குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, December 28, 2022

சமூகப்பணி

உங்கள் நேரத்தை அறிவை அனுபவத்தை செல்வத்தை சமூக முன்னேற்றத்திற்கு எதிர்பார்ப்பின்றி பங்களியுங்கள்.

இன்று ஒரு நற்காரியம் நடைபெற்றது; மாத்தளையில் பாக்கியம் தேசியக் கல்லூரி - இந்துக் கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலைகளிலும் உள்ள அடுத்த ஜனவரி மாதத்தில் உயிரியல் பிரிவு, கணிதப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு துரித மீட்டல் பயிற்சி வகுப்புகள் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale இனால் நடாத்தப்பட்டது. 

கொழும்பிலிருந்து கணித ஆசான் ஹரிசன் எனது அழைப்பை ஏற்று வருகை தந்திருந்தார்; இணைந்த கணிதத்திற்குரிய மீட்டலைச் செய்திருந்தார்; அவர் தனது சொந்தச் செலவில் வருகை தந்திருந்தார்; அவரை மாவனல்லை, கல்முனை என்று பல இடங்களில் அழைத்து கணிதம் படிக்கிறார்கள்; அண்ணா நீங்கள் அழைக்கும் வரை காத்திருக்கிறேன், உங்கள் அழைப்பில் கற்பிப்பதற்கு எனக்கு பணம் தேவையில்லை; மாத்தளையின் தமிழ் கல்வி முன்னேற்றத்திற்கு என்னுடைய பங்களிப்பு என்றார்! ஹரிசன் என்னிடம் யோகம் பயிலும் மாணவர்களில் ஒருவர்! சிறுவயதிலிருந்து கவிபுனையும் ஆற்றல் பெற்றவர்; பதஞ்சலி யோகம் தானாக கற்று சாதனை புரிந்து பின்னர் தெளிவிற்கு என்னிடம் வந்தார்; தனது உயர்தரம் முடிந்த மறு நாளில் இருந்து கணிதம் கற்பிக்கும் ஒரு ஆசான்.

கலாநிதி நிசாந்தன் பிரயோக உயிரியல் பாடத்தினையும், நான் சுற்றாடல் உயிரியல் பாடத்தின் மீட்டலையும் நடாத்தினோம். 

மாத்தளை இந்துக் கல்லூரியின் அதிபர் திரு கணேசமூர்த்தி ஐயா தந்த உத்வேகம் இதை ஆரம்பிக்க உற்சாகப்படுத்தியிருக்கிறது. 

பாக்கியம் தேசியக் கல்லூரி அதிபர் திருமதி மஞ்சுளாதேவி அம்மையார் அவர்கள் எமது சமூகத்திற்கு கிடைத்திருக்கும் நல்ல கல்வித் தலைமைத்துவங்களில் ஒருவர்! அதை இந்த முறை பாக்கியம் தேசியக் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருக்கும் மாணவர் எண்ணிக்கையில் காணலாம்! தொடர்ச்சியாக இதைச் சாதிக்க அவரிற்கு தேவையான ஒத்துழைப்பினை நாம் வழங்க வேண்டும். 
திரு சாந்தக்குமார் ஆசிரியர் அவர்கள் அனைத்து உள்ளக ஏற்பாடுகளையும் செய்திருந்தார்; திரு ஜெயக்குமார் ஆசிரியரும் இதற்கான உதவிகளைச் செய்திருந்தார். 
சதுஷன் எமது பட்டதாரிகள் ஒன்றியத்தின் புதிய உறுப்பினர்; மாத்தளை இந்துக்கல்லூரியில் இருந்து மருத்துத்துவத்துறைக்கு தெரிவாகியிருக்கும் மாணவர்; தற்போது கல்விக்கு நல்ல தலைமைத்துவத்தினை வழங்கி வருகிறார்; கணித உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் ஆண் மாணவர்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கி வரும் கல்விக்கான தலைமைத்துவத்துடன் செயற்படும் இளைய தலைவர். 
லக்ஷ்மிகாந் ஆசிரியர் ஒன்றியத்தின் தூண்- வெகுவிரைவில் மாத்தளையில் அரசறிவியலை இளைஞர்களுக்கு கற்பிக்கும் திட்டத்தை வடிவமைத்து வருகிறார். 
கோயில், மாத்தளை தமிழ் அமைப்புகள் இந்த இரு தேசிய பாடசாலைகளை எமது தமிழ் சமூகத்தின் கல்வி மையங்களாக கருதி இந்த இரண்டு பாடசாலையிலும் கணித விஞ் ஞான தொழில்நுட்ப பாடங்கள் மேம்பட தகுந்த ஒத்துழைப்பைத் தரவேண்டும். ஏற்கனவே முத்துமாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் குழு கல்விச் சமூகம் இதற்குரிய திட்டத்தை வகுத்தால் தாம் மனமுவந்து செயற்பட தயார் என்று கூறியுள்ளார்கள்.
நல்ல செயல்கள் பல நடைபெறட்டும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...