குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, December 20, 2022

தலைப்பு இல்லை

இந்த வருடம் மாத்தளை கல்வி வலயத்திற்குள் தமிழ் பாடசாலைகளில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்வு ஒன்றை பல்கலைக்கழக விரிவுரையாளர்களான Dr. Nishānthan Ganeshan மற்றும் Thatchanesh Kanth (PhD reading) ஆகிய இருவரது தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
எமது ஆய்வுகளில் கடந்த வருடம் எப்படி பதிவினை மேற்கொள்வது, ஆங்கிலம் தெரியாது, அதிக தூரத்தில் பல்கலைக்கழகம் இருக்கிறது போன்ற பல்வேறு காரணங்களால் சிலர் கிடைத்த கல்வியையும் தொடராமல் விட்டமை அறியப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனைகளைத் தீர்த்து எப்படி சவால்களுக்கு மத்தியில் கிடைத்த பல்கலைக்கழகக் கல்வியை மாணவர்கள் பூர்த்தி செய்வது என்ற வழிகாட்டலை வடிவமைத்துள்ளோம்! 
பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு தலைமை ஆலோசகராக எனது உரை! 
வரவேற்பு
*********
மாத்தளையில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருக்கும் மாணவர்கள் அனைவரையும் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்திற்கு வரவேற்கிறோம்!
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் சுருக்கமாக FTGM என்று அழைக்கப்படும். 
இந்த அமைப்பு மாத்தளையில் தமிழ் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், தமிழ் பட்டதாரிகள் அதிகளவில் எமது சமூகத்திலிருந்து உருவாகவும் வேண்டி மாத்தளையில் உள்ள, மாத்தளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பட்டதாரிகளை ஒன்றிணைக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. 
இதன் இலக்கு எமது சமூகத்தை ஒரு கல்விச் சமூகமாக உருவாக்குவதாகும். 
இந்தப் பயணத்தின் முதல் படியில் நீங்கள் அனைவரும் பட்டப்படிப்பிற்கு தேர்வாகியுள்ளமை மிக முக்கியமான ஒரு மைல் கல்லாகும். 
சில இலட்சம் மாணவர்களில் உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது பெரிய வரப்பிரசாதமாகும். இந்த வரப்பிரசாதத்தை நீங்கள் எந்தவிதமான வளப்பற்றாக்குறை, கவலையீனங்கள் காரணமாக தவறவிடக்கூடாது என்பதற்காக எமது ஒன்றியம் இந்த ஆலோசனைத் திட்டத்தினை ஆரம்பித்திருக்கிறது. 
முதலில் நாளை கலாநிதி நிசாந்தன் அவர்கள் உங்களுக்கு எப்படி பல்கலைக்கழக மானியங்கள் குழுவின் தளத்தில் உங்களது கற்கையை பதிவுசெய்வது என்பது பற்றி அனைத்து வழிமுறைகளையும் சொல்லித்தருவார். 
உங்களில் எவராவது வீட்டின் நிதி நிலவரம் காரணமாக பல்கலைக்கழகம் செல்ல முடியாத சூழல் இருந்தால் அதைக் கட்டாயம் என்னுடன் தனிப்பட உரையாடுங்கள்; நீங்கள் தடையறக் கற்பதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துதர ஒன்றியம் தன்னால் இயன்ற முயற்சியை எடுக்கும். 
எக்காரணம் கொண்டும் கிடைக்கும் கல்வியை நிறுத்த வேண்டாம்; குடும்பத்தின் ஏழ்மை காரணமாக சுய தொழில் செய்து கொண்டு தமது கல்வியைப் பூர்த்தி செய்து கொண்டு மிகப்பெரிய தொழில் வாழ்க்கையில் வெற்றிப் பெற்றவர்களது உத்வேக கதைகள் நீங்கள் ஒன்றியத்தின் உத்வேக உரைகளில் கேட்பீர்கள். 
இந்த ஒன்றியத்தில் தலைமை ஆலோசகராக எதிர்காலத்தின் எமது சமுகத்தின் உயர் கல்வியலாளர்களான உங்களை அனைவரையும் FTGM இற்கு அன்புடன் வரவேற்கிறேன்.
உங்கள் கல்வி முன்னேற்றம் வேண்டும்.
ஸ்ரீ ஸக்தி சுமனன்
தலைமை ஆலோசகர்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...