குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, May 22, 2022

மறையியலின் இரண்டு பிரதான சிந்தனை முறை

 

Two basic thoughts of occultism

மறையியல் என்றால் மனம் முதலான அகக்கருவிகளை நுண்மையாக்கி இந்த பிரபஞ்சத்தினைப் பற்றி நுண்மையான அறிவினைப் பெறும் வழி என்பதை ஏற்கனவே வரையறுத்திருக்கிறோம்.

ஒருவன் மறையியலின் படி அறிவினைப் பெறவேண்டுமானால் இரண்டு அடிப்படை சிந்தனைப் போக்கு அவனிற்கு இருக்க வேண்டும். இந்த இரண்டு எண்ணங்களும் அவனுக்கு சரியான முறையில் இருக்குமாக இருந்து, நம்பிக்கையுடன் மறையியல் பயிற்சியில் ஈடுபடுபவனாக இருந்தால் அவன் பல சூக்ஷ்ம உண்மைகளை அனுபவிக்கக் கூடியவனாக இருப்பான்.

முதலாவது எமது கண்களுக்குத் தெரியும் உலகத்திற்கு மறைவாக, புலன்களுக்கு அப்பாற்பட்ட நுண்மையான உலகம், இயக்கம் ஒன்று இருக்கிறது என்ற உறுதியான நம்பிக்கை. அதன் அடிப்படையில்தான் பௌதீக உலகம், செயல்கள் தோற்றம்பெறுகிறது. நாம் புலன்வழி அதிகம் செல்லும் போது இந்த நுண்மையான, ஆழமான சூக்ஷ்ம உலகை அறியும் திறனை இழக்கிறோம் என்பதும்,

இரண்டாவதாக தனது அந்தக்கரணங்கள் (மனம், புத்தி, சித்தம் ஆங்காரம்) ஆகியவற்றினை நுண்மைப்படுத்தி திறன்களை வளர்ப்பதன் மூலம் இந்த மறைவான, நுண்மையான உலகத்திற்குள் ஊடுருவி அறிவினைப் பெற முடியும் என்பது.

பதஞ்சலி யோகத்தில் சித்த விருத்திகளை அடக்குவதன் மூலம் உருவாகும் சமாதி நிலையால் மனம் நுண்மையாகி ருதம்பரா பிரக்ஞை என்ற பேரறிவு உருவாகுவதாகக் கூறுகிறார்.

காயத்ரி சாதனை தொடர்ச்சியான காயத்ரி ஜெபத்தினால் பலவிதமான நுண் ஆற்றல்கள் மனதிற்கு கிடைப்பதாக கூறுகிறது.

ஹடயோக பிரதீபிகை தொடர்ச்சியான ஹடயோக அப்பியாசத்தால் சாதகன் உன்மணி அவஸ்தையில் லயித்து மனோன்மணி நிலை பெற்று அற்புத சித்திகளைப் பெறுகிறான் என்று சொல்லப்பட்டுள்ளது.

கிரகங்களை தினமும் உபாசிக்கும் ஜோதிடனுக்கு கிரகப்பிரபாவம் நுண்மையாக ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளை அறியும் உணர்வு வாய்க்கிறது.

ஒரு சித்த மருத்துவன் ஸ்தூல உடலில் உருவாகியிருக்கும் நோயிற்கு சூக்ஷ்ம உடலில் பிராணன் ஓடும் ஓட்டத்தின் நடையினை அறிந்து, காரணசரீரத்தில் முத்தோஷங்களின் நிலையறிந்து சிகிச்சை செய்ய வேண்டும்.

இவையெல்லாம் எமது மனம் ஸ்தூலத்திலிருந்து பயிற்சியால் நுண்மையாகி சூக்ஷ்மத்தைப் பார்க்கும் ஆற்றல் பெறுகிறது என்கிறது மறையியல் விதிகள்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...