குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, August 17, 2022

தலைப்பு இல்லை

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale எப்போதும் எமது சமூகத்திலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர தேவையான உதவிகளைச் செய்ய கவனத்துடன் செயற்பட்டு வருகிறது. 

இந்த அடிப்படையில் மாத்தளை பாக்கியம் தேசியக்கல்லூரியின் மாணவி ஒருவர் உயிரியல் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு தெரிவாகி இருக்கிறார்; குடும்பச் சூழலால் கல்வியை விடும் நிலையில் இருந்த அவர் கற்பதற்கு அவருடைய பாடசாலை ஆசிரியர்களும், அதிபரும் சேர்ந்து செய்த உதவியால் இன்று பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். 

தொழில்நுட்ப பாடங்களுக்கு கணனி இல்லாமல் கற்க முடியாது. இதை உணர்ந்து ஒன்றியத்தின் செயலாளர் Dr. Nishānthan Ganeshan தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் Ravi Shankar ஆகிய இருவரும் "ஐயம் இட்டு உண்" அறக்கட்டளையின் ஸ்தாபகரும், முன்னாள் ஈ-கல்வி தொண்டு நிறுவன தலைவருமான Muralee Muraledaran அண்ணா அவர்களின் நிதி உதவியுடன் மடிக்கணணி ஒன்றினை ஏற்பாடு செய்து அவரது கற்கைக்காக ஒன்றியத்தினூடாக வழங்கியுள்ளனர்.

இந்த மடிக்கணனி அவரது கற்கைக்கு கடனாக வழங்கப்படுகிறது என்பதையும், இந்தக் கடன் படித்து உயர்ந்த தொழிலிற்கு வந்தபின்னர் இதைப்போல் 10 பிள்ளைகளுக்கு நீங்கள் திருப்பி வழங்குவதன் மூலம் மீள் செலுத்த வேண்டும் என்று கூறினேன். உறுதியுடன் ஏற்றுக்கொண்டார். {இது ஒரு உத்வேகத்திற்கும், எதிர்காலச் சந்ததிமேல் பொறுப்புடன் நடந்துகொள்ளவும் சொல்லபட்ட வார்த்தை! அவர் அதை பக்குவமாக பாவித்துவிட்டு கல்வி முடிந்தவுடனோ, புதுக்கணனி வாங்கினாலோ இன்னொருவர் பாவிக்கும் வகையில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பது மாத்திரமே அவர் மீது சுமத்தப்பட்ட உத்தியோகப்பூர்வ நிபந்தனை!}

இந்த நிகழ்வில் ஒன்றியத்தின் தலைமை ஆலோசகர் என்ற அடிப்படையில் பங்குபற்றினேன்! நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர், ஒன்றியத்தின் ஆலோசகர் Jayaprakash Sithambaram, அதிபர் அவர்களும் பங்குபற்றினர்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...