குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, October 10, 2020

ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 10

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

******************************************

குண்டலினி யோகம் முழுமையும் காளி வித்தையால் சாதிப்பது எப்படி என்ற சாவியை இந்தப் பாட்டில் திறந்து காட்டியிருக்கிறார்! 

குருவின்றி இந்த வித்தை பயிற்சிக்கும் அதிகாரம் இல்லை! அவளருளுடையோருக்கு அர்த்தம் புரியட்டும்! 

**************************************************

குலகுண்டலினி – பிரம்ம பூர்ணம் – தாரா

*****************************************************

குல குண்டலினி! பூரண பிரம்மமே! தாரா

நீ என்னுள் இருக்கிறாய்

நீ என்னுள் இருக்கிறாய் 

தாயே

மூலாதாரத்தில், சஹஸ்ராரத்தில், எண்ணியதெல்லாம் தரும் மணிப்பூரகத்தில்!

கங்கை இடதுபுறம் பாய்கிறாள், யமுனை வலதுபுறம் பாய்கிறாள்!

இருவர் நடுவில் சரஸ்வதி ஓடுகிறாள்! எங்கு சிவமும் ஸக்தியும் பிரகாசிக்கின்றனரோ அங்கே!

உன்னைத் தியானித்தல் என்பது 

மாணிக்க செம்பாம்பு ஸ்வயம்பு லிங்கத்தை சுற்றியதைப் போல்!

இங்கனம் தியானிப்பவன் பூரண ஆசி பெற்றவன்! 

போற்றத்தக்க தாமரைகள்

மூலாதாரம், சுவாதிஷ்டானம், நாபியில் மணிப்பூரகம்

அ நாகதம், விசுத்தி! 

நீ அக்ஷரமாக அவதரிக்கிறாய்!

வம் தொடங்கி ஸம்

பம் தொடங்கி லம்

டம் தொடங்கி பம்

கம் தொடங்கி டம்

அகராதி சோடஷமாய் கழுத்தில்

ஹம் க்ஷமாய் புருவமத்தியில்.

என் குரு உறுதியாய் உபதேசித்தாரே;

அவர் சொன்னார் நீ எனது உடலில் இப்படி இருக்கிறாய் என்று!

நாற்கரத்து பிரம்மன், டாகினியும் அவள் பஞ்சசக்தியும்

ஏறிவரும் தாமரையில் இருக்க! 

யானையும், முதலையும் ஆட்டுக்கடா, மான், யானை!

உன் மூச்சுக் கும்பித்தால் அவளை உணரலாம்

ஹ்ரீங்காரிக்கும் மதுவருந்திய தேனியின் ஒலியாக உள்ளே ஒலிப்பாள்

பிருதிவி, அப்பு, தேஜோ, வாயு, ஆகஸம் அனைத்தும் கரையும் உடனே

யம் – ரம் – லம் – ஹம் – ஹௌம் என்ற அக்ஷரம் ஒலித்தவுடனே!

என்னைக் கருணைப் பார்வைக்குள் எறிந்துவிடு

நான் மீண்டும் பிறந்து வருவேன்!

உன் பாதம் மட்டுமே மூழ்கும் அம்ருதம்

நீயே ஸக்தி, அநாகதத்வனி!

சிவம் ஓமென்ற பிந்து

சந்திரன் போன்ற பூரண அம்ருதம்

இந்த ஒரே பரம்பொருளை எப்படிப் பிளக்க முடியும்?

பூஜையும், துவைதம், அத்வைதம் என்ற முரண்பாடும் பற்றி

எனக்குக் கவலையில்லை!

காலத்தின் மகா எஜமானி காலத்தை நசுக்குவாள்

ஒரு தடவை உறக்கம் கலைந்தால் 

பிறகு உறக்கம் என்பதில்லை அந்த ஆத்மனுக்கு!

அது சிவமாக மாறிப்போகும்! 

அவன் மீளப் பிறந்தாலும் ஒரு புதிய உணர்வுடன் பிறப்பான்!

அவனுக்கு முக்தி என்பது மகளைப்போல் வணங்கி நிற்பாள்

ஆக்ஞா சக்கரத்தை துளை;

பக்தனின் விரக்தி காணாமல் போகும்

சதுர், சஷ்டி, தச, துவாதச சோடஷ துவி

என்ற ஆறு தாமரைகளினூடு பயணித்து 

உச்சியிலே சஹஸ்ரதள பதுமத்தைச் சேர்ந்திட வேண்டும்!

பெண் அன்னம் தன் கம்பீரத் துணையுடன் கூடி நிற்கும்

இறைவனின் கோட்டையிலே

பிரசாத்தின் வார்த்தைகளைக் கேளுங்கள்;

யோகியானவன் பேரின்பச் சாகரத்தில் மிதப்பான்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...