{தாந்திரீக ஞானப்பாடல்கள்}
*****************************************
மனமே அவளைக் காதலி!
>>>>>>>>>>>>>>>>>>>>
மனமே அவளைக் காதலி!
அவள் கப்பலேற்றிக் கடத்துவாள்
பிறப்பு இறப்பு என்ற சாகரத்தை.
இந்தப்பயனற்ற சந்தையிலே வரிகளைக் கட்டிக்கொண்டிருக்கிறோம்
செல்வமும், குடும்பமும் உண்மையென அறியாமையில் நம்பிக்கொண்டிருக்கிறோம்
உனது கடந்த காலத்தை மறந்து விட்டாயா?
நீ எங்கிருந்தாய்? எங்கு வந்திருக்கிறாய்?
எங்கு போகிறாய்?
நீ எதையும் அணிவதில்லை
ஆனால் உலகத்தில் அணியப்பட்டுள்ளாய்!
இந்த மந்திரிப்பு உன்னை மாய நடனத்தில் ஆடவைக்கிறது!
நீ ஆடுகிறாய் அவள் மடியில் அமர்ந்து அவள் சிறையில் வசிக்கிறாய்!
எம்மை திருப்திப்படுத்தும் வஸ்துக்களுடன்
ஆணவம், வெறுப்பு, அன்பு, பற்று காட்டுகிறோம்!
உனது இராச்சியத்தை ஏன் இவற்றுடன் பகிரச் செய்கிறாய்?
காரணத்தைச் சொல்லுவாய்?
நீ செய்திருப்பது எவராலும் உதவமுடியாத ஒன்று!
நாட்கள் சென்றுவிட்டது!
மணித்துவீபத்தில் சிவனார் தனது வீட்டில் அமர்ந்து
எப்போதும் அவளைத் தியானம் செய்கிறார்!
பிரசாத் கூறுகிறேன்,
துர்க்கையின் அம்ருத நாமம் முக்தியளிக்கும்
நிறுத்தாமல் ஜெபித்திடு
உன் நாவானது அம்ருதத்தில் நிறையும்!
ராம் பிரசாத் ஸென்
தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.