குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 16, 2022

தலைப்பு இல்லை

ஆசிரியத் தொழில் ஒரு உயர் தொழிலாகும்; உயர்தொழில் எனும் போது அதற்குரிய சில பிரத்தியேக பண்புகள் இருக்கின்றது. 
1) உயர்தொழிலில் ஈடுபடும் ஒருவன் தன்னை தயார்படுத்திக் கொள்வது, ஆயுத்தப் பயிற்சி அவசியமானதாகும். புதிய திறன் களை வளர்த்துக் கொள்ளுதல் அவசியமாகிறது. நவீன தொழில் நுட்பங்களைப் பாவித்து கற்பித்தலை எப்படி இலகுவாக்குவது போன்ற திறன் கள் தேவைப்படுகிறது. தற்காலத்தில் தகவல் தொழில் நுட்பம் அத்தியாவசியமான ஒன்றாக இருப்பதும் அதைப் பிரயோகிக்கத் தெரிவதும் அவசியமாகிறது. உயர் தொழிலில் இருப்பவர்கள் அனுதினமும் கற்பவர்களாக இருக்க வேண்டும். 
2) உயர்தொழிலில் இருப்பவர்கள் தமது துறை சார்ந்து மெய்யியல், தத்துவம், சமூக இயக்கவியல் , மனவியல் தெரிந்திருப்பது அவசியம். கல்வித் துறையில் கல்வி மனவியல், கல்வித் தத்துவக் கோட்பாடுகள் தெரிந்திருக்க வேண்டும். 
3) உயர்தொழிலில் இருப்பவர்கள் தனது சுய நலனுக்காகவன்றி பெரும்பாலும் சமூக முன்னேற்றத்த்திற்கும், மற்றவர்களை முன்னேற்றவும் பாடுபடும் மனப்பாங்கு இருக்க வேண்டும்; தம்மைப் பெரிதாக முன்னிறுத்துபவர்களாக அன்றி தான் தொழில் புரியும் துறைக்காக தம்மை அர்ப்பணிப்பவர்களாக இருக்க வேண்டும். 
4) உயர்தொழிலில் அடையும் வெற்றி என்பது அவருடைய அறிவுத்திறன், சமூகம் அடைந்த மேம்பாடுகளைக் கொண்டு அளவிடப்படும்; ஊதியத்திலிருந்து அல்ல! பலவிதங்களில் சம்பாதித்து கார்வைத்திருக்கும் ஆசிரியர் தனது ஆசிரியத் தொழில் வெற்றி பெற்றவராக அண்மையில் ஒருவர் கூறினார்; இது தவறானது; ஆசிரியர் தனது துறையில் எத்தனை பேரை உருவாக்கியிருக்கிறார் என்பதே அளவீடு! 
5) உயர்தொழிலில் ஈடுபடுவனுக்கு மேற்பார்வை எதுவும் தேவைப்படாது; அவன் தனது தொழிலைச் செய்வதற்குரிய அத்தனை திறன், அறிவு, சுய உத்வேகங்களையும் பெற்றிருப்பான். வகுப்பறைக்கு வந்தால் மாணவர்களை கல்வியில் கவனம் செலுத்த வைக்கக்கூடிய ஆளுமை இருக்க வேண்டும்! 
6) அறம் சார்ந்த மனதை உடையவனாக இருக்க வேண்டும்; மாணவர்கள் மனதில் மற்றைய ஆசிரியர்களைப் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்துதல், ஊர்ப் பிரச்சனை, மாணவர்களை தனது சுய விருப்பங்களுக்காக தவறாக வழிகாட்டுதல், பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் படி உரையாடலை நிகழ்த்துதல், வக்கிரமான நகைச்சுவைகளால் மாணவர் மனதைக் கவருதல் போன்றவை தீயபண்புகள் அற்றவராகவும், மாணவர்களின் மனதில் தேவையற்ற எண்ணச் சிதறல்களை ஏற்படுத்தா அறமுடையவர்களாக இருக்க வேண்டும். 
7) தன்னை எப்பொது மேம்படுத்திக் கொண்டு, திறனை வளர்த்துக் கொண்டு, தனது தொழிலிற்கு அடிப்படையான அறிவு,செயல் திறன் இவற்றை எப்போதும் தொடர்ந்து கற்றுக் கொண்டிருப்பவனாக இருக்க வேண்டும். 
இப்படியான உயர்தொழில் பண்பு (High professional attitude) இருக்கும் ஆசிரியர்களைக் கொண்ட பாடசாலைகள், சமூக கல்வியில் துரித முன்னேற்றம் பெறும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...