குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, December 29, 2022

கல்வி முன்னேற்றத்திற்கான செயல் ஆராய்ச்சி Action Research for Educational Improvement

ஆசிரியருடைய, விரிவுரையாளருடைய பங்கு மாணவனுக்கு கற்பதற்கு, அவனுடைய கற்றல் திறனை விருத்தி செய்வதற்கு, அவன் தனது கல்வியில் வளர்வதற்கு உதவி செய்வது!
எமது ஆய்வுகளின் படி ஒரு பிரச்சனையை ஆய்வு நோக்கில் அணுகி அதற்குரிய தீர்வினை அனைவருமாக ஒன்று பட்டு பாடசாலைக்கு தகுந்த உதவிகளைச் செய்து முன்னேறிச் செல்வோம் என்பதை விட அதிபரிற்கு அழுத்தம் கொடுத்தல், அதிபர் என்னை மதிக்கிறாரா, அப்படியில்லை என்றால் அதற்கு சரியான பாடம் புகட்டுகிறேன் என்ற சமூகத் தலைமைகளும் ஆசிரியரைக் குறை சொல்லும் பெற்றோர்களும், பெறுபேறுகள் வந்தவுடன் வாயிற்கு அவல் கிடைத்தது என்று விமர்சிக்கும் சமூகமாகவே நாம் இருக்கிறோம். 
கல்வியல் பிரச்சனைகளை நுணுக்கி ஆராய்ந்து அதற்குரிய உண்மைக் காரணத்தைக் கண்டு அதற்குரிய தீர்விற்குள் செல்லும் ஒரு பொறி முறையை நாம் உருவாக்குவதில்லை !
இதற்குரிய ஒரு முறை action research, இதை நாம் "செயல் ஆராய்ச்சி" என்று மொழிபெயர்க்கலாம்; தான் செய்யும் செயல் தகுந்த பலனைத் தருகிறதா? அப்படியில்லாவிட்டால் அதற்குரிய காரணம் என்ன? என்பதை ஆராயும் ஒரு முறை;
செயல் ஆராய்ச்சி என்பது ஆய்வு முறையின் ஒரு வடிவமாகும், தற்போது ஆய்வு முறை என்பது முனைவர் பட்டம் பெறுபவர்கள் மாத்திரம் செய்து, பட்டத்திற்காக செய்யப்படுவது என்றும், பல்கலைக்கழகங்களில் தமது பேராசிரியர் பதவியிற்கு புள்ளிகளுக்காக செய்வது என்ற போக்கிலேயே அனைவரும் செயற்படுகிறார்கள்; ஆனால் செயல் ஆராய்ச்சி என்பது ஒரு பிரச்சனையை சரியான தர்க்க ரீதியில் அணுகி அதற்குரிய தீர்வினை கண்டுப்பிடித்து பிரச்சனையைத் தீர்க்கும் அணுகு முறையைக் கொண்டது. 
இது எந்த ஒரு செயலையும் செய்பவர்கள் தங்கள் வேலையை விசாரிக்கவும் மதிப்பீடு செய்யவும் உதவுகிறது. அவர்கள், ‘நான் என்ன செய்கிறேன்? நான் என்ன மேம்படுத்த வேண்டும்? அதை நான் எப்படி மேம்படுத்துவது?’ என்ற சிந்தனையுடையவர்களாக இருக்க வேண்டும். 
இந்த அடிப்படைப் பண்பு இல்லாமல் பிரச்சனைகளை தமது குறைகளாகப் பார்ப்பவர்களும், தம்மைக் குற்றம் சாட்டிவிடுவார்கள் என்று நினைப்பவர்களும், ஆய்வுப் பண்பு இல்லாதவர்களும் ஆசிரியர்களாக, அதிபர்களாக தமது தொழிலைத் தேர்ந்தெடுத்தால் அவர்களால் கல்வித்துறையில் முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை. 
ஆகவே செயல் ஆராய்ச்சிப் பண்பினை கல்வித்துறைக்குள் உள்வாங்கி செயற்படுவது அவசியம். 
செயல் ஆராய்ச்சிப் பண்புகள் உடைய ஒரு ஆசிரியர், விரிவுரையாளர் கீழ்வரும் கேள்விகளைக் கேட்டு அதற்குரிய சரியான பதிலையும், தீர்வினையும் செய்யக்கூடியவர்களா இருக்க வேண்டும். அவர்களது செயல் ஆராய்ச்சியினைத் தொடங்க கீழ்வரும் கேள்விகளைக் கேட்க ஆரம்பிக்க வேண்டும். 
எனது விரிவுரைகளுக்கு/வகுப்பிற்கு மாணவர்கள் ஏன் வருவதில்லை?
மாணவர்கள் ஏன் படிக்கவில்லை?
எனது மாணவர்களை உற்சாகப்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்?
மாணவர்கள் தங்கள் எழுத்தில் மேலும் பகுத்தாய்வு செய்ய நான் என்ன செய்ய வேண்டும்?
கோட்பாட்டை அவர்களின் நடைமுறையுடன் இணைக்க மாணவர்களுக்கு நான் எவ்வாறு உதவுவது?
எனது மாணவர்கள் பேசாதபோது எனது கருத்தரங்குகளில் என்ன தவறு நடக்கிறது?
மாணவர்கள் ஏன் நூலகத்தைப் பயன்படுத்துவதில்லை?
தக்கவைப்பு மற்றும் முன்னேற்ற விகிதம் ஏன் குறைகிறது?
எனது விரிவுரை பாணியை மேலும் அணுகக்கூடியதாக மாற்ற நான் என்ன செய்ய வேண்டும்?
இவையெல்லாம் எமது கேள்விகளாக இருந்தால் நாம் கட்டாயம் செயல் ஆராய்ச்சியில் இறங்க வேண்டிய தருணம் இது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...