குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, July 11, 2025

மந்திர ஸாதனை துரிதமாக பலனளிக்க வழி

 நீங்கள் உங்கள் வீட்டைச் சுத்தப்படுத்தி அழகுபடுத்த விரும்புகிறீர்கள், இதற்கு ஒரு தொழில் சார்ந்த நிபுணரை அழைக்கிறீர்கள். அவரிடம் உங்கள் வீட்டைப் பற்றியோ, அதன் அமைப்பற்றியோ, என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியோ எதையும் சொல்லாமல் வெறுமனே வீட்டை அழகுபடுத்தித் தரும் படி கேட்கிறீர்கள். இப்போது அந்த நிபுணர் அதிக நேரம் செலவிட்டு உங்கள் வீட்டை முழுமையாக படித்து அதன்படி திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். இதற்கு அதிக நேரமும் கட்டணமும் செலவாகும். 


நீங்கள் உங்கள் வீட்டை முழுமையாகக் கற்று, எதைத் திருத்தம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் நீங்கள் பட்டியலிட்டு அதில் நீங்களே திருத்தக்கூடியவற்றை நீங்கள் செய்துகொண்டு மிகுதியை நிபுணரிடம் கையளித்தால் வேலை வேகமாகவும், செலவும் குறைவாகவும் இருக்கும்.


இதே தத்துவம்தான் நாம் மந்திர சாதனையில் எமது கர்மங்கள் நீங்க, விருப்பங்கள் நிறைவேறவும் பயன்படுகிறது. எம்மிடம் சங்கல்பமும், சுய ஆய்வும் அதன் மூலம் எமது பலகீனங்களை நீக்குவதற்கு உறுதியும் இல்லாத போது பலன் பெற அதிக மந்திர ஜெபமும், நீண்ட சாதனையும் தேவை. அதேவேளை உறுதியான சங்கல்பமும், தொடர்ச்சியான சாதனையும், எமது பலவீனங்களை ஆராய்ந்து அவை நீங்கவேண்டும் என்ற இச்சாசக்தியையும் செலுத்தும் போது சாதனை துரிதமாகப் பலனளிக்கும் !


ஆகவே துரிதமாகப் பலன் பெற நீங்கள் உறுதியாக உங்கள் சங்கல்பசக்தியை பிரயோகிப்பதும், அது நடைபெறுவதற்கு உங்களில் தடையாக இருக்கும் பண்புகளை நீக்குவதும் அவசியம்! இல்லாவிடில் நீண்டகாலம் தொடர்ச்சியாகச் சாதனை செய்ய வேண்டியிருக்கும். அடிப்படையில் தமாஸீக புத்தியில் இருப்பவர்கள் நீண்டகாலம் சாதனை செய்து பலன் கிடைக்கவில்லை என்றவுடன் ஸாதனையில் சோர்ந்து விலகிவிடுவார்கள்.

Saturday, July 05, 2025

பக்தியுடன் செய்யப்படும் மந்திர சாதனை ஏன் துரிதமாகப் பலனளிக்கும்?

 

 

பக்தியுடன் செய்யப்படும் மந்திர சாதனை ஏன் துரிதமாகப் பலனளிக்கும்?

பக்தி என்பது தனது அனுஷ்டான தெய்வத்திடம் முழுமையாக மனம், புத்தி, சித்த, அங்காரங்களைச் சரணாகதி அடையச் செய்வது. இப்படியான நிலையில் மந்திர ஜெபத்தைத் தவிர வேறு எதுவும் சித்தத்தில் விருத்தியாகாது. ஆகவே குறைந்தளவு ஜெபத்தில் நாம் சங்கல்பித்த காரியம் ஜெயமாகும்.

அதீத ஆராய்ச்சி புத்தியுடையவர்கள், கேள்வி கேட்டு தமது மனதைப் பழக்கியவர்கள், சந்தேகபுத்தியுள்ளவர்களுக்கு பக்தி இலகுவில் வாய்க்காது. இவர்களது புத்தி எப்போது தர்க்கத்தையை நம்புவதால் தாழ் மனதின் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட நுண்மையான உயர் தெய்வீக ஒளி மனதின் செயல்களை இவர்களால் புரிந்துகொள்ள முடியாததால் மந்திர சாதனையில் வெற்றிபெற கஷ்டப்படுவார்கள்.

சிலர் தமது சித்த விருத்திகளால் விபரீத எண்ணங்களை உருவாக்கிக் கொள்வதும் உண்டு! ஆகவே உங்கள் தர்க்க புத்தியை சற்று அடக்கி பூரண சரணாகதியுடன் பக்தியுடன் மந்திர சாதனை செய்வீர்களாக இருந்தால் துரிதமாகப் பலன் காணலாம்!

நாம் நினைக்கும் காரியங்கள் எமக்கு நடக்காமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன?

 நாம் நினைக்கும் காரியங்கள் எமக்கு நடக்காமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன?

குறித்த காரியம் நடைபெறுவதற்கான தகுந்த சித்த சம்ஸ்காரங்கள் எம்மில் இல்லாதது,

சம்ஸ்காரம் இருந்தாலும் அதை எப்படிச் செய்வது என்ற தெளிவு புத்தியில் இல்லாமல் இருப்பது,

அப்படியிருந்த்தாலும் நாம் செய்த சில பாப வினைகள் அந்த சித்த சம்ஸ்காரங்களை செயற்படவிடாமல் தடுப்பதாலும்,

தகுந்த சித்த சம்ஸ்காரங்கள் இருந்தாலும் அதைச் செயற்படுத்த தகுந்த சக்தி இல்லாமல் இருப்பதாலும்,

சித்தத்தில் சம்ஸ்காரம் இருந்தாலும் தகுந்த ஆங்காரம் இல்லமையால் அந்தச் செயலைச் செய்வதற்குரிய உத்வேகம் எம்மில் இல்லாமலும் இருப்பதால் எம்மால் நாம் நினைக்கும் காரியங்களில் வெற்றியடைய முடிவதில்லை.

மந்திரம் என்பது மனனம் செய்யும் போது எமது மனதைக் காப்பது என்று அர்த்தம்; மந்திர சாதனை மூலம் நாம் எமது மனதின் சலனத்தைக் குறைத்து சித்தம், புத்தி, ஆங்காரம் ஆகியவற்றை நமது காரிய சாதகத்திற்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கலாம். நாம் செய்யும் சங்கல்பம் சித்தத்திற்கு தகுந்த சமஸ்காரத்தையும், புத்தியிற்கு அதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற தெளிவையும், ஆங்காரத்திற்கு அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதியையும் தரும். பின்னர் மந்திர ஜெபத்தின் மூலம் இதற்குரிய தெய்வீக ஆற்றல் எமது அந்தக்கரணங்களுக்குப் பெறப்படும்.

ஒருவனுக்கு காரிய சாதகமாகுவதற்குரிய ஜெபக்கணக்கு அவனது சித்த சமஸ்காரத்தின் தன்மையைப் பொறுத்து இருக்கிறது. அழுக்கு நிறைந்த, பாப சம்ஸ்காரங்கள் நிறைந்த சித்தமாக இருந்தால் அதிக மந்திர ஜெபமும், தூய்மையனா, பாப சம்ஸ்காரங்கள் அற்ற சித்தமாக இருந்தால் குறைந்தளவு ஜெபத்திலும் காரியம் சாதகமாகும்.

இதைப் புரிந்து சாதனை செய்வீகளாக

Friday, July 04, 2025

அனுஷ்டானம் மந்திர சாதனை எப்படிப் பலனளிக்கிறது?

 

பலருக்கு உபாசனை, அனுஷ்டானம், ஸாதனை எப்படி தமது சங்கல்பங்களை நிறைவேற்றுகிறது என்பது பற்ற்றிச் சரியான புரிதல் இல்லை. தாம் மந்திரம் ஜெபித்தவுடன் உடனே கடவுள் தமது வேலைக்காரன் போல் எல்லாவற்றையும் காலடியில் கொண்டு வந்து வைத்துவிடுவார் என்று நினைக்கிறார்கள்.

நாம் உபாசிக்கும் தெய்வம் எம்மை விட கணக்கிலடங்கா ஆற்றலும், அறிவுசக்தியும் நிறைந்த உயர்ந்த சக்தி, ஆகவே சாதாரணமாக அதிகாரம் படைத்த ஒரு அதிகாரியிடம் சென்று நாம் விரும்பியவாறு லஞ்சம் கொடுத்து அவரை விலைக்கு வாங்கி எமது காரியம் சாதித்துக்கொள்ளலாம் என்பது போன்ற முட்டாள் சிந்தனை இருக்கக்கூடாது.

எல்லா தெய்வ சக்திகளும் பிரபஞ்ச நியதியை ஒட்டியே தமது ஆற்றலையும், அறிவு சக்தியையும் வழங்கும். அதை நாம் பெற்று எமது செயல் சக்திமூலம் எமது காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.

ஒரு காரியத்தை சங்கல்பித்து நாம் அனுஷ்டானம் செய்தால் முதலில் அந்த தெய்வ சக்தி எமது அறிவில் தெளிவையும், பின்னர் உடல், மனதில் அந்தக்காரியத்தை ஆற்றுவதற்குரிய சக்தியையும் வழங்கும். இந்த இரண்டும் நடைபெற்றவுடன் அந்த சாதகன் தான் சங்கல்பம் செய்த காரியத்திற்குரிய செயலில் இறங்கி முயற்சிக்க காரியம் சிறப்பாக நடைபெறும். சாதகன் தனது சோம்பேறித்தனத்தால் எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால் செய்த அனுஷ்டானத்தின் சக்தி வீணாகலாம்.

ஆகவே நீங்கள் செய்த சங்கல்பத்திற்குரிய செயலை முயற்சிப்பது கட்டாயமாகும்.

மந்திர ஸாதனை துரிதமாக பலனளிக்க வழி

 நீங்கள் உங்கள் வீட்டைச் சுத்தப்படுத்தி அழகுபடுத்த விரும்புகிறீர்கள், இதற்கு ஒரு தொழில் சார்ந்த நிபுணரை அழைக்கிறீர்கள். அவரிடம் உங்கள் வீட்ட...