குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, October 13, 2020

ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 24

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}
***************************************************
விழிப்புணர்வின் வைர சாரம்
**********************************************
அன்னை தாரா, நீயே உண்மையில் உயர்ந்தவள்,
விழிப்புணர்வின் சாரம்!
ஆனால் நீ இந்தப்பாடலைப் பாடும் இந்த மூடகவியை அறிவாயா?
நீ உண்மையில் சத்தியம் எனும் பிரகாசமான ஒளிக்கதிர்!
சூரியனில் காலைப் பனி கரைவதுபோல் இந்த ஆன்மாக்களின் துன்பங்கள் கரைந்து போகும், 
சரி, எனது தொடரான துன்பங்களைப் பற்றி என்ன சொல்கிறாய்?
சிரத்தையான சாதகனுக்கு அனுபவம் சித்திக்கும் 
அந்தப்பிரபஞ்ச அன்னையிடமிருந்து,
ஆனால் எனக்கு அன்னை என்ன தந்திருக்கிறாள் பாருங்கள்!
காலைத் தியானத்தில் இன்றைய வாழ்வாதாரத்திற்கு என்ன வழி என்ற சிந்தை
பகல் பிரார்த்தனையில் ருசியான சாப்பாடு என்ன என்ற சிந்தனை!
மாலை சாதனைக்கு அமர்ந்தால் 
அன்று முழுவதும் நடந்தவற்றை அசைபோடும் மனம்!
தாரா தேவியே, உன்னிடம் வெளிப்படையாகக் கேட்கிறேன்!
இந்த பிளவுபட்ட உணர்வினை இனி என்னில் ஏற்பட விடுவாயா?
உனது உண்மை சொரூபத்தை தொடந்து காணும் நிலையை ஏற்படுத்த மாட்டாயா?
ஆனால் நீ கொடுத்திருப்பதோ தன்னிச்சையாக மாநாடு நடத்தும் மனதை!
நான் இந்தக் கவர்ச்சியான பார்வையால் தொடர்ச்சியாக கவ்வப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
நான் அதிகம் எனது எண்ணத்தில் மூழ்கும்போது உணர்ந்துகொண்டேன்
உன்னை சிந்திப்பதால் அறிந்துகொள்ள முடியாது என்று! 
பேரின்பப் பெருந்தாயே! நீ வாக்கிற்கும் மனதிற்கும் அப்பாற்பட்டவள்!
இந்த ஆற்றொணச் சாதகன் அழுகிறேன்:
அம்மா, அம்மா, அம்மா 
ஹிமவான் மகளே
உன் நடனம் உணர்தலின் நுண்ணறிவைத் தருகிறது!
ஆனால் அதை நான் கிரகிக்க முனையும் போதெல்லாம்
அந்த வைரசாரமான விழிப்புணர்வு
வெறுங்கல்லாக மாறிப்போகிறது!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...