இந்தப் பாடல்
ஒரு பைரவ
உபாசகன் பெரும்
சுக போக
வாழ்க்கையையோ, பெரும்
சாதனைகள் செய்யும்
வாழ்க்கையையோ அல்லது
எவருக்கு கீழாக
வேலை செய்யும்
வாழ்கையையோ, பெரும்
உழைப்புடன் வாழும்
எவராக இருந்தாலும் பைரவ உபாசகராக
இருந்தால் அவருக்கு
புத்தி விழிப்படைந்த விழிப்புணர்வு நிலை
வாய்க்கும் என்று
இந்தப் பாடலில்
தியானிக்கிறார். இந்தப்
பாடலில் பைரவரின்
தலையில் ஒளி
மிகுந்த இளம்
சந்திரன் என்பது
மனதைக் குறிப்பது; மனதில் பைரவரின்
ஒளி நிறைய
புத்தி விழிப்படையும் என்பது இதன்
அர்த்தம்!
பைரவ உபாஸனை
புத்தியை விழிப்படைவித்து விழிப்புணர்வுடன் கூடிய
வாழ்க்கையைத் தரும்.
இன்றைய காசிகாபுராதி நாத காலபைரவருடைய அலங்காரத்தில் இளம்
பிறை இருப்பதும், இன்றைய தியானத்திற்குரிய பாடலும் ஒன்றாக
இருப்பது நாம்
மகா காலபைரவரின் அருளாசியுடன் தான்
எழுதுகிறோம் –
நீங்கள் படிக்கிறீர்கள் என்பதற்கு சான்றாகிறது.
இந்திரன் வாழ்க்கையும் நான் முகன்
வாழ்க்கையும் ஈர்ந்துளவோன்
நந்தமில் வாழ்க்கையும் பெற்றாலும் நின்னடியார்களுக்குப்
புந்திசெய் வாழ்க்கையை ஒவ்வாது காண்
ஒளி பூண்ட
இளஞ்
சந்திர சேகரனேகாழி யாபதுத் தாரணனே.
ஒருவன் இந்திரன்
போன்ற போக
வாழ்க்கை பெற்றாலும்
நான் முகனைப்
போன்று படைக்கும் ஆற்றலுடைய வாழ்க்கை
பெற்றாலும்
மற்றவர்களிடம் செல்வத்திற்கு கையேந்தும் வாழ்க்கையைப் பெற்றாலும்
பெரும் உழைப்பு
இல்லாத வாழ்க்கையைப் பெற்றாலும்
பைரவ உபாசகருக்கு புந்தி –
புத்தி விழிப்படைந்த வாழ்க்கையை மறுக்காமல் கொடுக்கும்
ஒளி பூண்ட
இளம் சந்திரனைச் சூடிய
சீர்காழிப்பதி உறையும்
ஆபத்துத் தாரண
பைரவரே
உம்மை நான்
தியானிக்கிறேன்!
{ஸ்ரீலஸ்ரீ சிவஞான
தேசிக சுவாமிகள் அருளிச் செய்த
ஆபத்துத்தாரண மாலை
பாடல் 30}
இன்றைய காசிகாபுராதி நாத காலபைரவரின் மங்கள அலங்காரம் அனைவரது தரிசனத்திற்காகவும்!