குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, October 11, 2020

தலைப்பு இல்லை

***************************************

ராம்பிரசாத் சென்னுக்கு மாத்திரம் எப்படி இப்படி கவிதை எழுத வருகிறது, நானும் எழுத வேண்டும் என்று அன்னையிடம் கோவிக்க சரி நீயும் எழுதிப்பார் என்று கூறினாள்! இங்கிருக்கும் கவிஞர்கள் என்னை மன்னிப்பார்களாக!

****************************************

குருவென்ற மாமரம்

***************************

குருவென்ற மாமரம்!    

குருவென்ற மாமரம் பரந்து விரிந்து சூரியனை ஈர்த்து

பூத்துக் காய்த்து கனிதரும்! 

கனிகள் நாடி பறவைகள் பல வரும்!

பூக்கள் நாடி தேனீக்கள் படையெடுக்கும்!

பறவைகள் சதையை உண்டு விதைகள் பரப்பும்!

உண்டு உறங்கிக் களிக்கும்! 

பறவைகள் பழத்தை உண்பதால் மரமாவதில்லை!

பறவைகள் பழத்தை உண்ட கடன் விதை பரப்புவதில் செலுத்தும்! 

கல்லெறியும் மானிடர்கள் வருவர் பழம் தேடி!

சதை தின்ற பின் விதை மரமாக நினைப்பவர் மிகச்சிலர்!

ஆகா பழம் அருமை என்று விதை பற்றி எண்ணாமல் 

குப்பை என்று எறிவோர் பலர்!

நல்ல நிழல் என்று ஊஞ்சல் கட்டி ஆடுவோர் சிலர்!

சுவையான பழம்தரும் மரம் 

எனக்கு மட்டும் சொந்தம் என்று எண்ணும் சிலர்!

வீட்டுமுற்றத்தில் கஞ்சல் கொட்டும் மாமரம் 

என்று வையும் சிலர்!

ஆனால் மாமரமோ பூத்து, தேன்பரப்பிக் காத்திருக்கும் 

தன் சந்ததி வளர்க்கும் மகரந்தத்திற்கும், 

தேன் குடித்து மகரந்தம் பரப்பும் தேனிக்காகவும்

குருவான மரம் தேடுவதோ 

தேனீக்களையும் மகரந்தங்களையும்!

மகரந்தம் தன்னை பூவில் சரணடைக்கும்

பறவை பலன் பெறும், மரம் பரவ தாம் அறியாமல் உதவி செய்யும்!

தேனீ தேன் பெறும் தன் கடன் கழிக்க

மகரந்தம் சேர்க்கும்! சந்ததி வளர்க்கும்!

பறவையும் தேனியும் மரத்தின் மணம் பரப்பும்

அணுக்கச் சீடர்!

பழம் உண்டு விதை சூப்பி ஆணவத்தில் களிக்கும் 

மானிடரில் நன்றியுணர்வுடன் விதை பரப்புவர் சிலர்!

விதை பரப்பா மானிடருக்கு 

மரம் பழத்தை மறுப்பதில்லை! 

அம்மானிடரையும் பழம் தந்து ஆசீர்வதிக்கும் மாமரம்! 

குருவென்ற மாமரம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...