குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, May 29, 2022

தலைப்பு இல்லை

 

வைகறையில் துயிலெழுந்தால் கண்கள் பிரகாசமாக இருக்குமாம்.

கடந்த சில வருடங்களாக அதிகாலை 0415 இற்கு எழுந்து உலகெங்கும் உள்ள நல்ல உள்ளங்களோடு இணைந்து உயர்ந்த விடயங்களைக் கற்கும் பாக்கியம் கொரோனா தந்தது.

அதிகாலை எழுந்தால்,

புத்தியதற்குப் பொருந்து தெளிவாக்கும்;

சுத்தநரம்பினாற் தூய்மையுறும்- பித்தொழியும்

தாலவழி வாத பித்தம் தத்தநிலை மன்னும்; அதி

காலைவிழிப்பின் குணத்தைக் காண்

புத்தி தெளிவாக இருக்கும்; உடல் நரம்புகள் தூய்மையுறும்; மனக்கவலைகள் நீங்கும்; வாத, பித்த முதலான முத்தோஷங்கள் சமப்படும்; இவையெல்லாம் அதிகாலை விழிப்பினால் உடலிற்கும் மனதிற்கும் கிடைக்கும் நலம்!

இதை பிரம்ம மூகூர்த்தம் என்று குறிப்பிடுவது ஏன்? இது இறைவனுக்குரிய நேரமாக வரையறுக்கப்படுகிறது. சூரியன் உதிக்கும் முன்னர் இருக்கும் ஒரு முகூர்த்த நேரம் - அண்ணளவாக ஒன்றரை மணி நேரம் பிரம்ம முகூர்த்தமாக சொல்லப்படுகிறது.

யோக தத்துவத்தில் நாம் மூச்சு உள்ளிழுக்கும் போது பிராணன் எனப்படும் நுண்மையான உயிர்சக்தி ஆறு ஆதாரங்களில் நிறைவதாகவும் இது மூலாதாரம் வரை செல்லும் நேரமாகவும் பிரம்ம முகூர்த்தம் சொல்லப்படுகிறது.

இஸ்லாமியர்கள் வஜ்ராசனத்தில் இருந்து இறைவனை நினைத்து மூச்சினை மூலாதாரத்துடன் இணைத்து இந்த நேரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆகவே நாம் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து எம்மைவிட உயர்ந்த ஆற்றலுடன் தொடர்புபடுத்தும்போது எமது ஸ்தூல உடல் தனக்கான சூக்ஷ்ம, காரண உடல்களிலிருந்து முழுமையான பிராண வலிமையினைப் பெறுகிறது.

இந்த நேரத்தின் அதியுச்ச பலனைப் பெற

1) இறைவனை நினைத்தல்

2) அறிவினைப் பெறக் கற்றல்

ஆகிய இரண்டும் பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கு மேல் உடல் உற்சாகமாக இருக்கும். இரவில் தாமதமாக நித்திரைக்குச் செல்பவர்கள் அதிகாலையில் துயிலெழுந்து பகலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...