குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, October 09, 2020

ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் – 11

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

************************************************

மனதினால் மதிப்பிட முடியாப் பெறுமதி அது!

********************************************************

இந்தப்பிரபஞ்சத்தில் எவர் பயமுறுவர்

என் அன்னை அனைத்தையும் வழி நடத்தும்போது?

அவளது தோட்டத்தில் மிகுந்த சௌகரியத்துடமும், (அவள் வேறு நான் வேறு என்று) பிரிக்கமுடியா விழிப்புணர்வுடனும் பேரானந்தத்துடனும் வாழுகிறேன்.

நான் அவளிடம் நேரடியாக வாடகை செலுத்தும் வாடகைக்காரன்

நான் சம்பிரதாயங்கள், உயர்வு, தாழ்வு எனும் படிநிலைகளிலிருந்து விடுபட்ட சுதந்திரன்!

இந்தச்சரணாலயத்தில் வாடகை இல்லை,

நான் வேறு நீ வேறு இல்லை என்ற இந்த அத்வைதப் பூங்காவில்!

இது மனதின் மதிப்புகளுக்கு அப்பாலுள்ள பெறுமதி

எனது இந்தப்புனித வாழிடம் எவராலும் ஏலமிடப்பட முடியாது!

இங்கு சொந்தக்காரர் எவருமில்லை சொந்தம் கொண்டாட எதுவுமில்லை!

அன்னையின் சொத்துகளின் சொந்தக்காரர் சிவன்,

இங்குள்ள ஒவ்வொரு குறுகிய எண்ணத்தையும் பரிமாற்றத்தையும் பேருணர்வாக்குகிறார்!

இங்கு குழப்பமோ அநீதியோ இல்லை

பாகுபாடோ பிரிவினையோ இல்லை

அன்னை மத வழிபாட்டுக்கென 

கொழுத்த வரி கேட்பதில்லை

பணியாளனாக எனது கடமை 

அவளை உள்ளே நித்திய ஸ்மரணம் செய்வதுதான்!

நித்தியமாக காளி காளி காளி என்று சுவாசிப்பதுதான்! 

இந்த பித்துப்பிடித்த கவிக் காதலன் 

அன்னையிடமிருந்து நேரடியாகப் பிறந்தவன்

இவன் நேசித்து ஆசைகொள்வதெல்லாம் 

அவளது வைர சுவர்க்கமான மகிழ்ச்சியையும்

தளையற்ற கருவூலமான தூய அன்பையும் 

இதை இலவசமாக அனைத்து உயிர்களுக்கும் கொடுப்பதும்தான் 

- ராம்பிரசாத் ஸென் - 

தமிழில் : ஸ்ரீ ஸக்தி சுமனன்


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...