குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, October 16, 2020

தலைப்பு இல்லை

இன்றைய மானச யோக வித்யா வகுப்பில் ஒரு மாணவர் சித்தர்களின் பாடலிலிருந்து நாம் கற்கும் மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் என்ற அந்தக் கரணத்திற்கான விளக்கம் கீழ்க் குறித்த பாடலின் மூலம் விளக்கும்படி கேட்டிருந்தார்!

காலாங்கி நாதர் பாட்டு;

மூத்தெனென்ற பெரியோர்கள் அறிந்து கொள்வார்கள்

முன்னவனை முன்னிறுத்தி என் பேர் சொல்லி

சித்தம் வைத்துப் புத்திக் கொண்டு உத்துப்பாரு

சிவசிவா வசியசிவா வென்றே சொல்லி

நித்தமும் அஸ்தஞ் சித்திரையாஞ் சோதி 

நீயறிவாய் 

நீ சோதியை உன்னுள் அறிய வேண்டுமானால், முன்னவன் என்ற சிவனை நினைவில் நிறுத்தி, குருவாகிய என் நாமத்தைச் சொல்லி, சித்தத்தை ஏகாக்கிரமாக நிறுத்தி, மனதில் எழும் எண்ணங்களை புத்தியைக் கொண்டு கவனமாக உற்றுப் பார்த்துக் கொண்டு மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு வருவாய்! அஸ்தமனமாகாத சோதியை நித்தமும் காண்பாய்! என்பது இதன் பொருள்!

இதன் சிறப்பமிசம் என்னவென்றால் இது எப்படி எமது அந்தக் கரணத்தை இறை சக்தியில் நிறுத்தி சித்தி பெறுவது என்ற சூத்திரத்தை - இரகசியத்தைச் சொல்லித்தருகிறது. 

சித்தம் இறைவனில் ஒன்றியிருக்க வேண்டும்! அதேவேளை குருவின் நாமத்தினால் நாம் சிந்தையை நிறுத்த வேண்டும், இப்படிச் செய்யும் போது எமது சித்தத்தில் ஏற்கனவே இருக்கும் பதிவுகளின் படி சித்தம் விருத்திகளைக் கவனிக்கும் போது புத்தியைக் கொண்டு விழிப்புணர்வுடன் அவதானித்து அவற்றை நீக்கிக் கொண்டு மந்திர ஜெபம் செய்பவன் ஜோதி தரிசனம் என்ற சித்தியை அடைவான்! 

இன்றைய உரையாடல் இந்தப் பாடலில் ஆழமான விளக்கமான தெய்வ ஞானம் பெறல் (intution development) போன்ற கோட்பாடுகளைக் கூறுகிறது என்ற விபரம் உரையாடப்பட்டது!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...