குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, October 08, 2020

ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 07

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

********************************************

எவ்வளவு தான் விழிப்புணர்வுடன் இருந்தாலும் மனதின் கீழ் இயற்கைப் பண்பை வெல்வது கடினம்! தேர்ந்த யோக சாதகர்களும் தவறிப் போய் விடுவார்கள்! இப்படியொரு நிலையை எப்படி வெல்வது என்பதற்கு உபாயம் சொல்கிறார் ஸ்ரீ ராம்பிரசாத்! 

மனம் எப்போதும் ஆணவத் தூண்டலால் இயங்கிக் கொண்டிருக்கும்; ஆணவத் தூண்டல் மனதின் கடுமையான குறை; சாதனை செய்ய வேண்டும் என்று குரு உபதேசம் இருந்தாலும், உறுதியாக எவ்வளவு தான் முயன்றாலும் எம்முள் இருக்கும் ஆணவத் தூண்டல் எம்மை வீழ்த்திக்கொண்டே இருக்கும்! இதனுடன் போராட முனைந்தால் இது இன்னும் அதிகரிக்கும்! 

ஆகவே இலகுவான வழி இந்தப் போராட்டத்தை அன்னையிடம் கொடுத்துவிட்டு நாம் அவள் கருவியாகச் சாதனையை முயற்சிப்பது! இது சாத்தியமானால் தினசரி சீரான தியான சாதனை வாய்க்கும்! 

பலர் தியானம் செய்கிறோம், மந்திர ஜெபம் செய்கிறோம் என்று மனதில் ஆணவத் தூண்டலுடன் தொடங்கி சில நாட்களில் ஆணவம் சாதனையை வீழ்த்தப் புலம்பிக் கொண்டிருப்பார்கள்! சாதனை தடைப்படுகிறது, உபாசனை தடைப்படுகிறது என்றால் அவள் நடத்துவிக்கிறாள் என்ற எண்ணம் இல்லாமல், நாம் செய்கிறோம் என்ற ஆணவத் தூண்டல் எங்கோ மனதின் மூலையில் இருக்கிறது என்று அர்த்தம்!

இதற்கு என்ன செய்வது? மருந்து கூறுகிறார் இந்தக்கவிதையில்! 

சாதகர்களுக்கு தமது சாதனை ஏன் தடைப்படுகிறது? யோகம் ஏன் பலிக்கவில்லை என்ற கேள்விக்கு விடை தரும் அருமையான கவி இது! 

கடுமையான குறை

****************

ஜெகன்மாதாவால் எனக்கு நிவர்த்தி செய்யப்பட வேண்டிய குறைகள் உளது.

என்னைக் காக்கும் தாயாக உன்னை விழிப்புணர்வுடன் வெளிப்படையாக எண்ணும் போது கூட,

எனது வீடாகிய மனமும் உடலும் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்படுகிறது,

எனது எண்ணற்ற ஆணவத்தூண்டலால்! 

ஒவ்வொரு நாளும் உன் நாமத்தை ஜெபிக்க உறுதி கொள்கிறேன், அதியுயர் பாதுகாப்பாக,

ஆனால் எனது இந்த நல்ல நோக்கம் மறக்கடிக்கப்படுகிறது

ஊடுருவும் நபர் வருவது போல. 

நான் எனது விளையாட்டுத்தனத்தில் சிக்கியிருக்கிறேன்! 

ஹே மாதா, எதன் மூலம் இந்த பற்றை நீக்கப்போகிறாய்?

இந்தக்குழந்தை அகத்திலிருந்து உன்னைப் பிரார்த்திக்க எந்தச் சக்தியையும் நீ தரவில்லை,

ஆகவே என்னிடமிருந்து தொடர்ச்சியான பக்தி உனக்குக் கிடைக்கப்போவதில்லை.

எனவே இனி இது எனது பிழை என்று வருந்தப்போவதில்லை. 

புகழும் இகழும், நன்மையும் தீமையும் வாழ்க்கையின் சுவை,

அனைத்து நிகழ்வுகளும் உனது விளையாட்டு!

மெய்மறந்து நீ ஆடும் ஆட்டம்போல்,

நாம் குழப்பத்தினுள் வீசப்படுகிறோம்.

ஹே தேவி, எம்மை உனது ஞானப்பாதையில் செலுத்து. 

இந்தக்கவி அவளின் இரகசியத்தைப் பாடும் தைரியமுள்ளவன்:

ஹே, மகாமாயா, தாயே! ஒவ்வொரு மனதிற்கும் ஆற்றல் கொடு,

ஆணவம் அழிந்து சாம்பலாவதை இனிமையானது எனவும், 

ஏமாற்றங்களையும், அதிர்ச்சிகளையும் சுவையாகவும் உணர;

இப்போதே விழிப்புணர்வு கொடு சுதந்திரனாக நடமாட! 

ராம்பிரசாத் ஸென்

தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்

08-Oct-2020: 07:00 PM


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...