குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, December 26, 2022

தலைப்பு இல்லை

இன்று மாத்தளை பிரம்ம குமாரிகள் அமைப்பின் கிளையில் அதன் தேசிய இணைப்பாளர் சகோதரர் திரு B. K கணேஷ், மற்றும் மாத்தளையின் ஊர்ப் பெரியவர்களில் ஒருவரான திரு. சிவஞானம் ஐயா அவர்கள் இருவரின் தலைமையில் ஒரு கலந்துரையாடல்; ஊர்ப் பெரியவர்கள் , திரு சந்திரசேகரன் ஐயா அவர்களும், மற்றும் சட்டத்தரணி மணிவண்ணன் அண்ணா, சுவர்ண ஸ்வரங்கள் அமைப்பின் இயக்குனர் ஜெயபிரகாஷ், மாத்தளை சைவமகா சபைத் தலைவர் மாத்தளை கவி, ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தர்மகர்த்தா சபையினர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். 
இந்தக் கலந்துரையாடலின் நோக்கம் மனதின் ஆற்றலை ஆன்மீகப்பயிற்சியின் ஊடாக எப்படி சமூக முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவது என்பதாகும். இதுபற்றிய ஒரு விளக்கத்தை பிரம்மகுமாரி அமைப்பின் சிரேஷ்ட சகோதரர் திரு நந்தக்குமார் அவர்கள் தந்தார். 
மாத்தளை நகர் என்பது நீண்ட ஆழமான தமிழ் கலாச்சார பண்பாட்டினைக் கொண்ட நகர்; எமது சமூகத்தின் ஆன்மீக விழுமியம் கொண்ட ஒரு சமூகமாகும். எமது சமூக இணைப்புப் புள்ளியாக மாத்தளை முத்து மாரியம்மன் தேவஸ்தானம் விளங்குகிறது. மேலும் சமூக அக்கறையுடன் இயங்கும் பல்வேறு குழுக்கள் உடைய ஒரு சமூகம். 
இவற்றை இணைத்து எல்லோரும் ஒரு சமூக முன்னேற்றம் என்ற ஒரு திசையில் பயணிக்க வைப்பதற்கு என்ன செய்யலாம் என்று உரையாடப்பட்டது. 
சந்திரசேகரன் ஐயா தொடர்ச்சியான சமூக அறிவூட்டல், சத் சங்கத்தின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். 
திரு ஜெயபிரகாஷ் அவர்கள் சமய நிறுவனங்கள் கல்வி, பண்பாட்டிற்கான தலைமைத்துவத்தை தரவேண்டிய அவசியத்தை முன்மொழிந்தார்; இதை முத்துமாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் சபைத் தலைவர் வரவேற்று ஏற்றுக்கொண்டார். 
சட்டத்தரணி மணிவண்ணன் அண்ணன் அவர்கள் குடும்பக் கட்டமைப்பினை வழி நடத்தும் அறிவூட்டல் அவசியத்தினையும், மாத்தளை தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை தனது சட்டத்தரணி தொழில் அனுபவத்தினூடக பகிர்ந்துகொண்டார். 
சைவமகா சபைத் தலைவர் மாத்தளைக் கல்வி அவர்கள் சைவமகா சபை எத்தகைய செயற்திட்டத்தை முன்னெடுக்கலாம் என்பது பற்றிக் கூறினார். 
நான் மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் இளைய சமுதாயத்திற்கு எப்படியான வழிகாட்டலைச் செய்கிறது என்பதைப் பற்றிய யோசனைகளைப் பகிர்ந்து கொண்டேன்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...