சாதகனுக்கு தன் புலன் கள், பிராணன், மனம் மேல் கட்டுப்படுத்தும் பதியாகிய ஆற்றல் வாய்க்கிறதோ - அஸ்வபதியாக இருக்க முடிகிறதோ அவனிற்கு மகளாக அந்த பராசக்தி இறங்கி வந்து மனித உடலில் செயல்புரிவாள் என்பது ஸாவித்ரி காவியம் கூறும் இரகசியம்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...