குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, December 13, 2022

விஸ்வ மித்ர சிந்தனை

எமது மனதில் தாழ்மனம் என்ற ஒரு பகுதி இருக்கிறது; இந்த மனம் எப்போதும் கேள்வி கேட்கும்; தர்க்கத்துடன் அணுகும்; தன்னை அங்கீகரித்தால் மகிழும்; புறக்கணித்தால் துன்பமடையும்; க்லேசமடையும்; சமூக அங்கீகாரத்தை வேண்டி நிற்கும்; இதை திருப்திப்படுத்தாவிட்டால் எப்போதும் எம்மைக் கீழே இழுக்கும். 
இந்த மனதினைத் திருப்திப்படுத்துவதற்காகவே எமது வாழ்க்கையில் நாம் நல்ல நிலை அடைகிறோம் என்று கற்பித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கும்; பதவி, பட்டம், புகழ், விருதுகள், மக்களின் நன்மதிப்பு என்ற தவிப்பு எல்லாம்! 
இதை ஒருவன் அடையாமல் அதற்கு மேல் உள்ள உயர் மனதை அடைய முடியாது. ஒருவன் தனது பதவி, பட்டம், புகழ் என்பவற்றை அடைந்த பிறகு அதில் தான் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்ற பேராசையோ, அதற்குப் பிறகு மீண்டும் மீண்டும் அதைத் தேடி அலைவதோ கூடாது! 
அந்த மயக்கங்களில் இருந்து வெளியே வந்து தனது, கல்வி, தகுதி, அதிகாரம், பணம் இவற்றைக் கொண்டு மற்றவர்கள் உயரப்பாடு பட வேண்டும். 
பேராசிரியர் ஆன ஒருவர் தனது வாழ் நாளில் இன்னும் 100 பேராசிரியர்களை உருவாக்க சங்கல்பம் பூண வேண்டும்; அதைவிட்டு விட்டு தனக்கு இன்னும் என்ன விருது கிடைக்கும், பரிசு கிடைக்கும் என்று நினைத்தால் ஒரு சுய நலமியாக தன்னை வளர்க்கிறேன் என்று வாழ்க்கையை அர்த்தமற்றதாக்குகிறார் என்பதே அர்த்தம்! 
அனேகமாக பெருமையை, புகழைத் தேடி ஓடுபவர்களுக்கு நுணுக்கமான ஒரு சுய நலம் உள்ளது; அது தன்னைப் போல் இன்னொருவனும் வந்து விட்டால் தனது மதிப்புக் குறைந்து விடும் என்ற அசூயை. 
இந்த அசூயையால் தமது மாணவர்களையோ, சக தோழர்களையோ தட்டிக் கொடுக்க மாட்டார்கள்! 
ஆகவே தமது வாழ்க்கையில் ஒரு நிலையடைந்தவர்கள் மீண்டும் புகழ், பணம், பெருமைகளை நோக்கி ஓடுவதை விட்டு விட்டு மற்றவர்களும் தாமடைந்த உயர்வு அடைய வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும்! 
இதுவே விஸ்வ மித்ர சிந்தனை - உலகிற்கு நண்பனான மனப் போக்கு! 
கௌசிகன் என்ற மன்னன் தனது தபோபலம் முழுவதையும் தன் மக்கள் உயரவே பாடுபட்டு விஸ்வ மித்ரர் ஆனார். 
இந்தச் சிந்தனையே ஒரு சமூகம் முன்னேறுவதற்கான அடிப்படைத் தகுதி!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...