குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, October 07, 2020

ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 03

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

********************************************

மனமும் அதன் இரட்டை மனைவியரும்

**********************************************************

ஹே மனமே, காளியிடம் 

உலாச்சென்று வருவோம் வாராய்!

அவள் கற்பகதருவன்றோ!

அவள் அடியில் நாற்புருடார்த்தம் வாய்க்குமல்லோ!

வைராக்கியம், உலக இன்பம் இருவரும் உனது மனைவியரல்லோ! 

காளியாகிய கற்பகதருவிடம் உனது வைராக்கியம் என்ற மனைவியை மாத்திரம் அழைத்துவா!

வைராக்கிய மனைவியுடன் கூடி பகுத்தறியும் பேருண்மையை எனும் மகனைப் பெற காளி எனும் கற்பகதருவிடம் வரம் கேள்!

ஹே மனமே! 

உனது இருமருங்கிலும் புனிதமும் தீட்டும் என்ற இருமனைவியரும் இருக்க,

(காளியின்) ஆசீர்வாதத்தின் வாழிடத்தில் இருக்க 

எப்போது கற்றுக்கொள்வாய்?

இந்த இரு மனைவியரையும் திருப்தியாக ஒரு கூரையின் கீழ் வைத்திருக்கும் போது மாத்திரமே 

அன்னை சியாமளையின் ஒப்பற்ற உருவத்தை நீ காண்பாய்!

ஆணவமும், அறியாமையுமல்லோ உனது பெற்றோர்!

உன்னிடமிருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டியவர்கள்!

மயக்கம் உன்னை தனது குழியில் வீழ்த்த முயன்றதென்றால், 

ஆண்மையுடன் பொறுமை என்ற தூணைப் பற்றிக்கொள்!

தர்மம், அதர்மம் என்ற ஆடுகள் இரண்டையும் கவலையின்மை என்ற தூணில் கட்டிவை!

அவை அடங்காமல் திமிறினால் அறிவு என்ற வாளால் பலிகொடு! 

உனது உலக இன்பம் என்ற மனைவியின் பிள்ளைகளை தூரத்தில் இருத்து! 

அவர்கள் பேச்சுக் கேளாதவர்கள் என்றால்

ஞானக்கடலில் மூழ்கடி!

ராம்பிரசாத் கூறுகிறேன்!

நான் கூறுவதுபோல் செய்வாயானால்

ஹே மனமே, 

யமதர்மனிடன் நீ நல்ல கணக்குக் காட்டுவாய்!

நானும் திருப்தியுற்று உன்னை அன்பென்பேன்!

***********************************************

ராம் பிரசாத் ஸென் கவிதைகள் - புரிந்த அளவில் மொழிபெயர்ப்பு! 

தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்    


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...