குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, February 11, 2015

தமிழில் ஏன் எழுத்துக்கள் உயிர், மெய், உயிர் மெய் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது?


எழுத்து என்பது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாகும். இந்த ஒலி எழுப்ப படுவதற்கு காற்றின் அசைவு அவசியமாகும். இது ஒலியின் பரு (ஸ்தூல) அமிசம். 

ஒலியின் நுண்ணிய (சூக்ஷ்ம) அமிசம் காற்றாகிய பரியில் ஏறி உடலிற்குள் பயணிக்கும் உயிராகிய பிராணனுடன் தொடர்புடையது. இதனையே சித்தர்கள் பரி என்றும் வாசி என்றும் கூறினார்கள். இதன் செய்கையினையே தொல்காப்பியர் கீழ்வருமாறு கூறுகிறார்;
உந்தி முதலா முந்து வளி தோன்றி, 
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ, 
பல்லும் இதழும் நாவும் மூக்கும் 
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் 
உறுப்புஉற்று அமைய நெறிப்பட நாடி, 
எல்லா எழுத்தும் சொல்லுங் காலை 
பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல 
திறப்படத் தெரியும் காட்சி யான 
(
தொல்காப்பியம் .எழுத்து.83)


இதனை உரை செய்த தற்காலத்து தமிழ் அறிஞர்கள் (??) வளி உந்தி வரை போகாது, நுரையீரல் வரைதான் போகும், தொல்காப்பியருக்கு அந்த விஷயம் தெரியாது என்று பொருள் பட எழுதுகிறார்கள். பரிதாபம் என்ன வென்றால் முன்னோர்கள் பருப்பொருளுக்கு ஆதியான சூட்சுமத்தினை பற்றி ஆழமாக அறிதலையே உண்மை அறிவு என்று கொண்டார்கள், இதனை இவர்கள் அறிகிலர்!

உயிரெழுத்துக்கள் உச்சரிக்கப்படும்போது காற்றும் உயிரும் தடங்கலின்றி உடலினுள் அசைந்து உயிரினை வளர்க்கும். அதனால் அவை உயிரெழுத்துக்கள் எனப்பட்டது.

மெய்யெழுத்துக்கள் உச்சரிக்கப்படும் பொது காற்றும் உயிரும் தடைப்பட்டு உடலில் சேரும். ஆக வெளியில் இருந்து வரும் உயிராகிய பிராணனை உடலாகிய மெய் இல் சேர்ப்பதால் மெய்யெழுத்துக்கள்.

இப்படி எழுத்துக்களை உச்சரிக்கும் அளவினை கொண்டு உடலினுள் செல்லும் உயிராகிய பிராணனை வளர்க்கும் முறைகளுகாகவே எழுத்திலக்கணமும், எழுத்தின் துணைகொண்டு உருவாகும் செய்யுள்,  உயிரை உடலில் நிறுத்தும் இலக்கணமான  யாப்பிலக்கணமாகவும் உருவாக்கப்பட்டது.  

ஆக யாப்பிற்கமைய எழுதப்பட்ட பாடல்கள் உயிரினை வளர்க்கும் வல்லமை உடையவை. அதனால்தான் காலம் கடந்தும் பல தமிழ் நூல்கள் இன்றும் இருக்கின்றன.

உயிரான பிராணன் உடலில் இருந்தால் மனதில் கவலை நீங்கி மகிழ்ச்சியும், வாழ்வில் சிறப்பும் உண்டாகும் என்று அறிந்த முன்னோர்கள் அவற்றினை மக்கள் பெறவேண்டும் என்பதற்காக இறை நம்பிக்கையினை ஏற்படுத்தி அவற்றிற்கு துதியாக தேவாரம், திருவாசகம், அந்தாதி என்றவாறு இயற்றி வைத்தனர்.

இந்த உண்மையினை நேருக்கு நேராக சித்தர் பாடல்களும், யோக சாத்திரமும் விளக்கும். யோக சாத்திரம் கூறும் பிராணாயாமம் தேவாரம், திருவாசகம் மேலும் யாப்பு பிறழாமல் இயற்றப்படும் செய்யுள்களும் உயிராகிய பிராணனை ஒலியால் சமப்படுத்தி மனதிற்கும் உடலிற்கும் இன்பம் தரும்.


இந்த அடிப்படை சமஸ்க்ருதத்திற்கும் பொருந்தும், மந்திரங்களும் இந்த அடிப்படையில் உள்ளவையே! 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...