குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, December 13, 2022

தலைப்பு இல்லை

மாத்தளைக் கல்வி வலயத்தின் தமிழ்ப் பாடசாலைகளின் கணிதப் பாடத்தின் சாதாரண தரப்பரிட்சைப் பெறுபேறுகளைப் பார்க்கும் போது தலை சுற்றுகிறது; இதற்கு என்ன தீர்வு என்று சிந்திக்கும் போது கணித ஆசான் சொல்லியது வாய்ப்பாடு ஒன்று தொடக்கம் 16 வரை பாலர் வகுப்பில் தலைகீழாகக் கேட்டாலும் சொல்லும் படி பழக்க வேண்டும். பிறகு கணிதத்தின் செய்முறைகளை விளக்கிவிட்டால் கணிதம் இலகுவான பாடமடாப்பா! என்றார்!
வளர்ந்து கட்டிளமைப் பருவத்திற்கு வந்துவிட்ட சரியாக அத்திவாரம் போடப்படாத மாணவர்களுடன் ஒவ்வொரு முறையும் தமது சக்தியை விரயமாக்கி புலம்பும் விரக்தி ஆசிரியர்களையே நாம் பார்க்கிறோம்! அத்திவாரத்திலிருந்து தொடங்க வேண்டும்! 
உடனடியாகத் திட்டம் தீட்டி மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale மாத்தளைப் பட்டதாரிகள் ஒன்றியத்தில் இருக்கும் ஆசிரியர்களுடன் உரையாட ஒரு ஆசிரியத் தங்கை அண்ணா நான் இந்தத் திட்டத்தை பொறுப்புடன் எடுத்து செய்கிறேன் என்று இன்று பாடசாலையில் அனுமதியும் பெற்றுவிட்டார். அவர்களுக்குரிய வளங்களை ஒருங்கிணைப்பதில் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale பணிபுரிகிறது. ஆர்வமுடைய ஆசிரியர்கள் தலைமைத்துவம் ஏற்கிறார்கள். 
திட்டத்தின் நோக்கம் பாலர்களுக்கு கணிதத்திறன் விருத்தி செய்தல்! 
எப்படி விருத்தி செய்வது?
முதலில் அதிபரும் ஆசிரியரும் எமது பிள்ளைகள் அனைவரும் கணிதத்தில் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற சங்கல்பம் எடுத்துக் கொள்வது, 
இரண்டாவது பெற்றோர்கள் எமது பிள்ளை கணிதத்தில் திறன் பெற்றவர்களாக இருக்க நாம் எம்மால் இயன்ற உதவியினை, உத்வேகத்தினைக் கொடுப்பது, பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் கல்வியில் அக்கறை காட்டி சீரியஸாக இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும்! 
மூன்றாவது பிள்ளைகளை குழப்பம் இல்லாமல் ஒரு நிகழ்ச்சி நிரலில் பிணைக்க வேண்டும். 
எப்படிப் பிணைப்பது? 
இந்தப் பணியை மாத்தளை கல்வி வலயத்திற்குள் மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் ஏற்றுக் கொள்கிறது. 
2) பாடசாலையில் திட்டம் பற்றிய அறிமுகக் கூட்டம் - பெற்றோர்களுக்கானது; இதில் சொல்லப்பட வேண்டிய விடயம் :
மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் எமது பிள்ளைகளின் கணிதத் திறன் விருத்திக்காக வாய்ப்பாடு போட்டி ஒன்றினை ஆரம்பிக்கிறது. இதன் படி தினசரி நீங்கள் வீட்டில் 30 நிமிடங்கள் காலையிலோ மாலையிலோ வாய்ப்பாடு மனனம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.
இந்தப் பயிற்சியில் ஐந்து நிலைகள் உண்டு:
பயிற்சி நிலை 01: ஒன்று முதல் 05 வரை வாய்ப்பாட்டினை தடங்கல் இன்றி சொல்லுதல்
பயிற்சி நிலை 02: ஒன்றிலிருந்து பத்துவரை தடங்கலின்றி சொல்லுதல்
பயிற்சி நிலை 03: ஒன்றிலிருந்து பதினாறு வரை தடங்கலின்றி சொல்லுதல்.
பயிற்சி நிலை 04: ஒன்றிலிருந்து பதினாறாம் வாய்ப்பாட்டினை தலைகீழாகச் சொல்லுதல். 
பயிற்சி நிலை 05: பதினாறாம் வாய்ப்பாட்டிற்குள் எழுந்தமானமாக பெருக்கல் தொகை கூறும் ஆற்றல்.
முதலாவது மாதத்தில் பயிற்சி நிலை - 01 பூர்த்தி செய்தல்
இரண்டாவது மாதத்தில் பயிற்சி நிலை - 02 பூர்த்தி செய்தல்
மூன்றாவது மாதத்தில் பயிற்சி நிலை - 03 பூர்த்தி செய்தல்
நான் காவது மாதத்தில் பயிற்சி நிலை - 04 பூர்த்தி செய்தல்
ஐந்தாவது மாதத்தில் பயிற்சி நிலை - 05 பூர்த்தி செய்தல்
ஆறாவது மாதம் பொதுப்போட்டி
1) ஐந்து நிலைத் திறனையும் பூர்த்தி செய்பவர்களுக்கு அடுத்த வருடத்திற்கான பாடசாலை கொப்பி புத்தக செலவிற்கான புலமைப்பரிசில்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ கிடைக்கும். 
எமது ஒன்றியம் ஒவ்வொரு டிசம்பர் மாதம் இதற்குரிய பதிவுகளை ஆரம்பித்து ஜனவரி முதலாம் திகதி பயிற்சி நிலை - 01 இனை ஆரம்பிக்கும். 
ஆரம்பித்த பின்னர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும் பதிவு செய்த மாணவர்களின் பெற்றோர் வாட்ஸப்பினூடாக ஒளிப் பதிவு செய்து எமது போட்டிக்குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும். 
இப்படி அனுப்பி வைக்கப்படும் ஒளிக் கோப்புகளை ஒரு excel sheet entry எடுத்து தகவல் தொழில் நுட்ப குழு ஆவணப்படுத்தும். 
இன்னுமொரு குழு இவற்றைப் மேற்பார்வையிட்டு மாணவர்களுடைய திறனை மதிப்பிட்டு புள்ளியிட வேண்டும். 
ஜூலையில் பொதுப்போட்டி நடைபெறும்.
இது ஒரு கணிதத் திருவிழாவாக ஒவ்வொரு வருடமும் நடைபெற மாத்தளையில் கணித வல்லுனர்கள் உருவாகுவார்கள்! 
மாத்தளை அம்பாளின் பக்திக்கு பெயர் போனது; இந்த ஊரில் வசிப்பவர்கள் எல்லோருக்கும் ஒரு கலண்டர் இருக்கிறது; ஜனவரி என்றால் கோயில் கொடியேறுகிறது; மாலையானால் கோயிலிற்கு போவது, தேர் அன்று ஒன்று கூடி தேரிழுப்பது இது மாறாத ஒன்று! 
இதைப் போல் கணிதத்திற்கு ஒரு திருவிழா
தமிழில் எழுத்துப் பயிற்சிக்கு ஒரு திருவிழா
கிரகித்தலுக்கு ஒரு திருவிழா உருவாக்கிவிட்டால் மாத்தளையில் அம்பாளின் பக்தர்களாவதோடு கணிதத்தில் வல்லுனர்களாகவும் உருவாகிடுவர். 
இந்த திட்டத்தை அனைவரும் பிரதியெடுத்து அவரவர் திட்டமாக ஒவ்வொரு பாடசாலையிலும் கல்வி வலயத்திலும் செயற்படுத்த வேண்டும் என்பதே அவா! இங்கு பலருக்கு இது அவருடைய திட்டம், இவருடைய திட்டம் என்று முத்திரை குத்திக் கொள்வதிலேயே அவா! ஆனால் எல்லாத் திட்டத்திலும் பயனாளிக்கு தகுந்த பயன் கிடைத்ததா என்பது மாத்திரமே உண்மையான தேவை! 
யார் குற்றினாலும் கடைசியில் அரிசி வரவேண்டும்; சமூகம் மேன்மையுற வேண்டும் . 
தனி மனிதனோ, சிறு குழுவோ எந்தவொரு பெரிய விஷயத்தையும் சாதிக்க முடியாது; பல கரங்கள் இணைந்து அவரவர் செயலாக இவற்றை எண்ணி செய்ய வேண்டும்!
ஆர்வமுள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்! நான் குழுக்களை அமைத்து சரியான திசையில் செலுத்துவதிலும், வளங்களை ஒருங்கமைப்பதிலும் அனுபவமுள்ளவன்! 
மேலும் கல்வித் திட்டங்களை நடைமுறைப்படுத்த பெரிய பணம், வளம் தேவையில்லை! எமது எண்ணம் சிரியதாக, உறுதியுடையதாக இருந்தால் பணம், வளம் எல்லாம் வந்து சேரும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...