குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, October 07, 2020

ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 04

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

********************************************

இந்தப் பாடல் ராம்பிரசாத் சென்னுடைய வாழ்வுடன் சுவையான சம்பவத்துடன் தொடர்புடையது! பாடலின் இறுதியில் தன்னை அமோகமான செல்வந்தன் ஆக்கு என்று கேட்கிறார்! அவரது காலத்து ஜமீந்தாரான ராஜா கிருஷ்ணசந்திர ராய் அவரது காளி சாதனையைப் பார்த்து 100 ஏக்கர் நிலம் வரி இல்லாமல் எழுதிக் கொடுத்தாராம்! கேட்டமாதிரி காளி கொடுத்திருக்கிறாள்! 

ஆகவே நாமும் கேட்போம் எம்மையும் அமோகமான செல்வந்தனாக்கு என்று! 

*****************************************************

ஹே மாதா, என்னை எல்லாவற்றிலிருந்தும் வெளியேற்று!

குப்த வித்தையில் என்ன பயன்?

தத்துவ அறிவில் என்ன பயன்?

அனைத்தையும் அரவணைக்கும் உன்னுடைய அன்பெனும் மதுவினுள் முழுமையாகச் செலுத்து! 

பரம இரகசியத்தின் தாயே!

உன்னை நேசிப்பவர்களின் இதயத்தை 

அந்தப்பரம இரகசியத்தால் நிறைப்பவளே!

மீள முடியாமல் என்னை மூழ்கடிப்பாய்!

எல்லையற்ற ஆர்ப்பரிக்கும் கடலாகிய 

தூயஅன்பு, தூயஅன்பு, தூயஅன்பால்! 

உனது அன்பு எங்கெல்லாம் வசிக்கிறதோ

அவையெல்லாம் உன்மத்த வீடாகத் தெரியும்

பொதுப்புத்திகளின் பார்வைக்கு!

உனது சுதந்திரத்தால் சிரித்தபடி சிலர்

உனது மென்மையால் ஆனந்தக்கண்ணீர் 

சொரிவோர் சிலர்!

உனது பேரானந்தம் தாக்க ஆடுவோர் சிலர்!

கௌதமரும் மோசஸும்

கிருஷ்ணரும் ஜீஸசும்

நானாக்கும் முகம்மதும்

உனது அன்பு வெடிப்பில் தொலைந்து போகிறார்கள்!

இந்த கவிஞன் திக்குகிறேன்

ஏக்கத்தால் தாக்குண்டு

எப்போது? எப்போது? எப்போது?

எப்போது தோழமையுடன் உன்னருகிலிருக்கும் பாக்கியம் கிடைக்குமென்று!

எப்போது அவள் தீவிர அன்பு கிடைக்குமென்று!

அவள் புனித உறவு சொர்க்கமயமானது!

இத்தகைய அன்பிலே மூழ்கி பித்துக்கொண்டிருப்போருக்கு

நியாயமாக நடக்கும் நாடு!

அப்படியான நாட்டிலே 

குருவிற்கும் சீடனுக்கும் இடையிலான பேதம் அற்றுப்போயிருக்கும்,

அவர்கள் அன்பின் அன்பு கானமிசைக்கிறது

அம்மா, அம்மா, அம்மா என்று

யார் உனது பரம இரகசியத்தின் ஆழத்தினை அறிவார்கள்?

உனது எல்லையற்ற அன்புடன் அன்பு புரியக்கூடியவர் யார்?

நீ தெய்வீக உன்மத்தம்! 

ஹே தேவி!

உனது அன்பு புத்திசாலித்தனம் எனும் கிரீடமணிந்த உன்மத்தம்!

இந்த ஏழைக் கவியை அமோகமான செல்வந்தன் ஆக்கு!

ராம்பிரசாத் சென்!

தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...