குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, December 19, 2022

தலைப்பு இல்லை

தனி மனிதனாக பட்டம், புகழ், பணம் ஆகியவற்றில் தன்னிறைவு அடைந்து வெற்றி பெறுவது இலகுவானது. உதாரணமாக யாழ்ப்பாணத்து சமூகத்தை எடுத்தால் எல்லோரும் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும்; பணம் சம்பாதிக்க வேண்டும்; வீடு வாங்க வேண்டும்; வாகனம் வாங்க வேண்டும்; பெரிய தொழிலில் இருக்க வேண்டும், வெளி நாட்டில் செட்டிலாக வேண்டும் என்று தனிமனித வெற்றியில் சிறப்புறுகிறார்கள். ஆனால் கூட்டாக வெற்றி பெற வேண்டிய அரசியல், சமூகச் முன்னேற்ற செயற்பாடுகளில் தோல்வியுற்றவர்களாகவே இருக்கிறார்கள். 
இயற்கையில் ஒரு கல அங்கியாக இருக்கும் போது மிக எளிமையாக இருக்கும் உயிர்கலம் பலகல அங்கியாக தோற்றம் பெறும் போது பல்வேறு சிக்கல் நிலையை அடைகிறது. இந்த சிக்கல் நிலைக்குள் ஒரு சம நிலை இல்லை என்றால் எப்போதும் நோயுற்றதாக இருக்கிறது. 
தனிமனிதன் ஒருவன் பட்டதாரியாகுவது அவனது தனிப்பட்ட திறன் சார்ந்தது; ஆனால் ஒரு சமூகத்தில் 90% நபர்கள் பட்டதாரியாக வேண்டும் என்றால் அதற்கு பலரது ஒன்றிணைந்த செயற்பாடு அவசியமானது. 
தனிமனிதன் அமைச்சரைக் கவனிக்க வேண்டிய வகையில் கவனித்து அதிகாரத்தைப் பெற்று தனது காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம்; ஆனால் ஒட்டுமொத்த சமூகமும் அரசியல் உரிமை பெறவேண்டும் என்றால் கூட்டிணைந்த அரசியல் ஞானம் உள்ள சமூகம் இருக்க வேண்டும்.
சமூகத்திற்குள் இருக்கும் சிக்கல் தன்மை சரியான சம நிலையில் பேணப்பட வேண்டும். 
அண்மையில் கேள்வியுற்ற செய்தி; மிகப் பெரிய சேவை செய்த சமூக நிறுவனம் ஒன்று அதிகாரப் போட்டியால் சிதைந்து போனது என்று; இது தமிழர்களுக்கு புதிய கதை அல்ல; சோழ, சேர, பாண்டியர் காலத்திலிருந்து தமிழர்களின் வரலாறு இது தான்! 
சர்வவல்லமை உள்ள இறைவன் போன்ற தலைவன் ஒருவன்; அவனுக்கு நிகர் எவருமில்லை என்று புகழ் பாடி அவனைக் கொம்பில் ஏற்றுவது; அவனது ஆற்றல் கண்டு பயமுறுவது; பிறகு அவருக்கு மட்டும் எப்படி இப்படிப் புகழ் வரலாம் என்று அசூயை உருவாக்குவது; அவர் என்னை மதிக்கிறார் இல்லை; அவருக்கு மட்டுத்தான் அதைச் செய்ய முடியுமா, சரியான பாடம் புகட்டுகிறேன் என்று அரசை -தலைவனைக் கவிழ்ப்பது! நானும் செய்து காட்டுகிறேன் என்று நன்றாகச் சென்றுகொண்டிருக்கும் திட்டத்தைக் கவிழ்ப்பது இதுதான் தமிழர்களின் அதிகாரப் போட்டியின் சுருக்க வரலாறு! 
Peter Kropotkin என்ற ரஷ்ய தத்துவாசிரியர் ஒரு அதிகாரமைய நிலவுடமைக் குடும்பத்தில் பிறந்தவர்; அரசின்மை - Anarchism என்ற ஒரு அரசறிவியல் கோட்பாட்டினை முன்மொழிந்தார். இதன் படி அதிகாரப்படி நிலைகள் அற்ற தேவையற்ற நிறுவன அமைப்புகளை உருவாக்காமல் ஒருங்கிணைந்து செயல்படுதல் என்ற தத்துவத்தை முன்மொழிந்தார். இதன் படி ஒரு சமூக நோக்கத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து இலக்காக செயற்பட வேண்டும்; ஆனால் அதிகாரங்களை ஒரிடத்தில் குவித்து தேவையற்ற பூசல்களை உருவாக்கக் கூடாது. 
இன்றைய தமிழ் சமூகத்தின் தேவையும் இதுதான்! 
ஒவ்வொருவரும் தமது அக சந்தோஷத்திற்காக, சமூக முன்னேற்றத்திற்கான தனது பங்களிப்பு, தானும் சமூகத்திற்கு நல்லது செய்தேன் என்ற அக உந்தலுடன் சமூக நிறுவனங்கள் பல உருவாக்கப்பட்டாலும் தனித்தனியே ஒவ்வொருவரும் ஒருதிட்டம், இன்னொரு திட்டம் என்று ஒருவித ஒத்திசைவு இன்மையை ஏற்படுத்தாமல், அனைவரது உழைப்பும் சமூகம் கூட்டாக முன்னேற வேண்டும் என்ற இலக்காக இருக்க வேண்டும். இதில் எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற முனைப்பு, எனது கட்டுப்பாட்டில்தான் அனைத்தும் இருக்க வேண்டும் என்ற நினைப்பு, அசூயை என்ற மற்றவர் நல்லது செய்யும் போது ஏற்படும் எமக்கு ஏற்படும் கலக்கம் இவைகள் அற்ற உயர்ந்த மனிதர்களாக ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு உதவேண்டும். 
சித்த மருத்துவத்தில் வாயு என்ற பிராணனே உயிர் சக்தி; இந்த உயிர்சக்தி தகுந்த அளவில் உடல் எங்கும் தங்காமல் ஓடிக்கொண்டிருந்தால் அவை உயிரைக் காக்கும் சக்தி; எங்காவது தங்கினால் வாதம் - இதை தோஷம் அல்லது குற்றம் என்று சொல்லுவார்கள்; இதையேதான் Peter Kropotkin அதிகாரம் ஓரிடத்தில் குவியாமல் Anarchism ஆக சமூக அமைப்பு இருக்க வேண்டும் என்று கூறுகிறார். 
பொன்னியின் செல்வனை ஆனந்தித்துக் கொண்டாடும், ஹீரோயிசத்தை அரசியல் தலைமையாக நம்பும் தமிழர்கள் இப்படியான அதிகாரமையம் அற்ற அனைவரும் முன்னேறக்கூடிய சமூக அமைப்புகளை உருவாக்கும் ஆற்றல் உள்ளவர்களா என்பது சிந்திக்கப்பட வேண்டியதே!!!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...