குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, December 15, 2022

இல்லற யோகம்

நூல் PDF வேண்டுபவர்கள் கீழ்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள்: +917200081475
__________________________________
இல்லறத்திலிருந்து யோக சாதனை செய்யலாம் என்பதற்குரிய விதிமுறையை விளக்கும் இந்தச் சிறிய நூல் குருதேவர் பண்டிட் ஸ்ரீ ராம் சர்மாச்சர்யா அவர்கள் “க்ருஹஸ்த யோகம்” என்று ஹிந்தியில் எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட “Married life is Perefect Yoga” என்ற ஆங்கில நூலில் தமிழ் மொழிபெயர்ப்பு!
இந்த நூல் தொழில்சார் முறையில் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கப்படவில்லை. குருதேவரிடம் எனக்கிருந்த சாதனா உறவு இப் பணியை உள் இருந்து தூண்டியதால் உருப் பெற்றதே இந்த நூல். 
எனது தினசரி காயத்ரி சாதனையில் ஒரு நாள் அதிகாலையிலே, ஓர் ஒளி உருவம் எனது ஜப சாதனையை அதிகரிக்கச் சொல்லி அன்புடன் குரலாக ஒலித்தது. ”எனது நாளாந்தக் கடமைகளுடன் அவ்வளவு ஜெபத்தை என்னால் செய்ய முடியுமா?” என்று நான் தயங்கி நினைத்த போது, மீண்டும் அந்த ஒளிரூபம் ”முதல் கட்டமாக இவ்வளவு ஜெபத்தை ஆரம்பி! பின்னர் உனது உடல் அதிக தபஸை தாங்கும் வண்ணம் படிப்படியாக உனது மனமே வழிகாட்டும், இதைச் செய்ய வேண்டியது உனக்காக அல்ல; நீ மற்றவர்களுக்கு உதவுவதற்கு தேவையான சக்தியைப் பெறுவதற்கான பயிற்சியே இது” என்று ஆசி கூறி மறைந்தது. 
அதன் பிறகு நீண்ட காயத்ரி ஜெபம் செய்யும் ஆற்றலும், சலிக்காத மனமும் வாய்த்தது. அந்த ஒளியின் ஆசிப்பிரகாரம் எனது சாதனையும் முன்னேறத் தொடங்கியது. ’அந்த ஒளியில் கிடைத்த குரல் எவருடையது?’ என்ற சிந்தனை எப்போதும் ஏற்படவில்லை. அந்தப் பேரொளி என்னை வழி நடாத்துகிறது என்ற ஆழமான உணர்வை அனுபவமாக உணரத் தொடங்கினேன். அதன் பிறகு என்னிடம் கற்பதற்கு, வழிகாட்டல் பெற சிலர் நாடத் தொடங்கினார்கள். அதற்குத் தகுதியுள்ளதாக என்னை ஆக்கிக்கொள்ள நான் மேலும் ஆழமாக சாதனையில் செல்லத்தொடங்கினேன். 
இந்த சாதனாப் பயணத்தின் அடுத்த கட்டம் மக்களுக்கு ரிஷிகளின் சிந்தனையை தமிழில் தரவேண்டும் என்று வழிகாட்டப்பட்டதும், அதற்காக எடுத்துக் கொண்ட பணி தான் குருதேவர் பண்டிட் ஸ்ரீ ராம் சர்மாச்சார்யா அவர்களின் நூற்களை தமிழில் மொழி பெயர்த்து வாராந்தம் பத்திரிகையில் சிறு கட்டுரைகளாக வெளியிடுவது என்பது! இதற்கு அகில உலக காயத்ரி பரிவாரின் தலைவர் Dr. பிரணவ் பாண்டேயாவிடம் அனுமதி கேட்க, அவர் மனமுவந்து செய்யச் சொல்லி ஆசி கூறினார். இதன் பிரகாரம் இந்த இல்லற யோகம் என்ற கட்டுரைத் தொடரானது, இலங்கையின் தினகரன் பத்திரிகையின் சைவ மஞ்சரிப் பகுதியில் 
வாரந் தோறும் கட்டுரையாக வெளி வந்தது. இப்போது அவற்றைத் தொகுத்து ஒரு சிறு நூலாக வெளியிடுகிறோம். 
குருதேவர் பண்டிட் ஸ்ரீ ராம் சர்மாச்சர்யா அவர்கள் இல்லறத்திலிருந்தவாறே கடுமையான 24 இலட்ச எண்ணிக்கை கொண்ட காயத்ரி மந்திர புரச்சரணங்கள் 24 இனை, 24 வருடங்களில் பூர்த்தி செய்தவர். அவர் கடந்த நூற்றாண்டின் ரிஷி! அவர், தாம் வாழ்ந்த வாழ்க்கையின் பிரகாரம் கூறிய பயனுள்ள அறிவுரைகளை இந்த நூலில் தொகுத்துத் தந்திருக்கிறோம். இல்லறத்திலிருந்து கொண்டு தகுந்த மனப்பாங்கினை ஏற்படுத்தி, பண்புகளை வளர்த்து அனைவரும் காயத்ரி சாதனையால் ரிஷிகளாக முடியும் என்பதை, உறுதி பட வழிகாட்டுகிறது இந்த நூல். 
சாதனை செய்யும் சாதகர்கள் அனைவருக்கும் தகுந்த வழியைக் காட்டக் கூடிய இந்த அரிய நூலை, உங்களுக்குத் தரும் கருவியாக்கிய குருமண்டலத்தை பிரார்த்தித்துக் கொண்டு…., 
அனைவருக்கும் ’அருளோடு, செல்வம், ஞானம், ஆற்றலும், அன்பும் பண்பும், பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! ஆயுளாரோக்கியம், வீரம் அசைந்திடா பக்தியன்பு, தேயுறா செல்வம், கீர்த்தி தேவியே அருள்வாயம்மா!’ என்று அன்னையைப் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
ஸ்ரீ ஸக்தி சுமனன்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...