குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, October 15, 2020

தலைப்பு இல்லை

யமக அணியில் புலியூரந்தாதி பாடி சிதம்பரத்து நடராஜரைப் புலியூரானாகத் துதித்த, யாழ்ப்பாண வைபவமாலை பாடிய மாதகல் மயில்வாகனப்புலவர் அப்பம்மாவிற்கு பூட்டனார் முறை! 

தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அம்மம்மாவிற்கு சித்தப்பா! பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய தமிழ் புலவர்! தமிழ்க்கடவுள் முருக உபாசகர்!

அப்பாவும் முன்னோர்களும் தமிழிற்கு இலக்கணம் வகுத்த பொதிகை முனி அகத்திய மகரிஷியைக் குருவாகக் கொண்டவர்கள்! 

இவன் பிறந்த போது அம்மம்மா தூக்கி "புலவரின் மகன் நடராசரைப் போல் வருவான்" என்று கூறினாராம்! 

நடராசனார் சோமசுந்தரப்புலவர் மகன்! பல நூல்களை மொழி பெயர்த்தவர்! குறிப்பாக வல்பொல ராகுல தேரரின் "What The Buddha Taught" என்ற உலகப் புகழ் பெற்ற நூற்களை தமிழில் மொழிப் பெயர்த்த பெரும் அறிஞர்! அம்மம்மா வாழ்த்தியது போல் நடராசனாரின் பௌத்த ஆர்வமும் இவனைப் பற்றிக் கொண்டது! 

எல்லா ஜீனும் கலந்து சஜீதரனாக என்னுடன் வந்து பிறந்திருக்கிறான்! வீட்டிற்கு வருபவர்கள் இருவரும் ஒருவரா என்ற தோற்ற மயக்கம் ஏற்படும் உருவ ஒற்றுமை கொண்டவர்கள் நாம்! 

தமிழ்த்தாய் அந்தாதி எழுதி ஒரு வருடத்திற்கு முன்னர் வீட்டில் எமது மகாராணி அம்ருதவர்ஷினி முன்னிலையில் அரங்கேற்றினார்! 

இன்று சதீஷ் ராம்தாஸ், காவ்யா, திலோஜனின் உழைப்புடன் இயல், இசை, நாடகமாக கண்களுக்கும், செவிகளுக்கும் விருந்தாக, காணொளியாக வந்திருக்கிறது! திலோஜனை மாத்திரம் ஒருமுறை நேரில் சந்தித்திருக்கிறேன்! மற்றவர்கள் கேள்வியால் அறியப்பட்டவர்கள்! அடக்கமும் அமைதியும், ஆழமும் உடைய கலைஞன் திலோஜன், இயற்கைச்சூழலை தனது கமெராவிற்குள் கவ்விக்கொள்ளும் நுணுக்கம் எப்போதும் நான் இரசிப்பது!

வாழ்த்துக்கள்! தமிழன்னையின் ஆற்றல் எல்லோர் மனதிற்கும் இன்பம் அளிக்கட்டும்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...