குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, March 26, 2024

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள் 

எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால் 

சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்துவம் ஏற்றினாள்

ஒவ்வொரு பூரணையாக உத்தர நிறைமதியில் நிறைத்தாள் பூர்த்தி  வித்தையை

துவாதச பஞ்சதசம் பூர்த்திசெய்வித்தாள் ஒவ்வொன்றும் 

இருபட்சமாய் பன்னிரெண்டு மதிமாதத்தில் குருவருளாளே 

அம்ருத ஆநந்தத்தின் பேருளால் பதினாறு வயதுடையவள் அழகு காண 

ஆத்ம ஆநந்தத்தின் பேரருளால் ஏறினேன் பதினாறு படிகளும் 

அம்ருதமும் ஆத்மாவும் இரண்டல்ல அவளேயான ஒன்றென்று 

காட்டினாள் அனுபவத்தில்

Wednesday, March 13, 2024

காலபைரவ தியானம் – 42

 



இந்தப் பாடல் ஒரு பைரவ உபாசகன் பெரும் சுக போக வாழ்க்கையையோ, பெரும் சாதனைகள் செய்யும் வாழ்க்கையையோ அல்லது எவருக்கு கீழாக வேலை செய்யும் வாழ்கையையோ, பெரும் உழைப்புடன் வாழும் எவராக இருந்தாலும் பைரவ உபாசகராக இருந்தால் அவருக்கு புத்தி விழிப்படைந்த விழிப்புணர்வு நிலை வாய்க்கும் என்று இந்தப் பாடலில் தியானிக்கிறார். இந்தப் பாடலில் பைரவரின் தலையில் ஒளி மிகுந்த இளம் சந்திரன் என்பது மனதைக் குறிப்பது; மனதில் பைரவரின் ஒளி நிறைய புத்தி விழிப்படையும் என்பது இதன் அர்த்தம்!

பைரவ உபாஸனை புத்தியை விழிப்படைவித்து விழிப்புணர்வுடன் கூடிய வாழ்க்கையைத் தரும்.

இன்றைய காசிகாபுராதி நாத காலபைரவருடைய அலங்காரத்தில் இளம் பிறை இருப்பதும், இன்றைய தியானத்திற்குரிய பாடலும் ஒன்றாக இருப்பது நாம் மகா காலபைரவரின் அருளாசியுடன் தான் எழுதுகிறோம் நீங்கள் படிக்கிறீர்கள் என்பதற்கு சான்றாகிறது.

இந்திரன் வாழ்க்கையும் நான் முகன் வாழ்க்கையும் ஈர்ந்துளவோன்

நந்தமில் வாழ்க்கையும் பெற்றாலும் நின்னடியார்களுக்குப்

புந்திசெய் வாழ்க்கையை ஒவ்வாது காண் ஒளி பூண்ட இளஞ்

சந்திர சேகரனேகாழி யாபதுத் தாரணனே.

ஒருவன் இந்திரன் போன்ற போக வாழ்க்கை பெற்றாலும்

நான் முகனைப் போன்று படைக்கும் ஆற்றலுடைய வாழ்க்கை பெற்றாலும்

மற்றவர்களிடம் செல்வத்திற்கு கையேந்தும் வாழ்க்கையைப் பெற்றாலும்

பெரும் உழைப்பு இல்லாத வாழ்க்கையைப் பெற்றாலும்

பைரவ உபாசகருக்கு புந்தி புத்தி விழிப்படைந்த வாழ்க்கையை மறுக்காமல் கொடுக்கும்

ஒளி பூண்ட இளம் சந்திரனைச் சூடிய

சீர்காழிப்பதி உறையும் ஆபத்துத் தாரண பைரவரே

உம்மை நான் தியானிக்கிறேன்!

{ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள் அருளிச் செய்த ஆபத்துத்தாரண மாலை பாடல் 30}

இன்றைய காசிகாபுராதி நாத காலபைரவரின் மங்கள அலங்காரம் அனைவரது தரிசனத்திற்காகவும்!



Tuesday, March 12, 2024

மகாபாரதம்

 



வருகிறது முழு மகாபாரதம் சிருஷ்டியின் ஆய்வு நூலகத்திற்கு!

மகாபாரதம் தான் மனிதகுலத்தின் Programming code - வியாசகர் மூலாதாரத்து கணபதியின் துணையோடு எழுதி இந்த பிரபஞ்ச பேரேட்டில் பதித்து வைத்து விட்டார். இதன் படி எமது மனங்கள், சித்தம் காலத்திற்கு காலம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

இதில் மனிதனது துர்க்குணங்களின் போராட்டம், சுய நலம், மமதை, அறிவு, ஆற்றல், தெய்வ சக்தி எப்படிப் பரிணாமத்தை நடத்துகிறது என்ற எல்லாக் கதைகளும் உண்டு! இன்று நாம் சொல்லும் எல்லாக் கதைகளும் மகாபாரதத்தின் மிமிக்கிரிதான்!

வியாசர் எழுதிய மூல மகாபாரதத்தை ஒவ்வொருவரும் தமது தகுதிக்கு ஏற்ப கதைகளாக எழுதி வைத்தார்கள்! இவை எல்லாம் வழி நூல்கள்!

வியாசரின் மூல நூல் ஆங்கில மொழிபெயர்ப்பாக கிசாரி மோகன் காங்குலி (1848 1908) அவர்களால் செய்யப்பட்டது. 80000 ஸ்லோகங்கள் உடையது! இதை செ.அருட்செல்வப் பேரரசன் அவர்கள் வலைத்தளத்தில் எழுதி வந்தது இன்று தொகுப்பாக மொத்தம் 14 பாகங்களாக வெளிவந்துள்ளது! சிருஷ்டியின் ஆய்வு நூலகத்திற்கு ஒரு பிரதி மாணவர் ஒருவர் வாங்கியனுப்பியிருக்கிறார்.

Zero Degree பதிப்பகம் 23% கழிவுடன் தற்போது தருகிறார்கள், இணைப்பு முதல் கொமெண்டில் இருக்கிறது! ஆர்வமுள்ளவர்கள் உங்கள் நூலகத்திற்கு வாங்கிக்கொள்ளுங்கள்.



 

 

Srishti's yoga classes

  Srishti's yoga classes start tomorrow; Today Sahasra Gayatri prayer at Gurunathar Gayatri Peedam as the promise of Agathi Maamak...