குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 06, 2022

தலைப்பு இல்லை

 

நேற்று நீண்டகாலத்திற்கு பிறகு சரியாக 02 வருடங்களுக்கு பிறகு விவசாயக் களப்பணி! சிறு விவசாயிகளைச் சந்தித்து அவர்களுக்குரிய அறிவுசார் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்பது திட்டம்!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் "Link to the community" திட்டத்தினை முன்னெடுக்கும் Dr. Nishānthan Ganeshan அழைத்துச் சென்றார்! இந்தப் பயணம் ஏற்படுத்திய மலையகத்தின் பெருந்தோட்ட மக்கள் பற்றிய சிந்தனை.

மண்ணை டொலராக்கி உலக பொருளாதாரத்தை இலங்கையுடன் இணைக்கத் தெரிந்த உழைப்பாளி மக்களை ஏழைகளாக வைத்திருக்கும் காரணிகள் எவை?

அவர்களுக்கு தாமாக தமது சுய பொருளாதாரத்தை உருவாக்கத் தேவையான கல்வியறிவு, பொருளாதார அறிவு, உழைக்கும் உழைப்பு முழுமையாக அவர்களுக்கே கிடைக்கும்படி அவர்களது உழைப்பைத் திருடாத ஒரு பொருளாதாரக் கட்டமைப்பு.

உழைப்பாளிகளை சோம்பேறியாக்கும் இலவசங்கள், உடல், மன உறுதியை அழிக்கும் மதுபானம், போதைப் பொருட்கள் இவை ஊடுருவாத சமூக அமைப்புகள்.

மலையகத்தின் ஒருபகுதியில் பணக்கார இஸ்லாமிய பெரியவர் பல தோட்டங்களை வாங்கி ஏழை பெருந்தோட்ட மக்களுக்கு இலவசமாக/சிறிய தொகையாக காணித்துண்டுகள் வழங்கியுள்ளார்.

பணக்கார அரசியல்வாதிகள், மலையகத் தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் முதலிடாமல் இப்படியான திட்டங்களை முன்னெடுக்கலாமே!

நாம் ஏன் இப்படியான திட்டங்களை முன்னெடுப்பதில்லை என்றால் ஒவ்வொரு அரசியல்வாதிக்குள்ளும் உண்மையான தீர்வினை தருவதை விட தம்மை ஹீரோக்களாகக் காட்டும் அல்லது அந்த மக்களை பணத்தில், அதிகாரத்தில், கல்வியில் அவர்களை விட தாம் உயர்ந்தவர்கள் என்று உள்ளூர நான் தலைவன் நீ அடிமை என்ற எண்ணம் உள்ளே இருப்பதுதான்!

சமூகம் எப்போது முன்னேறும்?

நான் பெற்றதை விட நீ அதிகமாகப் பெறவேண்டும் என்ற மனமுள்ள தலைவர்கள் உருவாகும் போது!

என்னை விட எனது பிள்ளை உயர் நிலையில் இருக்க வேண்டும் என்ற மனநிலை பெற்றோரிற்கு இருக்கும் போது!

என்னை விட எனது மாணவன் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்ற மனநிலை ஆசிரியர்களுக்கு ஏற்படும் போது!

நான் பட ஹீரோவாக எனது மக்கள் மனதை மயக்கி தலைவனாக்காமல் எனது மக்களுக்குரிய கல்வியறிவு, பொருளாதாரச் சுதந்திரத்திற்கான வாய்ப்பு இவற்றை உருவாக்கும் தலைவனாக நான் இருக்க வேண்டும் என்று அரசியல்வாதிக்கு ஞானம் பிறக்கும் போது!

உபரியாக இருக்கும் பணத்தை பதுக்காமல், ஏழைமக்கள் வாழ்க்கைத் தரம் உயர என்ன திட்டங்களில் நான் முதலிடலாம் என்று தொழில் முனைவோன் சிந்திக்கத்தொடங்கும் போது!

யாரிடமும் கையேந்தாமல் நாம் எமக்குரிய வாய்ப்புகளை நாமே உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்படும் போது!

உளச்சுத்தியுடன் நமக்கு இருக்கும் பணம், பட்டம், பதவிகள் போதும், மற்றவர்களை உயர்த்துவதற்கு நாம் பாடுபட வேண்டும் என்ற எண்ணம் எமக்குள் ஆழமாகச் செயல் கொள்ளும் போது!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...