குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, May 25, 2022

Sex Transmutation - காமத்தின் உருமாற்றம்

 

நெப்போலியன் ஹில் இனது வெற்றிக்கான 13 விதிகளில் புரிந்துகொள்ள மிகவும் குழப்பமானது sex transmutation எனப்படும் காமசக்தியின் உருமாற்றம்.

சித்தர் இலக்கியங்களில் விந்து விட்டான் நொந்து கெட்டான் என்று சொன்னார்கள் என்று அரைகுறைச் சித்தவைத்தியர்களும், வாசியோகம் பழகுகிறோம், சித்தர் வழி நிற்கிறோம் என்று இளைஞர்களைக் குழப்பும் யோக ஆசான்களும் இருக்கிறார்கள்.

ஆண், பெண் இருவரும் பருவ வயது அடைந்தவுடன் உடல் படைப்பாற்றலைப் பெறுகிறது. இந்தப் படைப்பாற்றலின் முதல் தூண்டல் உடலில் ஏற்படும் போது அதை சரியாக உருமாற்றத் தெரியாவிட்டால் அவனது மனோ சக்தி அழிந்து போய்விடுகிறது.

இது எப்படி என்றால் பாலை உறை குத்தினால் தயிராகிறது; இந்தத் தயிரில் இருந்து வெண்ணெய் வெளிப்படும் நிலை உடலில் பாலியல் இச்சைகள் தூண்டும் நிலை. வெண்ணையை அதிக காலம் வைத்திருக்க முடியாது, கெட்டுவிடும்; அதுபோல் படைப்பாற்றல்  உடல் இச்சையாக வைத்திருந்தால் அது அப்படியே வீணாகிவிடும். ஆகவே இதை உயர்ந்த மனோசக்தியாக மாற்ற வேண்டும். வெண்ணையை உருக்கி முறுக்கி நெய்யாக்கினால் பல நூறுவருடம் கெடாமல் இருக்கும். இந்த நெய் கடையும் வேலையை மனம் - உடல் - பிராணன் தொகுதிக்குள் சரியாகச் செய்வதையே காமத்தின் உருமாற்றம் என்கிறோம்.

இப்படி மனதிற்கு படைப்பாற்றலை உருவாக்கும் பயிற்சி கொடுக்கப்படாவிட்டால் உடல் தனது இயல்பான வழியில் காம இச்சையில் இட்டுச் செல்லும். இப்படிச் செல்லும் ஆற்றலினால் மனிதன் உயர்ந்த மனம் சார்ந்த கல்வி, கலைகள், அறிவியல் எதிலும் சாதிக்க முடியாது.

பாரம்பரிய வழியில் ஆயகலைகள் 64 இல் சிலதை முறையாகக் கற்க படைப்பாற்றலை நுண்மைப்படுத்தும் சக்தி ஒருவனுக்கு இயல்பாக வரும்! நுண் கலைகள் என்பதன் அர்த்தம் அவற்றைப் பயின்று சித்தி பெற மனம் நுண்மையடைய வேண்டும் என்பதாகும்.

ஆகவே இந்த உடல் உருவாக்கும் படைப்பாற்றலை மனதிற்கு உருமாற்றி அதீத படைப்பாற்றலை உருவாக்குவதையே நெப்போலியன் ஹில் sex transmutation என்று குறிப்பிடுகிறார்.

காமத்தை வெறுமனே உடல் தேவைகளுக்காக மாத்திரம் பாவிக்காமல் மனதிற்கு உயர்ந்த அனுபவத்தை உருவாக்கும் அனுபவத்தையே சிருங்காரம் என்று சொல்லப்படுகிறது.

உபாசனை மார்க்கத்தில் காம தேவ உபாசனை, காம ஆற்றலை மனதிற்கு உருமாற்றும் ஆற்றலை, அறிவைத் தரும்.

இதைத் தகுந்த பயிற்சிகளின் மூலம் மனதின் பல்வேறு தளங்களுக்கு உருமாற்றி தகுந்த படைப்பாற்றலைப் பெறலாம்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...