குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, December 26, 2022

சமூகத்திற்கான தபஸும் கர்ம யோகமும்

எமது பாரதீய மெய்யியல் தத்துவத்தில் தனது உயர்விற்கு, சமூக உயர்விற்கு, மனித குலத்திற்கு சேவையில் ஈடுபடுபவதை தபஸ், தபோ காரியம், தவம் என்று சொல்கிறது. 
எமது சமூகம் கல்வி, பொருளாதாரத்தில், ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும் என்ற தவத்தில் ஈடுபடுபவர்கள் அனேகர் இருக்கிறார்கள். இப்படியான தபஸ்விகளுக்கு இருக்க வேண்டிய பண்புகளை இப்படிப் பட்டியியலிடப்படுகிறது;
1) பிரபஞ்சம் முழுவதையும் அதில் எமது இலக்கிற்கு எதிராக செயற்படும் காரியங்கள் எதையும் துரும்பாகவும் எண்ணி மனச் சலனப்படாதவர்களாகவும்,
2) எதையும் இப்படி நடக்க வேண்டும், அப்படி நடக்க வேண்டும் என்று இச்சிக்காதவர்களாகவும்,
3) வெளிப் புறத்தில் எம்மை தூற்றுபவர்கள், போற்றுபவர்கள் இவர்களை நினைத்து மனதில் எந்த கிலேசங்கள் கொள்ளாதவர்களாகவும்,
4) சாந்த சுபாவம் உள்ளவர்களாகவும்
5) சமூக நன்மை, தேச நன்மை, எடுத்துக் கொண்ட இலக்கு வளர வேண்டும் என்பதற்கான தனது அறிவினை வளர்த்துக் கொள்ளும் முயற்சி உள்ளவர்களாகவும்,
6) அதிகம் வார்த்தைகள் இன்றி செயலுடயவர்களாகவும்
7) அதீத ஆசையற்றவர்களாகவும் 
 தனது இலக்கிற்காக தனது உயிர் முதற் கொண்டு எதையும் துறக்க தயாராக இருப்பவராகவும் 
இருக்க வேண்டும்; 
இதை கர்ம யோகம் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்; சமூகத்தை முன்னேற்ற விளைபவர்கள் கர்ம யோகிகளாக இருக்க வேண்டும்! 
வரும் எதிர்ப்புகளைத் துச்சமாக எண்ணி தனது இலக்கினை நோக்கிச் செல்ல வேண்டும்! 
குரங்குகள் காரிற்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் காரினை கைவிட முடியாது! கார் எம்முடையது! காரிற்குள் குரங்குகள் வராமல் இருக்க வழி செய்திருக்க வேண்டும்! அல்லது குரங்குகளை விரட்ட வழி தெரிந்திருக்க வேண்டும்! எப்படி இருந்தாலும் ஒருக்காலும் குரங்குகள் காரை ஓட்டாது; seat இனை கிழித்து விட்டு போன பின் காரை எடுத்து செப்பனிட்டு ஓட வேண்டும்; இது தான் இலக்குத் தவறாமல் பயணிப்பதற்குரிய வழி
எல்லா இடங்களிலும் இப்படி இருக்கிறது; நாம் ஒரு திட்டத்தை சிறப்பாகச் செய்தால், எனக்குச் செய்யத் தெரியாதா என்று குரங்கு போட்டி சமூகத்திலிருந்து வரும்; அவர்களுடன் நேரத்தைச் செலவழிக்காமல் சரி எம்மைவிட சிறப்பாகச் செய்யுங்கள் என்று கையளித்து விட்டு நாம் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும்! இப்படிச் செய்யும் போது சமூகத்திற்கு பெரிய் நன்மை! 
சண்டைகளும், சச்சரவுகளும் எமது நேரத்தை உறிஞ்சி வினைத்திறனை அழித்து விடும்! ஆனால் முட்டாள் தனத்திற்கு எதிராக சண்டை பிடிக்காமல் இருந்தாலும் அது தவறான உதாரணம் ஆகிவிடும், இப்படியான இருமைகளை சமாளித்து வெற்றி காண வேண்டும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...