குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, October 07, 2020

ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 06

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

**********************************************

பலரும் காளி சிவனின் மேல் கால்களை வைத்திருக்கிறாள்! சிவம் பெரிதா சக்தி பெரிதா என்று ஆணவ மலத்தில் சிக்கிய அற்ப மானிடர்கள் பட்டிமன்றம் நிகழ்த்த அந்தப்பாதங்கள் தனக்கு மட்டுமே சொந்தமானது என்று ஹ்ருதயத்தில் அன்புப் பெருக்கால் கட்டிவைத்து ஆழ்ந்த ஸமாதியில் அமர்ந்திருக்கிறார் சிவன்! 

இப்படி அன்னையின் பாதத்தை ஹ்ருதயத்தில் முழுமையாகக் கட்டி வைத்திருப்பதால் தான் அவர் பசுகளுக்கெல்லாம் பதியாக ஆழ்ந்த ஸமாதியின்பம் அனுபவித்து அமர்ந்திருக்கிறார் என்ற உண்மை புரிந்த சாதகர் ராம்பிரசாத் தனது மனமாகிய கூட்டாளியுடன் சேர்ந்து அந்தத் திருவடியைத் திருடத் திட்டம் போடுகிறார்; 

இந்தத் திட்டத்தினை விபரிக்கும் அற்புதக் கவிதை இது! சிவனார் வருந்தாமல் திருவடியைத் திருடவும் உத்திகளை உரைக்கிறார்! 

வருவாய் மனமே திருவடி திருடுவோம்!

*****************************

வருவாய் மனமே, திருடச் செல்வோம்!

நீயும் நானும் சேர்ந்து செல்வோம்!

அன்னையின் பாதத்தை சிவனார் முழுமையாகப் பிடித்து வைத்திருக்கிறார்! 

அவற்றை நாம் கைப்பற்ற வேண்டும்!

ஆனால் அவர்கள் எம்மைப் பிடித்துவிட்டால்

அந்த விழிப்புணர்வுடன் கூடிய வீட்டிற்குள்

அதுவே எமது உடலிற்கு முடிவாகும்

அவர்கள் கைலாயத்தில் பிடித்துக் கட்டிவிடுவார்கள்!

உனது குருவின் அறிவுரையை மறக்காதே!

நாமிருவரும் பாதத்தைத் திருடினால் 

சிவனார் காயப்படுவார்! 

அவரை பக்தி என்ற அம்பால் கட்டிவிட்டு

பறித்துக்கொண்டு ஓடிவிடுவோம்!

ராம்பிரசாத் ஸென்

புரிந்த அளவில் தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...