குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, October 07, 2020

தலைப்பு இல்லை

சென்ற நவராத்ரி குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலை உணர்ந்ததை பொருளாக எழுதி அனைவருடனும் பகிரும் பேறு பெற்றோம்! 

இந்த முறை பத்து நாட்களுக்கு முன்னராகவே தொடங்கியாயிற்று! 

நேற்று இரவு அன்னை காளியின் உபாசகர் ராம்பிரசாத் சென் அவர்களின் பாடல்களைப் படிக்க, ஆகா தமிழில் புரிந்தால் எப்படியிருக்கும் என்று மொழிபெயர்க்க என்று நேற்று இரவு பிடித்த போதையை நவராத்ரி வரை தொடரலாம் என்று எண்ணம்! இது எப்படி நடந்தது என்பதை இன்னும் ஆராய்ந்துகொண்டிருக்கிறேன்! புரியவில்லை! 

ராம்பிரசாத் சென் பதினெட்டாம் நூற்றாண்டில் வங்காளத்தில் வாழ்ந்த தாந்திரீக காளி உபாசகர்! வங்காளத்து சாக்த பக்திப்பாடல்களின் முன்னோடி! ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் மனதில் நின்ற உபாசகர்! காளி உபாசனையில் இவர் பாடல்கள் தவிர்க்க முடியாதவை!

காளியை பயங்கரி என்று பயந்து ஒதுங்குபவர்களுக்கு அவர் பாடல்கள் அவள் சாதனையின் தத்துவத்தை உவமானம் காட்டிப் புரிய வைக்கிறார்! தாந்திரீக சாதனையின் இரகசியங்களை அங்கங்கே உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவுபடுத்திச் செல்கிறார். 

இரசிப்பவர்கள் இணைந்திருங்கள்! 

ராம் பிரசாத் சென் - ஜெகன்மாதா 

அன்னையின் தரிசனம் - தாந்திரீக ஞானப்பாடல்கள் என்ற நூலிலுள்ள பாடல்கள் ஒவ்வொரு நாள் இரவிலும் மூன்று பாடல்கள் அவள் ஆணை இயங்கும் வரை எழுதப்படும்!

இதுவொன்றும் புலமைசார் அறிவுப் பகட்டு வேலையில்லை! படித்தல் - அனுபவித்தல் - பகிருதல் இவை மூன்றுமே இலக்கு! ஆகவே பிழைகள் இருந்தால் அது திருத்த வேண்டிய எனது சிற்றறிவு! சிறப்பிருந்தால் அது அவள் என் அந்தக் கரணத்தினூடு சரியாக வேலை செய்த பேரறிவு என்று பொருள்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...