குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, May 22, 2022

யோகசோதிடமும் விதியை வெல்லும் காயத்ரி சாதனையும்

 

சிறுவயது முதல் மறையியல், மனோ சக்தி ஆகியவற்றில் ஆர்வம் இருப்பதால் சோதிடமும் கற்றேன். எனது குருவின் குருவான ஸ்ரீ கண்ணைய யோகியார், அவர் தந்தை குருசாமி சாஸ்திரியார் எல்லாம் பெரிய ஜோதிடர்கள். கண்ணைய யோகியார் கிரகங்களையும், பிராண காந்த அலைகளையும் வைத்து ஜோதிடம் கணிக்கும் முறையை ஏற்படுத்தியிருந்தார். அதை ஜீவகாந்த ஜோதிடம் அல்லது யோக ஜோதிடம் என்றும் சொல்வார்; ஜோதிடப் பாடங்கள் எழுதியும் பயிற்றுவித்திருக்கிறார்.

"கிரகங்கள் மனிதனது சித்தத்தை தூண்டியே கர்மங்களை செயற்படுத்துகிறது; யோக சாதனையால் சித்த விருத்திகளைக் கட்டுப்படுத்தினால் கிரகப் பிரபாவங்களின் தூண்டலைத் தடுக்கலாம்" என்பது கண்ணைய யோகியாரது உபதேசங்களில் ஒன்று; ஆகவே யோகத்தில் இப்படி நடக்கும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு, பலன் சொல்லி மக்கள் மனதைக் குழப்புவதற்கு ஜோதிட சாஸ்திரம் பயன்படுவதில்லை!

சோதிட விதிகளின் மூலம் ஒருவன் துல்லியமாக தான் பூர்வ ஜென்மத்தில் செய்த கர்மங்களின் கணக்கினை கணக்கிட்டுக் கொண்டு, பிறகு திசாபுத்தி, கோட்சாரம் நடக்கும் போது தனது சித்தத்தை எந்தக்கிரகங்கள் தூண்டி தனது விதியினைச் செயற்படுத்தும் என்பதைத் தெரிந்து அதற்கந்த கிரக சாதனைகளைச் செய்வதன் மூலம் எமது கர்ம பிரபாவங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம்; இறையருளும் சாதனை மூலம் இச்சாசக்தியையும் பெற்றிருந்தால் கிரகங்கள் சித்ததைத் தூண்டும் கர்ம பிரபாவங்களை வெல்லலாம் என்பது யோக ஜோதிடத்தின் அடிப்படை.

காயத்ரி தேவியினுடைய உபாசனையில் சூரியனின் ஆத்ம சக்தி தேவியாக இருக்க மற்றைய எட்டு கிரகங்களும் அஷ்டமாவரணமாக வரும். காயத்ரி உபாஸனை செய்பவன் நவக்கிரக சாதனை மூலம் தனது கிரகப் பிரபாவங்கள் மூலம் வரும் இன்னல்களைத் தடுக்கலாம்.

காயத்ரி சாதனை கிரகபிரபாவங்களை சீர்ப்படுத்துவதில் ஒரு அரிய முறை.

தினசரி காலையில் காயத்ரி சாதனையுடன் நவக்கிரக சாதனைகளும் நடைபெறுகிறது; ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...