குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, October 13, 2020

முரண்படுபவர்களுடன் வேலை செய்யுங்கள்

நீங்கள் ஒரு விஷயத்தை நல்லது என்று ஆழமாக நம்பிக்கொண்டிருக்கீறீர்கள்; அப்போது அதேபோல் நம்பும், உங்களை ஆதரிக்கும், ஒருவரைக்காணும் போது நீங்கள் பூரித்து உங்கள் காரியம் நடக்கும் என்று நம்பத்தொடங்குவீர்கள்!

இப்படி அவர்கள் நடப்பது இரண்டு காரணங்களுக்காகவே எப்போது இருக்கும்;

1) அவர்கள் உண்மையில் உங்கள் நம்பிக்கையை ஆழமாக நம்பி அதற்காக ஒத்திசைபவர்களாக இருப்பார்கள்.

2) இல்லையென்றால் உங்கள் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவர்களாக, அல்லது உங்கள் அதிகாரம், ஆற்றலுக்கு பயந்தவர்களாக உங்களை வீணாக சீண்டினால் அவர்களுக்கு ஆபத்து என்று எண்ணும் எண்ணத்திற்காக உங்களுக்கு முகஸ்துதி செய்பவர்களாக இருப்பார்கள். 

இப்படியான இரண்டு நபர்களும் உங்களைச் சூழ இருக்கும்போது உங்கள் மனப்பாங்கு போதையேறும்; அதீதமாக உங்களை நம்பத்தொடங்குவீர்கள்! நீங்களே உங்களை சிங்கமாகவும், ராஜாவாகவும் எண்ணத்தொடங்கி பெருமிதமடையத் தொடங்குவீர்கள்! இது இறுதியில் உங்களை முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லாது. 

இதேவேளை நீங்கள் சந்திக்கும் நபர் உங்களது கருத்துக்களை, பெறுமதிகளைக் கொண்டிருக்கவில்லை, பிரச்சனைக்குரியவர் அவர் உங்களுக்குத் தொல்லை தருபவராக இருக்கலாம். அவரது கருத்துக்காகத்தான் நீங்கள் வேலைசெய்ய வேண்டி வரலாம். 

ஆனால் இது உங்கள் எண்ணத்தை, யோசனைக்கு புதுப்பரிணாமம் கொடுக்கும்; நீங்கள் உங்கள் குறுகிய எண்ணத்திற்குள் இருந்து செயலாற்றுவதை உடைத்து புதுப்பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும்; அதனால் நீங்கள் புதியதொரு நிலையைத் தேர்ந்தெடுப்பீர்கள்! அந்த நட்பு வாழ்க்கை சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும்! 

எமது மனத்தைத் திறந்து உங்கள் ஆற்றலை மேம்படுத்தும். உங்களுக்கு "ஆமா சாமி" போடுபவர்களை விட உங்களை எதிர்த்துக் கருத்துச் சொல்பவர்கள், பிரச்சனை கொடுப்பவர்களுடன் வேலைசெய்யும் சந்தர்ப்பம் மனதிற்கு பொன்னான புதிய புரிதல்களைத் தரும் தருணம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...