குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, December 12, 2022

சுப்பிரமணிய பாரதியாரும் ஸ்ரீ அரவிந்தரும்

ஸ்ரீ அரவிந்தரின் சீடர்களில் ஒருவரான அம்ருதா (அரவமுதாச்சாரி ஐயங்கர்) பாரதியாரின் பெருமை பற்றி தனது குறிப்புகளில் கூறுவதைக் கேளுங்கள். 
அம்ருதா யோக சாதனை பழக வேண்டி ஸ்ரீ அரவிந்தரை அணுகி தினசரி வலம் வருகிறார். ஆனால் ஸ்ரீ அரவிந்தரிடம் குருவாக முழுமையாகச் சரணாகதி ஏற்படவில்லை! ஆனால் ஒவ்வொரு நாளும் ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்கும் பாரதியார் ஸ்ரீ அரவிந்தர் மேல் காட்டும் எல்லையற்ற மரியாதையால் பாரதியார் மேல் தனக்கு ஈர்ப்பும் மரியாதையும் வந்ததாகக் குறிப்பிடுகிறார். 
ஸ்ரீ அரவிந்தர் மௌனமே உருவானவர்; எவரையும் சந்தித்து, உரையாடி, நீண்ட உபதேசம் செய்யும் பழக்கம் அற்றவர். இரவு ஏழு மணிக்கு மேல் மாத்திரம் உத்தரவு பெற்று அவரைச் சந்திக்க முடியும். பாரதியாருக்கும் ஸ்ரீனிவாச்சாரி என்ற இருவருக்கும் மாத்திரம் ஸ்ரீ அரவிந்தரை நினைத்த நேரத்தில் சந்திக்கும் விதிவிலக்கு இருந்தது. 
மூவரும் சேரும் போது அரிய விடயங்கள், யோக சாதனை, நாட்டின் சுதந்திரம், அரசியல், இலக்கியம், சமூகம், நகைச்சுவை எனப் பல உரையாடல் நிகழும். இப்படி இரவில் ஸ்ரீ அரவிந்தருடைய உரையாடல்களை பாரதியார் மறு நாள் மற்றவர்களுடன் உற்சாகத்துடன் பகிர்ந்து கொள்வார்! அல்லது பாரதியாரைச் சூழ அனைவரும் மறு நாள் சூழந்து கொண்டு ஸ்ரீ அரவிந்தரிடமிருந்து என்ன பெற்றுக் கொண்டீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிப்பார். இப்படி இரண்டு வருடங்கள் ஸ்ரீ அரவிந்தருடன் பாரதியார் ஒரு நாள் விடாமல் உரையாடல் நிகழ்த்தியதாக அம்ருதா குறிப்பிடுகிறார். 
ஸ்ரீ அரவிந்தர் குறிப்பாக ஸக்தி உபாசனை பற்றி உரையாடல் நிகழ்த்தியதாக அம்ருதா குறிப்பிடுகிறார். 
அம்ருதா தனது குருவான ஸ்ரீ அரவிந்தரைப் புரிந்துக் கொள்ள பாரதியாரே முதன்மைக் கருவியாக இருந்திருக்கிறார் என்பதைப் பதிவு செய்திருக்கிறார்! 
எனது அனுபவத்தில் பாரதியாரின் யோக சித்தி, சக்தி உபாசனைக் கவிதைகளைப் படித்தால் ஸ்ரீ அரவிந்தரைப் புரிதல் இலகுவாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன்! 
பாரதியார் ஸ்ரீ அரவிந்தரிடமிருந்து விடை பெறும் நாள் பற்றி பாரதியாரின் மகள் சகுந்தலா பாரதி தனது நூலில் இப்படி விவரிக்கிறார்:
கடைசிமுறையாக் என் தந்தை அரவிந்தரிடம் விடை பெறப் போன போது அவர்கள் தனியறையில் சம்பாஷணை நடத்தியதால் அதன் விவரம் எனக்குத் தெரியாது. ஆனால் விடைபெற்றுத் திரும்புகையில் ஸ்ரீ அரவிந்தரின் சாந்தி நிறைந்த ஞானவொளி வீசும் கண்கள் கண்ணீரால் மங்கியிருந்தன. என் தந்தையின் வீர விழிகளில் கண்ணீர் ததும்பி நின்றது. அது மட்டும் தான் நான் கண்டேன்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...