குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, October 10, 2020

ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 14

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

*************************************************

இந்தப் பாடல் காளியை மானச உபாசனை செய்யும் வழியைப் போதிக்கிறது. 

காளியை எம்முள் உணர்வதற்கு ஐந்து வழி இருக்கிறது; 

1) தியானம் - அவள் ரூபத்தை, தத்துவத்தை தியானித்தல்

2) சுய பரிசோதனை: எந்தெந்த உணர்ச்சிகளை அழுத்தி நாம் உள்ளே மிருகங்களாகவும், வெளியே பண்பானவர்களாகவும் நடிக்கிறோம் என்று அகத்தில் ஆராய்ந்து களைதல். 

3) நாத உபாசனை - உடலிலுள்ள ஸப்தத்தினை/ நாதத்தினைக் கூர்ந்து கவனித்து உபாசித்தல். 

4) பலி : எம்முள் இருக்கும் தாழ் மிருக உணர்ச்சிகளை அவளிற்கு பலியிடல்

5) சம்பாஷணை: அவளை எம்முள் இருக்கும் ஒருத்தியாகக் கருதி நாம் எப்போது ஆன்ம முன்னேற்றம் பெறுவோம்? எனக்குத் தகுதியைத் தா என்று உரையாடல்!

இந்த ஐந்து வழிகளால் காளியை எம்முள் மானச வழிபாடு செய்ய முடியும். இவை பற்றி இந்தப்பாடலில் ராம்பிரசாத் உரையாடுகிறார். 

********************************************************

அன்னையே என்னுள் வசிக்கிறாய்;

அன்னையே, நீ என்னுள் வசிக்கிறாய்;

சியாமளையே, யார் கூறினார்கள் நீ தூரத்தில் இருக்கிறாய் என்று, 

நீ வஜ்சிரப் பெண், பயங்கர மாயை,

பல வேடமிட்டு வழிகாட்டுபவள்.

உன்னை உபாசிக்க பலவழிகள் உண்டு

ஐந்து முதன்மையானவையாக்கியுள்ளாய்!

ஆனால் இந்த ஐந்தும் ஒன்றுதான் என்ற ஞானம் உதிக்கும் போது

உன்னிடமிருந்து எவரும் தப்ப முடியாது என்று புரியும்!

உண்மையை உணர்ந்தவன்

போலியான முறைகளால் உபாசிக்க மாட்டான்!

நீ நிறுத்த வேண்டும்

நீ அவனது துன்பங்களை நிறுத்துவதற்கு முடிவெடுத்தால்!

அவன் பொன்னினது மதிப்பறிந்தால் தவறியும் கண்ணாடித்துண்டினைத் தேடுவானோ? 

பிரசாத் கூறுகிறேன்,

எனது இதயத்தை அப்பழுக்கற்ற தாமரையாக்குகிறேன்

வந்தமர்வாய் எனது மானச தேவியே!

நடனம் புரிவாய்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...