குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, October 25, 2020

தலைப்பு இல்லை

இந்த விஜயதசமி நன்னாளில் சிருஷ்டி தனது இலக்குகளைப் பிரகடனப்படுத்துகிறது.

1) சித்தர் இலக்கியங்கள் எளிமையாக அனைவரும் கற்றுப் பயன் பெறவேண்டும். அதில் கூறப்பட்டுள்ள மருத்துவம் மாத்திரமே இன்று சித்த மருத்துவம் என்ற பெயரால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சித்தர்களின் ஆழமான தத்துவம், யோகம், இரசவாதம் என்பவை இவற்றின் அடி நாதம் இவை எப்படி மனித குலம் பயன்படுத்துவது என்ற நடைமுறை அணுகுமுறை பற்றி சிருஷ்டி திட்டங்களை முன்னெடுக்கும்.

2) யோகம் என்றால் உடலை வளைப்பது, ஆரோக்கியமாக இருப்பது என்ற எண்ணத்தில் மாத்திரம் யோகம் பயிலாமல், யோகத்தின் முழுமையான பயனைப் பெற அதன் ஆழ்ந்த பரிணாமங்களான மனம், பிராணன், உடல் ஆகிய மூன்று தளங்களிலும் ஆழமான அறிவு பெறவேண்டும், இதை எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் கற்பிக்க கற்கை நெறிகள் உருவாக்குவது.

3) ஒரு சமூகத்தின் இருப்பு அதன் உணவு உற்பத்தித்திறனில் இருக்கிறது. உணவை உற்பத்தி செய்வது சூழலினை மாசாக்கி, நஞ்சாக்கி செய்ய வேண்டும் என்பதில்லை. அது எதிர்கால சந்ததியின், மனிதகுலத்தின் இருப்பினை இல்லாதாக்கும், ஆகவே தற்சார்புள்ள விவசாயப் பொருளாதாரத்தை சூழலியலின் நன்மை சார்ந்து உணவு உற்பத்தி செய்யும் இயற்கை விவசாய முறைகளுக்கான அறிவுத் தேக்கத்தை சமூகத்தில் உருவாக்குதல்!

4) நாம் இயற்கையின் ஒரு பாகம் என்ற எமது பண்டைய ஞானத்தினை மறந்து, இயற்கையின் சூழலியல் விதிகளை மறந்து இயற்கையைச் சுரண்டும் சிந்தனையை வளர்த்துக் கொண்டிருக்கும் மனிதனுக்கு அறிவியல் அடிப்படையில் எளிமையாக சூழலியல் விஞ்ஞானத்தைப் போதிக்கும் கற்கை நெறிகளை உருவாக்குதல்.

ஆகிய நான்கு இலக்குகளையும் சிருஷ்டி கொண்டுள்ளது.

இன்று கல்வி என்பது பட்டங்களைப் பெறுதல் என்பதுடன் நின்று விடுவதைத் தாண்டி நாம் வாழ்நாள் முழுவதும் கற்கையாளர்களாக மூளையை இளைமையாக வைத்துக்கொள்ளும் வாழ்நாள் கற்கையாளர்கள் என்ற பண்பாட்டினை எப்படி உருவாக்குவது என்ற அத்திவாரத்தில் மேற்கூறிய நான்கு தளங்களில் சிருஷ்டி தனது பணியை இந்த விஜயதசமி அன்று தொடங்குகிறது.

உங்கள் அனைவரதும் மேலான ஆதரவினை எதிர்பார்த்து வேண்டுகிறோம். 


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...